search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளி அருகே ஆம்புலன்சில் கிடந்த 19 பவுன் நகை
    X

    வடவள்ளி அருகே ஆம்புலன்சில் கிடந்த 19 பவுன் நகை

    • மர்மநபர்கள் திருடி வந்து வைத்து சென்றனரா? போலீஸ் விசாரணை
    • கண்காணிப்பு காமிராக்களையும் ைகப்பற்றி ஆய்வு

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலையில் முல்லை நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைக்காக அங்கு ஒரு ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஆம்புலன்சின் டிரைவர் முருகன் என்பவர் நேற்று மதியம் ஆம்புலன்சை சுத்தம் செய்தார். பின்பக்கம் சுத்தம் செய்வதற்காக ஆம்புலன்சு கதவை திறந்தார்.

    அப்போது உள்ளே ஒரு கைப்பை இருந்தது. அதை எடுத்து அவர் பார்த்தார். அதில் செயின், மோதிரம், வளையல், ஆரம் என தங்க நகைகள் இருந்தன.

    இதனால் அதிர்ச்சியான அவர் உடனே பையை எடுத்து கொண்டு, வட வள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு போலீசாரிடம் ஆம்புலன் சில் இந்த பை கிடந்ததாகவும், இதில் நகைகள் உள்ளது. ஆனால் யாருடையது? ஆம்புலன்சில் எப்படி வந்தது என தெரியவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அது ஒரிஜினல் நகையைா? அல்லது போலி நகையா? என ஆய்வு செய்தனர். அப்போது அது ஒரிஜினல் நகை தான் என்பது உறுதியானது. மொத்தம் 19 பவுன் நகை இருந்தது.

    போலீசார் தொடர்ந்து அந்த நகை யாருடையது? என்பதை கண்டறிய அந்த பையில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா என தேடி பார்த்தனர்.

    அப்போது அதில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதை எடுத்து பார்த்த போது, அதில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு கேக் ஷாப்பில் கேக் வாங்கியதற்கான சீட்டு என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டு, அது யாருடையது? எப்படி ஆம்புலன்சில் வந்தது. யாராவது திருடி வந்து விட்டு, பயத்தில் ஆம்புலன்சில் விட்டு சென்றனரா? அல்லது ஆம்புலன்சில் வந்த யாராவது மறந்து விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்கின்றனர். யாராவது ஆம்புலன்சில் வந்து நகைைய வைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறதா? என்பதை பார்த்து ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். மேலும் துண்டு சீட்டில் இருந்த கேக் கடைக்கும் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×