search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேகம்"

    • கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமார கோவில் திருப்பணி முடிந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி யாகம், கோ பூஜை, லஷ்மி ஹோமம், நவகரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, பிரம்மசுத்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்ட்டது. பின்னர் கைலாய இசை வாசிக்கப்பட்டு கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பி சாமியை வணங்கினர். கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார்.
    • பங்குனி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது.

    நாகர்கோவில்:

    பைங்குளம் அருகே கீழமுற்றம் பகுதியில் உள்ள நெடுவிளை பத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் பங்குனி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை நண்பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம், பஜனை, மாலை லட்சுமி பூஜை ஆகியவை நடக்கிறது.

    பங்குனி திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்கள் தினமும் காலை நவ கலச பூஜை, அம்மனுக்கு பால் மற்றும் கலசாபிஷேகம், உஷபூஜை, சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, தீபாராதனை, இரவில் சிறப்பு பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 13-ந் தேதி சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், இரவு சமய மாநாடு, 14-ந்தேதி பால்குட ஊர்வலம் தொடர்ந்து அம்மனுக்கு நெய், தேன், தயிர், பால், இளநீர் அபிஷேகம், 15-ந் தேதி அம்மனுக்கு களபாபிஷேகம், இரவு மகளிர் சமய வகுப்பு மாநாடு, பரிசு வழங்குதல், 16, 17-ந் தேதிகளில் அம்மனுக்கு குங்குமம், சந்தனத்தால் அபிஷேகம், 18-ந் தேதி இரவு அம்மனுக்கு பூப்படைப்பு, நள்ளிரவில் சிறப்பு பூஜை, 19-ந் தேதி காலை அம்மனுக்கு பூப்படைப்பு, பகலில் இசக்கியம்மன் கோவில் நேர்ச்சைகள், இசக்கியம்மனுக்கு பூப்படைப்பு, சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் எழுந்தருளி உள்ளார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    சென்னை:

    வடசபரி என்று அழைக்கப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (ஆர்.ஏ.புரம்) 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் சாமி எழுந்தருளி உள்ளார். இறைவனின் உத்தரவுப்படி புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், நவக்கிரகங்கள், ஆஞ்சநேயருக்கும் புதுபொலிவுடன் கோபுரங்கள் கட்டி பஞ்ச வர்ணங்கள் பூசப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த 24-ந்தேதி விநாயகர் பூஜை, முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 25-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாக பூஜை, 26-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7.15 மணி அளவில் 6-ம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.

    தொடர்ந்து 10.45 மணிக்கு சபரிமலையில் இருந்து வந்திருந்த மோகன் தந்திரி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ கே.பிச்சை குருக்கள் தலைமையில் கோபுர கலசத்துக்கும், அதை தொடர்ந்து மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

     இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு வெள்ளி ரதத்தில் ஐயப்ப சாமி எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

    விழா நாட்களில் வேதபாராயணம், தேவார இன்னிசையும், கலைநிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சாமி கோவில் அறக்கட்டளை அறங்காவலரும், கும்பாபிஷேக திருப்பணிக்குழு தலைவருமான ஏ.சி.முத்தையா மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

    • காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.
    • 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக இது உள்ளது. இங்கு மூலவர் 8 திருக்க ரங்களை உடை யவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கு உரிய தலமாகவும் விளங்குகிறது.

     இந்த கோவிலில் கும்பாஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்வசர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, உத்திரமேரூர் எம்எல்ஏ.சுந்தர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணி குழு செயலாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது.
    • மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கும்பாபிஷேகம் செய்தார்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் மயில் வடிவ மலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த முருகன் கோவிலுக்கு கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

    அதன்படி இக்கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (21-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     முன்னதாக கும்பாபிஷேக விழாவிற்காக யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றது. இதனை மயிலம் மொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 9.15 மணியளவில் விநாயகர், பாலசித்தர், வள்ளி தெய் வானை உடனுறை முருகப் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்திகள் விமான கோபுர கலசத்தின் மீது மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கலச நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தார். மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகனுக்கு திருமண விழா நடைபெற உள்ளது.

    விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், குப்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மயிலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டது.

    கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தலைமையிலான பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது.

    பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • 50 பணியாளர்கள் வாயிலாக தொடர்ந்து 45 நாட்களாக யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
    • இக்கோவிலுக்கு கடந்த 1980 மற்றும் 1993 என 2 முறை யாகசாலை அமைக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக கோவில் அருகே பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் யாகசாலை பணிகள் தொடர்ந்து 45 நாட்களாக நடைபெற்று பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இதில் மூலவர், அம்பாள், முருகப்பெருமானுக்கு நவகுண்ட யாகசாலை, பாதிரி அம்மன், காலபைரவர் ஆகிய மூர்த்திகளுக்கு பஞ்ச குண்ட யாகசாலை மற்றும் 37 பரிவார வேதிகை என யாகசாலை ஆகம விதிகள்படி அமைக்கப்பட்டுள்ளது.

