search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறிப்பு"

    • பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஊழியரிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.
    • கைவரிசை காட்டிய ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள்,

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 40). இவர் ஆமத்தூரை அடுத்த வடமலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் அவர் தனது வீட் டில் இருந்து இருசக்கர வாக னத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று அதே போல் பள்ளிக்கு சென்ற அவர், மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டி ருந்தார். முன்னதாக விருது நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும் அவர் முடிவு செய்திருந்தார்.

    இதற்காக அவர் வந்த போது, சிவகாசி சாலையில் குமாரலிங்காபுரம் பகுதியில் அவரை பின்தொடர்ந்து மற்ெறாரு மோட்டார் சைக் கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி கள் 2 பேர் திடீரென்று ராஜலட் சுமி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.

    இருந்தபோதிலும் அவர்க ளிடம் கடுமையாக போரா டியும் பலனின்றி போனது. இதில் 5 பவுன் செயினில் ஒன்றரை பவுன் நகையுடன் அந்த ஆசாமிகள் தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து ராஜலட்சுமி ஆமத் தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடு பட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • இவர் மேட்டு மருதூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மருதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
    • அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அறுத்து தப்பி சென்று விட்டார்.

    கரூர்

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல தண்ணீர் பள்ளியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லோகாம்பாள் (வயது 60). விவசாயி. இவர் மேட்டு மருதூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மருதூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அறுத்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து லோகாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரியா ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரைச் சேர்ந்தவர் பிரியா (வயது 43). சம்பவத்தன்று இவர் அவினாசி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 அரை பவுன் தங்கச் செயினை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பொன்மலையில் டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு
    • பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    திருச்சி, 

    திருச்சி கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் பொன்மலை பட்டியில் உள்ள மதுபான கடையில் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவர் பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து செல்வராஜ் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரிடம் பணம் பறித்த திருவெறும்பூர் திருநகரை சேர்ந்த விஷால் ( 23) பொன்மலை பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் ( 22 ) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து 2 பேரை கைது செய்தனர்.

    • அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா ( வயது 28). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மோகனப்பிரியா மணியம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பெருந்தொழுவு கரியாம்பாளையம் என்ற இடம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகவரி கேட்டு மோகனப்பிரியாவிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அவரை தள்ளி விட்டு சென்றனர். இதில் நிலைத்தடுமாறி விழுந்த மோகன பிரியாவுக்கும் குழந்தைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து மர்மநபர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர்
    • ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாயல் ஜெயின் (வயது 32). இவர் பட்டய கணக்காளராக (ஆடிட்டர்) உள்ளார்.

    இந்த நிலையில் அவர் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மெக்ரிகேர் ரோட்டில் பைக்கில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி, பாயல் ஜெயினிடம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் பிரசாந்த் (29). இவர் கோவை காந்திபுரம், ராம் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு உள்ள கார் ஷோரூமில் மேனஜராக வேலை பார்க்கிறார்.

    இந்த நிலையில் பிரசாந்த் நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிடுவதற்காக வெளியே புறப்பட்டு சென்றார்.

    அப்போது பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்து, 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து பிரசாந்த் அளித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனியாக அவரது வீட்டிற்கு சென்றார்.
    • மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் பகுதியில் பெண்களை தாக்கிவிட்டு நகைகளை வழிப்பறி செய்தல் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்லுதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடை பெறுவது வாடிக்கை யாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. மரக்காணம் அருகே உள்ள அழகன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ராஜேஷ் (வயது 19) இவர் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வழக்கமாக கல்லூரியி லிருந்து பஸ்சில் வந்து தாழங்காடு பகுதியில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனியாக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது எதிரில் வந் தஒருவர் ராஜேசை ஏதோ காரணத்திற்காக தாக்கிவிட்டு அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார். இச்சம்பவம் குறித்து மாணவன் ராஜேஷ் மரக்காணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வசந்தா (65).

    துணிக்கடை

    இவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து மூதாட்டி துண்டை எடுத்து அவரிடம் காண்பித்தக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்ச லிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து வசந்தா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • இம்மானுவேல் சர்ச் அருகே போனில் பேசியபடி சென்றபோது, செல்போன் திருட்டு நடைபெற்றது.
    • மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை.

    கோவை ரேஸ்கோர்ஸ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன் (40). இவர் திருப்பூரில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் துணை வணிகவரி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் திருப்பூரில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தார்.

    பின்னர் காந்திபுரத்தில் இருந்து டவுன் பஸ்சில் உப்பிலிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ரேஸ்கோர்சில் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அங்குள்ள இம்மானுவேல் சர்ச் அருகே போனில் பேசியபடி சென்றபோது, அவரின் அருகே மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடி விட்டது. இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

    • இது குறித்து மஞ்சுளா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மூக்கணா ங்குறிச்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி மஞ்சுளா

    கரூர்

    கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த, சின்ன மூக்கணா ங்குறிச்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி மஞ்சுளா (வயது 37). இவர். சிந்தாமணிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளி முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் சிந்தாமணிபட்டி வரவனை பெருமாள் கோவில் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த இருவர், மஞ்சுளாவின் கழுத்தில் அணிந்திருந்த, ஆறு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து மஞ்சுளா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.92 ஆயிரம் பறிக்கப்பட்டது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வலையபட்டியில் மதுக்கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக ேவலை பார்ப்பவர் முருகேசன் (வயது40). நேற்று இரவு விற்பனையை முடித்து விட்டு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் விற்பனை யாளர்கள் அய்யனார், தனசேகர் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் முருகே சன் பணம் தராமல் பெட்டியை மறைக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் பணப் பெட்டியை பறித்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்தி ருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பணப்பெட்டியில் ரூ.92 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர். ேமலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மதுக்கடை விற்பனையாளர் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி செல்லாச்சி (வயது76). இவரும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் 2 பெண்களும் புல்லலக் கோட்டை சாலையில் இன்று காலை நடைபயிற்சி சென்றனர். முனியசாமி கோவில் அருகே சென்ற போது அங்குள்ள பாலத்தில் 2 மர்ம நபர்கள் அமர்ந்திருந்தனர்.

    அந்த நபர்கள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்களை நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சென்றுள்ளனர். பாலத்தில் இருந்து இறங்கி செல்லும்போது சற்று இடைவெளி விட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த மர்மநபர்கள் அவர்களின் பின்னால் வந்துள்ளனர்.

    திடீரென மர்மநபர்கள் செல்லாச்சி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் கூச்சலிட்டனர். ஆனால் அருகில் யாரும் இல்லாததால் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா, பாண்டியன்நகர் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் மாரிமுத்து, விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    ×