search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
    X

    பொள்ளாச்சி அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

    • மனோன்மணி வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டிற்கு சென்றார்.
    • வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளை போயிருந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள ரெட்டியார் மடத்தை சேர்ந்தவர் கனகராஜ்.

    இவரது மனைவி மனோன்மணி (வயது 45). பேக்கரி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டுக்கு சென்றார்.

    அப்போது மனோன்மணி வீட்டில் ஓட்டை பிரிந்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 1 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய மனோன்மணி பணம் மற்றும் நகை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×