என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் திராவிட மாடல் ஆட்சியில் மேலும் ஒரு மைல்கல் - இந்துசமய அறநிலையத்துறை
- முடிவுற்ற பணிகள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
- நாடு போற்றுகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்புடன் நிறைவேறியது.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பெருந்திட்ட வரைவு மூலமாக கோவிலின் வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெருந்திட்ட வரைவு பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தும், பல்வேறு துறைசார்ந்த கலந்தாய்வு கூட்டங்களில் இத்திட்டத்தின் நிலைக்குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கியும் வந்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று (7-ந்தேதி) வரலாற்று சிறப்புமிக்க நாடு போற்றுகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்புடன் நிறைவேறியது. திராவிட மாடல் ஆட்சியில் மேலும் ஒரு மைல்கல், 'எல்லார்க்கும் எல்லாம்' என ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து சமய அறநிலையத் துறையும் பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






