என் மலர்
வழிபாடு

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை பக்தியுடன் கண்டு வணங்கினர்.
- தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணி அளவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி கே.கே.நகர் இந்திராநகர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான யாக சாலை பூஜைகள் கடந்த 8-ந்தேதி தொடங்கின. அன்று மாலை ஆசார்யாள், அர்சகாள் (யஜமானாள்) அழைப்பு, பகவத் ப்ரார்த்தனை. மஹா ஸங்கல்பம், அனுக்ஞை, விஷ்வக்ஸேன ஆராதனம், க்ரஹப்ரீதி, ஆசார்ய வர்ணம், - ம்ருத்ஸங்கி ரஹணம், வாஸ்து சாந்தி, - அங்குரார்பணம், வேதப்ர பந்த பாராயணம் தொடக்கம் நடைபெற்றது. இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
மறுநாள் காலையில் 1-ம் கால் பூஜை, தீர்த்த - ஸங்க்ரஹணம் ரக்ஷா பந்தனம். சத்தி - யாகர்ஷணம், க்ருஹப்ரீதி, - யாத்ராதானம் மஹா கும்பம் (பெருமாள்உத்ஸவர்) ப்ரவேசம், துவாரபூஜை அக்னி மதனம், அக்னி யாகசாலை ப்ரதிஷ்டை, நித்யஹோமம் ஆகியவை நடைபெற்றன. மதியம் பூர்ணாஹுதி சாற்றுமுறை கோஷ்டியும் நடந்தன. 2-ம் காலம் மாலையில் துவாரபூஜை, கும்ப, மண்டல, பிம்ப பூஜைகள், நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்). இரவு பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி நடந்தது.
நேற்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு 3-ம் காலம் புண்யாஹ வாசனம் துவாரபூஜை, கும்ப மண்டல பிம்பபூஜை, நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்.) மதியம் பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி ஆகியவை நடைபெற்றன. மாலை 4 மணிக்கு புண்யாஹவாசனம், மூலவர், உத்ஸவர் விமானங்கள், ப்ராயச்சித்த ஸ்நபன கலச திருமஞ்சனம், பஞ்சகவ்ய அபிஷேகம். 6 மணிக்கு கோதோஹணம், பசுமாடு யாக சாலைக்கு கொண்டு வந்து பால் கறந்து ஹோமம் செய்தல் நடைபெற்றது..
மாலை 6.30 மணிக்கு 4-ம் காலம் துவார பூஜை. கும்ப மண்டல பிம்ப பூஜை, நித்ய ஹோமம் (சதுஸ்தான ஆராதனம்) ஷோடச, தத்வ, ந்யாஸ, ஹோமங்கள், சாந்தி ஹோமம். இரவு 8.30மணிக்கு பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி, இரவு 9 மணிக்கு சயனாதி வாசம் நடைபெற்றது. இன்று (வியாழக் கிழமை) காலை 5.30 மணிக்கு 5-ம் காலம் விஸ்வரூபம், புண்யா ஹவாசனம், துவார பூஜை, கும்ப மண்டல பிம்ப பூஜை, நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்). மஹா பூர்ணாஹுதி, அந்தர்பலி, பஹீர்பலி யாத்ராதானம், க்ரஹப்ரீதி, தசதானங்கள், கும்ப உத்தாபனம், பெருமாளு டன் கடம் புறப்பாடும் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க விமானங்கள் ஸ்ரீராஜகோபுர, மூலவர், உத்ஸவர், பரிவாரங்கள் மஹா ஸம்ப்ரோஷ்ணம், விசேஷ ஆராதனம், ஆசீர்வாதம் வேத ப்ரபந்த சாற்றுமுறை, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணி அளவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை பக்தியுடன் கண்டு வணங்கினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் தேவர் மலை கேசவன் மற்றும் திருச்சி சி.காளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க. கலைஞர் நகர் பகுதி செயலாளர் மணிவேல், மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, அ.ம.மு.க. மாநகர அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