    யாகசாலை குறித்து அதன் அமைப்பாளர் மயிலாடுதுறையை சேர்ந்த செல்வம் கூறியதாவது:-

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது அரண்மனை யாகசாலை எனப்படும். 220 அடி நீளம், 100 அடி அகலத்தில் 79 குண்டங்கள், 43 வேதிகைகள் என அமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஆகமவிதிகள்படி அமைக்கப்பட்டுள்ளது. 50 பணியாளர்கள் வாயிலாக தொடர்ந்து 45 நாட்களாக யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    இக்கோவிலுக்கு கடந்த 1980 மற்றும் 1993 என 2 முறை யாகசாலை அமைக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. தற்போது 4-வது தலைமுறையாக யாக சாலை அமைக்கும் பணிகளை செய்து வருகின்றோம்.

    கோவை கோனியம்மன் கோவில், திருவாடுதுறை ஆதீனம், தர்மபுரி ஆதீனம், திருக்கடையூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கும்பாபிஷேகத்துக்கு யாகசாலை அமைத்த புண்ணியம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவினாசியில் லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
    • வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கும்பாபிஷேக விழா இன்று காலை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

    29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.

    இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    31-ந் தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு 6-ம்கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.

    2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்த நாளை நினைத்து பார்ப்பார்கள்.
    • நாடு முழுவதும் மக்கள் இந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.

    அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்-பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

    பின்னர், ராமர் கோவிலுக்கு வருகை தந்திருந்த சுமார் 8 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

    ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது. தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ராம நாமம் ஒலிக்கிறது.

    பகவான் ராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் உள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல, புதிய காலச்சக்கரத்தின் துவக்கம்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்த நாளை நினைத்து பார்ப்பார்கள். அனுமன், லட்சுமணன், பரதன் உள்ளிட்ட அனைவரையும் வணங்குகிறேன். தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன்.

    குறைகள் இருப்பின், ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் மக்கள் இந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். ராமரின் ஆசிர்வாதத்தால் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன். 11 நாள் விரதத்தின்போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களில் வழிபட்டேன்.

    பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார். கடந்த 11 நாட்களில் பல்வேறு மாநிலங்களில், பல மொழிகளில் ராமாயணத்தை கேட்டேன். கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார். 

    ராமர் நம்முடையவர் மட்டுமல்ல, அனைவருக்கும் ஆனவர். இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள ரமர் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ராமர் தான் பாரத தேசத்தின் ஆதாரம். ராமர் நிரந்தரமானவர் மட்டுமல்ல நித்தியமானவர்.

    பகவான் ராமர் நமக்கான வழிகளை காட்டுவார். இன்று இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அவரது ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

    வலிமையான நாட்டை உருவாக்க வேண்டுமென்ற உறுதியை நாம் ஏற்க வேண்டும். ராமர், அனுமனை வெளியே தேடாமல், நம் உள்ளத்தில் வைக்க வேண்டும். ராமர் கோவிலை நிர்மானிக்க வேண்டுமென்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் இருந்தது.

    இன்றைய இந்தியாவின் கனவுகள் நிறைவேறாது என்ற பேச்சுக்கே இடமில்லை. பகவான் ராமர் பிரச்சினைக்குரியவர் அல்ல, அவர் பிரச்சினைகளுக்கான தீர்வாக உள்ளவர்.

    ராமருக்கான நமது பூஜைகள் விசேஷமானதாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டம் நாட்டின் வளர்ச்சிக்கான அமிர்த காலம். அடுத்த ஆயிரம் ஆண்டுக்கான அடித்தளத்தை நாம் தற்போது அமைக்க வேண்டும்.

    அடுத்த ஆயிரம் ஆண்டுக்கான அடித்தளத்தை நாம் தற்போது அமைக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த நாட்டை உருவாக்க அடித்தளமாக ராமர் கோவில் இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    இந்நிலையில் மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர். இந்த படைக்கு 1 துணை கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 33 பேர் வருகை தந்துள்ளனர்.

    இந்த விரைவு அதிரடி படையினர் திருப்பூரில் பதட்டமான பகுதிகளான காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிகளுடன் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    தென்காசி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

    கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் ஆகியவை நடக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் சிறிய மலை குன்றின் மீது ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாதம் இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் ராமர் சீதையை தேடி செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் அருந்தியாக நம்பப்பட்டு வரும் சுனை ஒன்றும் உள்ளது. சுனையில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருப்பதால் காட்டுப்பாதையில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் தேவையை அந்த சுனை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்த சுனையில் இன்று பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் தலைமையிலான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    பின்னர் சுனைநீரிலும் சிறப்பு பூஜைகள் செய்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுனை நீரை பருகி ராமபிரானை வழிபட்டனர்.

    ×