search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theft of jewelry"

    • வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.
    • மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பொன்விழா நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்றிரவு மனைவி பிரேமா மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டின் உரிமையாளரும் வெளியூருக்கு சென்றுவிட்டார்.

    நகை திருட்டு

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு திரும்பிய சுப்ரமணியம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு 9 மணியளவில் வந்து பார்க்கும் போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது.
    • இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வசிப்பவர் தங்கராஜ் (வயது 53). தனியார் மில் தொழிலாளி. இவரது மனைவி ராமயம்மாள். அதே பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார். உறவினர் உடல்நிலை சரியில்லாத நிலை யில் இருந்ததால், தங்கராஜ், மனைவி, மகள் ஆகியோர் ஈரோட்டிற்கு பார்க்க சென்று விட்டு, இரவு 9 மணியளவில் வந்து பார்க்கும் போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது . இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரிக்கும் போது, அதே பகுதியில் கரும்பு வெட்டும் சிறுவன் திருடியது தெரியவந்தது.

    அவனிடமிருந்து 4½ பவுன் தங்க நகை, ரூ.48 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், மாத்தூர் பகுதியை சேர்ந்த சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×