search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை"

    • கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
    • கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதி.

    கோவை நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் அடையாளத்தை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதியாகியுள்ளறதாக தகவல் தெரியவந்துள்ளது.

    மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஊழியரிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.
    • கைவரிசை காட்டிய ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள்,

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 40). இவர் ஆமத்தூரை அடுத்த வடமலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் அவர் தனது வீட் டில் இருந்து இருசக்கர வாக னத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று அதே போல் பள்ளிக்கு சென்ற அவர், மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டி ருந்தார். முன்னதாக விருது நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும் அவர் முடிவு செய்திருந்தார்.

    இதற்காக அவர் வந்த போது, சிவகாசி சாலையில் குமாரலிங்காபுரம் பகுதியில் அவரை பின்தொடர்ந்து மற்ெறாரு மோட்டார் சைக் கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி கள் 2 பேர் திடீரென்று ராஜலட் சுமி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.

    இருந்தபோதிலும் அவர்க ளிடம் கடுமையாக போரா டியும் பலனின்றி போனது. இதில் 5 பவுன் செயினில் ஒன்றரை பவுன் நகையுடன் அந்த ஆசாமிகள் தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து ராஜலட்சுமி ஆமத் தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடு பட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    இந்திலியில் உள்ள பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர்கல்யாணி .ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் பெரியசாமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நிலையில் கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கல்யாணி யுடன் அவரது தாய் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்யாணி மற்றும் அவரது மருமகன் ஆகியோர் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் வயதான கல்யாணியின் தாய் மட்டும் இருந்துள்ளார் .அப்போது கல்யாணி வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த கல்யாணியின் தாயிடம் வீட்டில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.அதற்கு அவர் வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் வந்த பிறகு வந்து பாருங்கள் என்று சொல்லி உள்ளார் பின்னர் மூதாட்டிக்கு தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவை உடைத்து 12 ஆயிரம் பணம் மற்றும்3 பவுன் தங்க நகை உள்ளிட்ட வற்றை திருடி சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று மாலை கல்யாணியின் மருமகன் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார் .

    பின்னர் இதுகுறித்து சின்னசேலம் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய குற்றவாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .இதே போல் இந்திலியில் உள்ள பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இரு இடங்களில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினார்
    • விக்கியிடம் இருந்து 9 பவுன் நகையை போலீசார் கைப்பற்றியுள்ளனர்

    குழித்துறை :

    குமரி மாவட்டத்தில் சாலை களில் நடந்து செல்லும் பெண் களை தாக்கி நகை பறிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை.

    இந்த நிலையில் மார்த்தாண் டம் பகுதியில் நேற்று இரவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசா ருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர் என தெரியவந்தது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண் களை, தனது மோட்டார் சைக்கிளால் இடித்து கீழே தள்ளிவிட்டு, அவர்கள் சுதாரிப்ப தற்குள், கழுத்தில் கிடக்கும் நகைளை பறித்துச் செல்வதை தொழிலாக கொண்டுள்ளார் என்பது விசாரணையில் கண்டறி யப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீ சார், அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், நாகர்கோ விலை அடுத்த மேல புத்தேரி கீழக்கலுங்கடி பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 20) என்பது தெரிய வந்தது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மார்த்தாண்டம் ெரயில்வே நிலைய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்த ஆசிரியை ஒருவரை தாக்கி 9 பவுன் தாலி சங்கிலியை பறித்தது, ஞாறான்விளை அகதிகள் முகாமை சேர்ந்த ராஜஸ்ரீ (37) என்பவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தது போன்ற வற்றில் விக்கி தான் ஈடுபட் டுள்ளார் என்பதும் உறுதியானது.

    மேலும் இவர் மீது கருங்கல் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் பல இடங்களில் விக்கி ரோமியோவாக வலம் வந்து, பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை மறைவான இடங்க ளுக்கு அழைத்துச் சென்று தங்க சங்கிலியை பறித்து செல்லும் செயலிலும் ஈடுபட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. விக்கியிடம் இருந்து 9 பவுன் நகையை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கைதான கொள்ளையன் பரபரப்பு வாக்குமூலம்
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதிபுரம் கிறிஸ்டோபர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி செல்வி (வயது 60). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து செல்வி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகை பறிப்பு நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையில் ஈடுபட்டது கேர ளாவை சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது. இதை யடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் செல்வியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது திருவனந்தபுரம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நந்தகுமாரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசா ரணை நடத்தியபோது ஜாலி யான வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு நகை களை திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார்.

