search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியின"

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது.
    • நிகழ்ச்சியில் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.2 லட்சத்தை பயனாளிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

    நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த், பழங்குடியினர் இயக்குனர் அண்ணாதுரை, வன அதிகாரி இளையராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி கனகராஜ், தாசில்தார் கோலப்பன், மாவட்ட திட்ட அதிகாரி பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.2 லட்சத்தை பயனாளிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். மேலும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கறவை மாடு வளர்க்க மானியத்துடன் கூடிய கடனுதவி 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.7 லட்சமும், தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 11 ஆயிரத்து 59 வழங்கப்பட்டது.

    வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித்தொகையாக 2 பேருக்கு ரூ.6¼ லட்சமும், பழங்குடியினர் நல வாரியத்தில் ஈமச்சடங்கு உதவி தொகையாக ஒருவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் பொன்மனை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 16 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டையையும், இரணியல் பேரூராட்சியில் 9 தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டையும், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

    கேலிச்சித்திரம் வரைதல் போட்டியில் மாநில அளவில் 3-ம் இடம் பெற்ற பத்துகாணி அரசு பழங்குடி யினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவி அகல்யா பிரசாத்திற்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. திருமங்கலத்தில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டென்னிஸ் பந்து போட்டி யில் முதலிடம் பெற்ற பேச்சிப்பாறை பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு சுழல் கோப்பையை அமைச் சர் கயல்விழி செல்வராஜ் வழங்கி கவுரவித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், எந்த ஒரு சாமானிய மக்களும், எந்த ஒரு அடையாளத்தின் அடிப்படையிலும் அவர்கள் புறந்தள்ளி விடக்கூடாது. அனைவரையும் ஒன்றிணை. அதாவது சமூக ரீதியாக யாரையும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்ற அரசாக இருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் வள்ளலாக வாரி வழங்கி வருகிறார். பின்தங்கிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார்.அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நலத்துறையின் திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். அடித்தட்டு மக்களின் கல்வி, பொருளாதாரத்தை முன்னேற்ற செய்வதே இந்த துறையின் நோக்கமாகும். இளைஞர்கள் சுய வேலை தொடங்குவதற்கு தாட்கோ மூலமாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றவுடன் பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்க மாநில ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மனித நேயமிக்க துறையாக இந்த துறை விளங்கி வருகிறது.மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்து என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஆய்வு செய்து அந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றார்.

    முன்னதாக தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று காலை கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் கோவளம் ரோட்டில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் அரசு பள்ளி மாணவிகள் விடுதியில் "திடீர்" ஆய்வுகொண்டார். அங்குள்ள சமையலறை மற்றும் விடுதி அறைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் அந்த விடுதி வளாகத்தில் மரக்கன்று களையும் அமைச்சர் கயல் விழி செல்வராஜ் நட்டார்.


    • கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
    • காணி இன மலைவாழ் மக்களுக்கான புதிய வீடு கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எயிட் இந்தியா சார்பில் மலைப்பகுதியில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கும் நிகழ்ச்சி பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சிலாங்குன்று மலைப் பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, காணி இன மலைவாழ் மக்களுக்கான புதிய வீடு கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணி களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் வசிக்கும் காணி பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ஆகியோரின் பரிந்துரையின்படி விலையில்லா வீட்டு மனைப்பட்டா அதிக அளவில் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் உலக வன நாள் தினமான மார்ச் 21-ந்தேதியன்று பேச்சிப்பாறை ஊராட்சி, சிலாங்குன்று பகுதியில் இதுநாள் வரை மின்வசதி இன்றி வசிக்கும் 4 காணி மலைவாழ் குடும்பங்களை சேர்ந்த பயனாளிகள் உட்பட 9 குடும்பங்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அன்றைய தினம் சிலாங்குன்று மலைப்பகுதியில் வசித்து வரும் காணி பழங்குடியின மக்கள் தாங்கள் தங்குவதற்கு புதிய வீடு மற்றும் அடிப்படை தேவையான தண்ணீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவைகளை நிறை வேற்றி தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். தமிழ்நாடு அரசானது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், அவர்கள் தங்குவதற்கான வீடுகள் வழங்க பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில் சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் 2 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் 2 குடும்பத்தினருக்கு வீடு கட்டுவதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்படுமென தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுடன் கலெக்டர் ஸ்ரீதர் கலந்துரையாடினார்.

    முன்னதாக, பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மணலோடை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி வளாகத்தினை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க பள்ளிகளில் முகாம் நடைபெற்றது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வி யாண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் 9, 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர்களுக்கான பிரிமெட்ரிக், போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் கட்டாய மாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விவரம் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், வங்கி கணக்கு நடப்பில் உள்ளதை உறுதி செய்திடவும், புதிய அஞ்சல வங்கி கணக்குகள் தொடங்க சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி கட்டணம் ஏதும் இல்லாமல் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோ ரின் தொலைபேசி எண் கொண்டு அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கிட அஞ்சல் அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இவ்வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×