search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிதிராவிடர்"

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது.
    • நிகழ்ச்சியில் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.2 லட்சத்தை பயனாளிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

    நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த், பழங்குடியினர் இயக்குனர் அண்ணாதுரை, வன அதிகாரி இளையராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி கனகராஜ், தாசில்தார் கோலப்பன், மாவட்ட திட்ட அதிகாரி பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.2 லட்சத்தை பயனாளிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். மேலும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கறவை மாடு வளர்க்க மானியத்துடன் கூடிய கடனுதவி 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.7 லட்சமும், தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 11 ஆயிரத்து 59 வழங்கப்பட்டது.

    வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித்தொகையாக 2 பேருக்கு ரூ.6¼ லட்சமும், பழங்குடியினர் நல வாரியத்தில் ஈமச்சடங்கு உதவி தொகையாக ஒருவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் பொன்மனை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 16 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டையையும், இரணியல் பேரூராட்சியில் 9 தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டையும், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

    கேலிச்சித்திரம் வரைதல் போட்டியில் மாநில அளவில் 3-ம் இடம் பெற்ற பத்துகாணி அரசு பழங்குடி யினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவி அகல்யா பிரசாத்திற்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. திருமங்கலத்தில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டென்னிஸ் பந்து போட்டி யில் முதலிடம் பெற்ற பேச்சிப்பாறை பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு சுழல் கோப்பையை அமைச் சர் கயல்விழி செல்வராஜ் வழங்கி கவுரவித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், எந்த ஒரு சாமானிய மக்களும், எந்த ஒரு அடையாளத்தின் அடிப்படையிலும் அவர்கள் புறந்தள்ளி விடக்கூடாது. அனைவரையும் ஒன்றிணை. அதாவது சமூக ரீதியாக யாரையும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்ற அரசாக இருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் வள்ளலாக வாரி வழங்கி வருகிறார். பின்தங்கிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார்.அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நலத்துறையின் திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். அடித்தட்டு மக்களின் கல்வி, பொருளாதாரத்தை முன்னேற்ற செய்வதே இந்த துறையின் நோக்கமாகும். இளைஞர்கள் சுய வேலை தொடங்குவதற்கு தாட்கோ மூலமாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றவுடன் பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்க மாநில ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மனித நேயமிக்க துறையாக இந்த துறை விளங்கி வருகிறது.மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்து என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஆய்வு செய்து அந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றார்.

    முன்னதாக தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று காலை கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் கோவளம் ரோட்டில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் அரசு பள்ளி மாணவிகள் விடுதியில் "திடீர்" ஆய்வுகொண்டார். அங்குள்ள சமையலறை மற்றும் விடுதி அறைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் அந்த விடுதி வளாகத்தில் மரக்கன்று களையும் அமைச்சர் கயல் விழி செல்வராஜ் நட்டார்.


    • ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க மானிய கடன் பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல், விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்து டன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக 100 பேருக்கும், கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டவும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் உறைவிப் பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைக்கவும் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியின ருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம், ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப் படும்.

    200 நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யின விவசாய தொழிலா ளர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்க லாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மதுரையில் ஆதி திராவிடர் நலக்குழு கூட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் சங்கர் சபாபதி, அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும், விடுதியில் உள்ள மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா தகுதியான பயனாளிகளுக்கு வழங்குதல் மற்றும் அரசு அலுவலர்கள் மீது பொய்யான தகவல்களை பரப்பும் விதமாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கோட்டூர்சாமி, தாட்கோ மேலாளர் ராஜேஸ்வரி, வட்டாட்சியர் தனலெட்சுமி, துணை வட்டாட்சியர் வீரக்குமார், கண்காணிப்பாளர் சேவியர் பால்ச்சாமி,நிர்வாகிகள் சங்கர் சபாபதி, அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.
    • விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம்.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடர்-பழங்குடியினர் 60 சதவீத மானியத்தில் பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டு திட்டங்களில் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டம் 2021-22 ம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புறக்கடையில் சிறிய அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.

    பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டம் 2021-22 ம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு அலகு அமைக்க 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4.20 லட்சம் மானியமும், புதிய மீன் வளர்ப்பு அலகு அமைத்து உள்ளீட்டு செலவினம் வழங்க 60 சதவீத மானியமாக அதிக பட்சம் ரூ.6.60 லட்சம் மானியமும் வழங்கப்படும்.

    மேற்காணும் மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் நல்ல தங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வளஆய்வாளர் (தொலைபேசி எண். 89037 46476 அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் எண்: 7-ம் தளம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638 011 தொலைபேசி எண்: 0424 2221912 யை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் ெதரிவித்துள்ளார்.

    • தேர்வு செய்ய உருவாக்க விடுதி மேலாண்மை அமைப்பு என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக் குழுவினரால்15.7.2023 அன்றைய தேதிக்குள் பரிசீலனை செய்யப்படும்.

    திருப்பூர் :

    2023 -– 2024ம் கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய உருவாக்க விடுதிமேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கை நடத்திட வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள்,வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறையிலுள்ள மாணவர் சேர்க்கைவிதிமுறைகளை பின்பற்றி புதிய மாணவர் சேர்க்கை நடத்திட ஏதுவாக திருப்பூர்மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி-கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும்மாணவ- மாணவிகள் 30.6.2023 வரையிலும் https://tnadw.hms.in என்கிறஇணையதளத்தில் நேரடியாகவோ சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இணைய வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவினரால்15.7.2023 அன்றைய தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு மாவட்டஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுவர் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது.
    • இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் மானி யத்துடன் கூடிய தொழிற் கடனுதவி பெறுவதற்கு, மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பரிந் துரை செய்யப்படுகிறது. அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனை வோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம். முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம்.