    இந்த கொள்ளை வழக்கில் அவரது நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நந்தகுமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நந்தகுமார் மீது ஏற்கனவே கேரளாவில் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மர்மநபர்கள் திருடி வந்து வைத்து சென்றனரா? போலீஸ் விசாரணை
    • கண்காணிப்பு காமிராக்களையும் ைகப்பற்றி ஆய்வு

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலையில் முல்லை நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைக்காக அங்கு ஒரு ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஆம்புலன்சின் டிரைவர் முருகன் என்பவர் நேற்று மதியம் ஆம்புலன்சை சுத்தம் செய்தார். பின்பக்கம் சுத்தம் செய்வதற்காக ஆம்புலன்சு கதவை திறந்தார்.

    அப்போது உள்ளே ஒரு கைப்பை இருந்தது. அதை எடுத்து அவர் பார்த்தார். அதில் செயின், மோதிரம், வளையல், ஆரம் என தங்க நகைகள் இருந்தன.

    இதனால் அதிர்ச்சியான அவர் உடனே பையை எடுத்து கொண்டு, வட வள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு போலீசாரிடம் ஆம்புலன் சில் இந்த பை கிடந்ததாகவும், இதில் நகைகள் உள்ளது. ஆனால் யாருடையது? ஆம்புலன்சில் எப்படி வந்தது என தெரியவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அது ஒரிஜினல் நகையைா? அல்லது போலி நகையா? என ஆய்வு செய்தனர். அப்போது அது ஒரிஜினல் நகை தான் என்பது உறுதியானது. மொத்தம் 19 பவுன் நகை இருந்தது.

    போலீசார் தொடர்ந்து அந்த நகை யாருடையது? என்பதை கண்டறிய அந்த பையில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா என தேடி பார்த்தனர்.

    அப்போது அதில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதை எடுத்து பார்த்த போது, அதில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு கேக் ஷாப்பில் கேக் வாங்கியதற்கான சீட்டு என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டு, அது யாருடையது? எப்படி ஆம்புலன்சில் வந்தது. யாராவது திருடி வந்து விட்டு, பயத்தில் ஆம்புலன்சில் விட்டு சென்றனரா? அல்லது ஆம்புலன்சில் வந்த யாராவது மறந்து விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்கின்றனர். யாராவது ஆம்புலன்சில் வந்து நகைைய வைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறதா? என்பதை பார்த்து ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். மேலும் துண்டு சீட்டில் இருந்த கேக் கடைக்கும் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    • மனோன்மணி வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டிற்கு சென்றார்.
    • வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளை போயிருந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள ரெட்டியார் மடத்தை சேர்ந்தவர் கனகராஜ்.

    இவரது மனைவி மனோன்மணி (வயது 45). பேக்கரி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டுக்கு சென்றார்.

    அப்போது மனோன்மணி வீட்டில் ஓட்டை பிரிந்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 1 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய மனோன்மணி பணம் மற்றும் நகை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    • வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.
    • மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பொன்விழா நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்றிரவு மனைவி பிரேமா மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டின் உரிமையாளரும் வெளியூருக்கு சென்றுவிட்டார்.

    நகை திருட்டு

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு திரும்பிய சுப்ரமணியம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் அந்த சிறுவனை பிடித்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (வயது 24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது.

    அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்த அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
    • வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அடுத்த உள்ள ஆணைக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஓசூருக்கு சென்றுள்ளார். 2 நாட்களுக்கு பின்னர் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    மற்றொரு சம்பவம்

    அதேபோன்று பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுபாஷ் (33). இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தி ருந்தார். மனைவியை பார்த்து விட்டு சுபாஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இந்த அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டு வந்தனர்
    • திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    நாகர்கோவில் :

    ஈத்தாமொழி அருகே பொழிக்கரை பகுதியை சேர்ந்தவர் மரியசானு (வயது 23), எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு வருகிற 18-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மரியசானு நேற்று கன்னியாகுமரி புதுகிராமம் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு அங்கேயே தங்கினார். இந்நிலையில் வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில் 30 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணத்துடன் மரியசானு மாயமாகிவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • திருவட்டாரில் உள்ள பள்ளிக்கு பயிற்சிக்காக சென்று வந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை : 

    மார்த்தாண்டம் முழங்குழி வாயக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்கு மார். ஒர்க் ஷாப் உரிமை யாளர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 28). இவர் பி.எட். முடித்துவிட்டு திருவட்டாரில் உள்ள பள்ளிக்கு பயிற்சிக்காக சென்று வந்தார். நேற்று மாலை மார்த்தாண்டம் ெரயில்வே கிராசிங் அருகே உள்ள பல்லன்விளை பகுதியில் மகேஸ்வரி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி காயப்படுத்தி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மகேஸ்வரியை பொதுமக்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×