search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணன்கோவில்"

    • அருந்ததியர் இன மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள்
    • அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்படவில்லை

    நாகர்கோவில் : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் கேரளா சமஸ்தானம் இருந்தபோதிலிருந்து அருந்ததியர் இன மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்படவில்லை. அதனை கேட்டு அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். அவர்களது கோரிக் கையை அரசு ஏற்றுக் கொள்ளாத நிலையில் கடந்த 2-ந்தேதி வடசேரி அருகே அருந்ததியர் காலனி முன்பு போராட்டம் நடத்தி னர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.எனவே அரசும், மாவட்ட நிர்வா கமும் அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கிருஷ் ணன்கோவில் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் போராட்டத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • இந்த நேரத்தில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது.

    நாகர்கோவில்:

    பார்வதிபுரம் மின் வினியோக உதவி செயற்பொறியாளர் ரமணி பாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடசேரி, கிருஷ்ணன் கோவில், ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மின் வினியோக பிரிவுகளில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கிருஷ்ணன்கோவில், திருப்பதி நகர், பெருவிளை, மேல பெருவிளை, கீழ பெருவிளை, கீழ ஆசாரிபள்ளம், மேல ஆசாரிபள்ளம், பாம்பன் விளை, வேம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேலும் ஆசாரிபள்ளம் மின் வினியோக பிரிவில் நாளை மறுநாள் (8-ந்தேதி) பராமரிப்பு பணி நடைபெறுவதால் தம்மத்துகோணம், அனந்தன்நகர், எறும்புகாடு உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் வருகிற 9-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை,

    மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்கவிளை புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரை விளை, பருத்தி விளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு , சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது. மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றும் பணிகளும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×