search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே   ஆசிரியையிடம் செல்போன் பறிப்பு
    X

    கடலூர் அருகே ஆசிரியையிடம் செல்போன் பறிப்பு

    கடலூர்:

    கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி சேர்ந்தவர் மாலதி (வயது 36) .இவர் மாளிகை மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடலூர் பி.என்.பாளையம் சேர்ந்த தணிகாசலம் (வயது 38). பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் பயிற்சியில் பயிற்சி பெற்றார்.இதை தொடர்ந்து 2 பேரும் மொபைலில் பேசி பழகி வந்தனர். இந்த நிலையில் மாலதியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தணிகாசலம் தானாக முன்வந்து பல உதவிகள் மாலதிக்கு செய்து வந்தார். ஆனால் தணிகாசலத்தின் நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் பேசுவதை மாலதி நிறுத்தி விட்டார்.

    சம்பவத்தன்று மாலதி தனது இருசக்கர வாகனத்தில் நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தணிகாசலம் மாலதியை வழிமறித்து அவரது செல்போனை பறித்து யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறாய்? என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாலதி கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் தணிகாசலம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×