search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களுக்கு"

    • அருந்ததியர் இன மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள்
    • அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்படவில்லை

    நாகர்கோவில் : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் கேரளா சமஸ்தானம் இருந்தபோதிலிருந்து அருந்ததியர் இன மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்படவில்லை. அதனை கேட்டு அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். அவர்களது கோரிக் கையை அரசு ஏற்றுக் கொள்ளாத நிலையில் கடந்த 2-ந்தேதி வடசேரி அருகே அருந்ததியர் காலனி முன்பு போராட்டம் நடத்தி னர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.எனவே அரசும், மாவட்ட நிர்வா கமும் அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கிருஷ் ணன்கோவில் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் போராட்டத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
    • காணி இன மலைவாழ் மக்களுக்கான புதிய வீடு கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எயிட் இந்தியா சார்பில் மலைப்பகுதியில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கும் நிகழ்ச்சி பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சிலாங்குன்று மலைப் பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, காணி இன மலைவாழ் மக்களுக்கான புதிய வீடு கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணி களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் வசிக்கும் காணி பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ஆகியோரின் பரிந்துரையின்படி விலையில்லா வீட்டு மனைப்பட்டா அதிக அளவில் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் உலக வன நாள் தினமான மார்ச் 21-ந்தேதியன்று பேச்சிப்பாறை ஊராட்சி, சிலாங்குன்று பகுதியில் இதுநாள் வரை மின்வசதி இன்றி வசிக்கும் 4 காணி மலைவாழ் குடும்பங்களை சேர்ந்த பயனாளிகள் உட்பட 9 குடும்பங்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அன்றைய தினம் சிலாங்குன்று மலைப்பகுதியில் வசித்து வரும் காணி பழங்குடியின மக்கள் தாங்கள் தங்குவதற்கு புதிய வீடு மற்றும் அடிப்படை தேவையான தண்ணீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவைகளை நிறை வேற்றி தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். தமிழ்நாடு அரசானது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், அவர்கள் தங்குவதற்கான வீடுகள் வழங்க பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில் சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் 2 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் 2 குடும்பத்தினருக்கு வீடு கட்டுவதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்படுமென தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுடன் கலெக்டர் ஸ்ரீதர் கலந்துரையாடினார்.

    முன்னதாக, பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மணலோடை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி வளாகத்தினை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார்.
    • மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பள்ளிப்பாளையம்:

    மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் உள்ள ஜனதா நகர், சந்தப்பேட்டை, அக்ரஹாரம், நாட்டா கவுண்டன்புதூர் மற்றும் பல பகுதிகளில் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்த வீடுகளில் வசித்து வந்த மக்கள் முகாமில் தங்கு வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை நேற்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து நிவாரணம் பொருட்கள் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், பள்ளிப்பா ளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஒன்றிய செயலாளர் செந்தில், பேரவை செயலாளர் சுப்பிரமணி, மற்றும் ஏராள மானோர் உடன் இருந்தனர்.

    ×