search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை
    X

    பீரோ உடைக்கப்பட் டுள்ளதையும், வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதையும் படத்தில் காணலாம்.

    கருப்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை

    • தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
    • வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அடுத்த உள்ள ஆணைக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஓசூருக்கு சென்றுள்ளார். 2 நாட்களுக்கு பின்னர் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    மற்றொரு சம்பவம்

    அதேபோன்று பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுபாஷ் (33). இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தி ருந்தார். மனைவியை பார்த்து விட்டு சுபாஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இந்த அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×