    வங்கி கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்திட்டத் தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். 18 முதல் 55 வயது குட்பட்டோர், உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை. வாகனங்களை முதன்மை யாக கொண்டு செயல் படுத்தக்கூடிய தொழிழ்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக் லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், ஜே.சி.பி, அழகு நிலையம், ஆம்பு லன்ஸ் சேவை, உடற் பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கு வோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    சுயமுத லீட்டில் தொழில் தொடங்கி னாலும், இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம். மேலும், கடலூர் மாவட் டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரில் வந்து அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கலாம்.
    • ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு தபால் துறையின் கீழ் செயல்படும் ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி இ-கேஒய்சி (விரல்ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.
    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

    கடலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு சென்னை தரமணியிலுள்ள மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. 2022 - ன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்டபடிப்பு ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு மேலும் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு , ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவிைனஞர் பட்டய படிப்பு மேற்கண்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். 10- வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட முழு நேர பட்டபடிப்பு பயில தேர்வு நடத்தப்படும். மேலும் நிறுவனத்தில் தாட்கோ மூலம் இலவசமாக சென்னையில் வழங்கப்படும். தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி-27.04.2023 இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற தாட்கோ இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • ஆதிதிராவிடர்-பழங்குடியின மக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • பொருளாதார கடன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நிலையான வளர்ச்சியே அரசின் முதன்மையான நோக்கம் என்பதை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடுகின்ற வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை திறம்பட செயல்படுத்தி வருகிறது.

    அதனடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்களை அனைத்து வகையிலும் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலம் மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்கள் மட்டும்), நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்), தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தில் பயன்பெற்ற கலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணாதேவி கூறும்போது, நான் தினசரி விவசாயக் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்ககூடிய வருவாயினை கொண்டு, எனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் தமிழக அரசின் தாட்கோவின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அறிந்து இளைஞர்களக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சொந்தமாக டிராக்டர் வாங்க இணையதளம் மூலம் விண்ணப்பித்தேன்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விண்ணப்பத்தினை எனது இருப்பிடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு அதன் பின் டிராக்டர் வாங்கிட ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் கடனுதவி வழங்கினர். இதற்கு அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கிடைத்தது. இதனைக் கொண்டு மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் வருவாய் ஈட்டி, வங்கிக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் செலுத்தி வருகிறேன்.

    டிராக்டர் பராமரிப்பு செலவினங்கள் போக ரூ.10 ஆயிரம் சேமித்திட முடிகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசுக்கு நன்றி. இதேபோல் பயன்பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி ெதரிவித்தனர்.

    • மதுரையில் ஆதிதிராவிட பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஏப்ரல் 14-ந்தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரையில் மக்கள் தேசம் கட்சியின் அகில இந்திய ஆதிதிராவிட பறையர் பேரவை ஆலோசனை கூட்டம் தலைவர் வக்கீல் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. இதில் மாநில துணைத் தலைவர் கே.பி.கே., செயலாளர் குருவிஜய், பொதுச்செயலாளர் வேதமணி, தலைமை நிலைய செயலாளர் திருமுருகன், மதுரை மாவட்ட செயலாளர் சேவியர் இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் திருசெல்வம், பால்ராஜ், சுலைமான், சுரேஷ், வாசு, பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம் கிளைக்கழகம் அளவில் கட்சியை பலப்படுத்துவது, ஏப்ரல் 14-ந்தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, ஜூலை 7-ந்தேதி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென் மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பேரணியை நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 1950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் பல்வேறு நலத்திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர். இது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவிகளுக்காக 23 விடுதிகளும், பள்ளி மாணவர்களுக்காக 27 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக 1 விடுதியும், கல்லூரி மாணவர்களுக்காக 2 விடுதிகளும், ஐ.டி.ஐ மாணவர்களுக்காக 1 விடுதியும் என மொத்தம் 54 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    இவ்விடுதிகளில் சுமார் 1,404 மாணவிகளும், 1,453 மாணவர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அனைத்து விடுதி மாணவர்களுக்கும் மிகவும் தரமான உணவு வகைகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கென உறைவிடமும் சுகாதாரமான முறையில் பாராமரிக்கப்படுகிறது. தொடர் தணிக்கை செய்து விடுதிகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட வகை செய்வதோடு, முதல்-அமைச்சரே விடுதிகளை தணிக்கை செய்கிறார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களில் எவரேனும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டால் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் குடும்பத்தாருக்கு அவர்களின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமலிருக்க அரசால் உடனடியாக தீருதவி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு காகித வடிவில் வழங்கப்பட்டு வந்த வீட்டுமனைப்பட்டாக்கள் அனைத்தும் கணினி பட்டாவாக மாற்றம் செய்து கணினி பட்டா வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் சீரிய முயற்சியில் தமிழகம் ழுமுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தையல் எந்திரம் இயக்க தெரிந்த சான்று பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன பெண்களுக்கு அரசு விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை நமது மாவட்டத்தில் பல நூறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது.
    • தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி த்தலைவ ர்பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×