search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுதி"

    • 6 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில்5325 மகளிர்களுக்குபணம் பெறுவதற்கு வங்கி அட்டையை வழங்கினார்.
    • தாசில்தார் சிவா,நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கும் நிகழ்ச்சி யில்அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2-ம் கட்டமாக 6 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில்5325 மகளிர்களுக்குபணம் பெறுவதற்கு வங்கி அட்டையை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.சேது நாதன், மயிலம் எம்.எல்.ஏ. சிவகுமார், சேர்மன்கள் சொக்கலிங்கம், யோகேஸ்வரி மணிமாறன்,நிர்மலா ரவிச்சந்திரன், தயாளன், ராஜாராம்,ராஜலட்சுமி வெற்றிவேல் , மாவட்ட பொருளாளர் வக்கீல் ரமணன், மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், திண்டிவனம் சப்-கலெக்டர் தமிழரசன்,தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, திண்டிவனம் தாசில்தார் சிவா,நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கலந்து கொண்டனர்.

    • ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காலபைரவர் ,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் ,குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆடுகள் ரோட்டில் சுற்றுவதால்
    • போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது

    நாகர்கோவில் : குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட காவஸ்தலம், அரசமூடு, நாகக்கோடு போன்ற பகுதிகளில் ஆடுகள் ரோட்டில் சுற்றுவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறதுஆடுகள் ரோட்டில் சுற்றுவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குலசேகரம் பேரூராட்சியில் புகார் செய்தார்கள். பேரூராட்சி நிர்வாகம் சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ஆடுகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க வேண்டும். சாலைகளில் தனியாக விட கூடாது என்று அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பினார்கள்.

    ஆனால் சம்மந்தப்பட்ட ஆடுகளின் உரிமையாளர்கள் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் ரோட்டில் ஆடுகளை தனியாக விட்டார்கள். நேற்று குலசேகரம் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ரோட்டில் சுற்றி திரிந்த 2 ஆடுகளை பிடித்து பேரூராட்சியில் கட்டி போட்டார்கள். ஆட்டின் உரிமையார்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரை திரும்பும் மீனவர்கள்

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன் பிடிக்க நாளை முதல் தடை அமுலுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் 2 மாதகாலம் களை இழந்து வெறிச்சோடி காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கும். இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். வள்ளம் மற்றும் கட்டு மரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இல்லை.

    இந்த 2 மாத காலமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் அபாயநிலை ஏற்படும்.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பும் ஏற்படும். நாளை தடை காலம் தொடர்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விசைப்படகுகளுடன் நேற்று முதல் அவசர அவசரமாக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரைக்கு திரும்பிய வண்ணமாக உள்ளனர்.

    • அரிசி, சீனி மூடைகள் சேதம்
    • இடிமின்னலுடன் திடீர் கோடை மழை

    கன்னியாகுமரி:

    குலசேகரம், பேச்சிப் பாறை, திற்பரப்பு, திருநந்திக்கரை, திருவரம்பு, திருவட்டார், பொன்மனை, மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை இடிமின்னலுடன் திடீர் கோடை மழை பெய்தது.

    இந்த மழையின்போது சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் கடும் வெயில் இருந்த நிலையில் சற்று வெப்பம் குறைந்தது. குலசேகரம்-திருவரம்பு சாலையில் நாகக்கோடு சந்திப்பு அருகிலுள்ள ஒரு ரேஷன் கடைக்குள் திடீரென்று தண்ணீர் புகுந்தது. அப்போது கடையில் பணியில் இருந்த பெண் ஊழியர் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடர்ந்து சாலையில் பாய்ந்த தண்ணீர் கடைக்குள் புகுந்த வண்ணம் இருந்தது.

    இது குறித்து குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸூக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை அந்த ரேஷன் கடைக்கு அனுப்பி வைத்து, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் ஒத்து ழைப்புடன் கடையிலிருந்த ரேஷன் மற்றும் சர்க்கரை அரசி மூடைகள் அங்கிருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த ரேசன் கடையில் சுமார் 160 மூடைகள் சர்க்கரை, அரிசி மூடைகள் இருந்த நிலையில் அவற்றில் சில மூடைகள், கடையில் தண்ணீர் புகுந்த காரணத்தால் நனைந்து சேதமடைந்தன. தற்போது குலசேகரம்-திருவரம்பு சாலையில் சாலை விரிவாக்கப்பணிகள் நடப்பதால் சாலையில் பாய்ந்த தண்ணீர் ரேஷன் கடைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்து அரிசி மூடைகள் சேதமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இனிமேல் வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டு மென்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று ஆய்வு

