search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிதிராவிடர் மாணர்வர்கள்  முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு:   கடலூர் கலெக்டர் தகவல்
    X

    ஆதிதிராவிடர் மாணர்வர்கள் முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு: கடலூர் கலெக்டர் தகவல்

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.
    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

    கடலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு சென்னை தரமணியிலுள்ள மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. 2022 - ன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்டபடிப்பு ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு மேலும் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு , ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவிைனஞர் பட்டய படிப்பு மேற்கண்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். 10- வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட முழு நேர பட்டபடிப்பு பயில தேர்வு நடத்தப்படும். மேலும் நிறுவனத்தில் தாட்கோ மூலம் இலவசமாக சென்னையில் வழங்கப்படும். தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி-27.04.2023 இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற தாட்கோ இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×