search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாக்கமங்கலம் அருகே பஸ்சுக்கு காத்து நின்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
    X

    கோப்பு படம்

    ராஜாக்கமங்கலம் அருகே பஸ்சுக்கு காத்து நின்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

    • 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ஆண்டார்குளத்தை சேர்ந்த சுந்தர் சிங் என்பவரது மனைவி ஜோதி ரோஸ்லின் (வயது 53). இவர் ஆண்டார்குளத்தில் இருந்து சாந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு 8 மணி அளவில் ஆண்டார்குளம் செல்வ தற்காக சாந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் ஜோதி ரோஸ்லின் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை அறுத்தனர்.

    உடனடியாக ஜோதி ரோஸ்லின் கூச்சலிடவே பக்கத்தில் இருந்த நபர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி மறைந்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து ஜோதி ரோஸ்லின் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×