    கன்னியாகுமரி, மார்ச்.14-

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரிய சாமி நேற்று இரவு கார் மூலம் கன்னியா குமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு அவர் இரவு கன்னியா குமரியில் தங்கினார். பின்னர் அமைச்சர் ஐ. பெரிய சாமி இன்று காலை கன்னியா குமரி அருகே உள்ள கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் தூய்மை இந்தியா திட்டம்மற்றும் 15 -வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ்சுற்றுலா பயணிகளுக்குவசதியாக நவீன கழிப்பறை கட்டும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பிறகு ஒற்றையால் விளை அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள், நண்பர்கள் நட்புறவு திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்து25 ஆயிரம் செலவில்4 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டும்பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு லீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆமணக்கன்விளை அரசு தொடக்கப்பள்ளி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 69 ஆயிரம் செலவில் சத்துணவு திட்ட சமையலறை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    அதைத் தொடர்ந்து சுவாமிதோப்பு பதிசாலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 99 ஆயிரம் செலவில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அவருடன் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட திட்ட அதிகாரி பாபு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியதி.மு.க. செயலாளர் பாபு, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணைசெயலாளர்தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர்வைகுண்ட பெருமாள், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்ப ரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன், கோவளம் பஞ்சாயத்து தலைவர் ஸ்டெனி, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தகவல்
    • 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் மேயர் மகேஷ் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இன்று 33-வது வார்டுக்கு உட்பட்ட தொல்லவிளை, குருசடி, மேலச்சூரங்குடி பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது மூவேந்தர் நகர் பகுதியில் செயல்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை பார்வையிட்ட அவர் அதன் விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

    மேலும் 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது. அந்த சாலைகளை சீரமைக்கவும் பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த மேயர் மகேஷ் அதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வார்டுகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது சாலை சீரமைப்புக்கு ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் எந்த ஒரு பாகுபாடும் இன்றி நிதி சரிவர பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகர்கோ வில் மாநகரப் பகுதியிலுள்ள 52 வார்டுகளில் என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து நானே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.

    இன்று வரை 50 வார்டுகளில் ஆய்வு முடிவு பெற்றுள்ளது. இன்னும் எனது வார்டான 4-வது வார்டு மற்றும் 5-வது வார்டு மட்டும் ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஆய்வு பணி நிறைவடையும். மாநகர வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் குமுறல்
    • உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டு களில் சாலை மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி கூட்டத்திலும் சாலை சீர மைப்பிற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள் ளது. சாலை சீரமைப் பிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட பிறகும் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சி அளிக்கின்றன. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு சாலை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளது. ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகிறார்கள்.

    ஆனால் இந்த சாலையின் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை யில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கீழே விழும் நிலை உள்ளது.சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த சாலையை சீர மைக்க விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் நேரத்தில் சாலை சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் இதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.

    உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது மட்டுமின்றி 17-வது வார்டுக்குட்பட்ட மேலும் பல்வேறு சாலைகளும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. இந்த சாலை களையும் சீரமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் நாகர் கோவில் மாநகராட்சிக் குட்பட்ட 52 வார்டுகளிலும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்து உள்ள னர்.

    மேயர் மகேஷ் இந்த சாலை சீரமைப்பில் தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு
    • பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு

    கன்னியாகுமரி:

    தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தென் தாமரை குளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், ஓட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டு அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
    • கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை

    கன்னியாகுமரி:

    தக்கலை பஸ்நிலையம் அருகில் தாலுகா அலுவலகம், கிராம அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன.இங்கு காலை, மாலை வேளையில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சாலையோரம் பழ வியாபாரங்கள் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

    அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் போலியான கவர்ச்சி விளம்பரங்கள் செய்து அழுகிய பழங்களை விற்பனை செய்து வருகின்ற னர். நேற்று முன்தினம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மாம்பழம் வாங்கியுள்ளார். பழத்தை வாங்கி பார்த்த போது அழுகி புழுக்கள் இருந்தன. உடனே கடைகாரரிடம் தகராறில் ஈடுபட்டார். இதே நிலைதொடர்ந்து இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பல வகை நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    தக்கலை பிரபல பல் மருத்துவமனை அருகில் உள்ள சாலையோர கடைகளில் கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.

    • முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • முகாமில் உள்ளவர்களின் உணவையும் பரிசோதனை செய்தார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே சுக்காம்பார் கொள்ளிடம் ஆற்று நீர் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    சுக்காம்பார் கிராமத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமை தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொன்டார். அப்போது சமுதாயக் கூடம் அருகில் கொள்ளிடத்தில் செல்லும் வெள்ள நீரை பார்வையிட்டு பின்பு சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்த்து சுகாதாரம் பற்றி கேட்டறிந்தார்.

    பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் மகப் பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் நிர்மல் சென் உடனிருந்தார்.

    அந்த ஊரில் பயன்படுத்தப்படும் குடிநீரையும், அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்த குடிநீரை எடுத்து பரிசோதனை செய்தார். முகாமில் உள்ளவர்களின் உணவையும் பரிசோதனை செய்தார்.

    ஆய்வின் போது தஞ்சை சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகளின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரேகா, நடமாடும் மருத்துவக் குழு டாக்டர் நவீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் ராமநாதன், ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஜூலை 15 காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது
    • மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள்

    கன்னியாகுமரி :

    குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 15) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டணம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.

    மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×