search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோனி"

    • தற்போது இணைய மோசடி குற்றங்கள் (சைபர் கிரைம்) அதிகரித்து வருகின்றன.
    • போலி கிரெடிட் கார்டுகளை பெற்று பல லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி :

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். இதன் எதிரொலியாக தற்போது இணைய மோசடி குற்றங்கள் (சைபர் கிரைம்) அதிகரித்து வருகின்றன.

    இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு கும்பல் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களின் பான்கார்டு விவரங்களை பயன்படுத்தி போலி கிரெடிட் கார்டுகளை பெற்று பல லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இணையதளத்தில் இருந்து பிரபலங்களின் ஜி.எஸ்.டி அடையாள எண்கள் மூலமாக அவர்களது பான்கார்டு விவரங்களை தெரிந்து கொண்ட கும்பல் அதன் மூலமாக பிரபலங்களின் பெயர்களிலேயே கிரெடிட் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது.

    இந்த கும்பல் பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, மாதுரி திக்ஷித், எம்ரான் ஹஷ்மி மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் பெயரை பயன்படுத்தி, புனேவை சேர்ந்த 'ஒன்கார்டு' என்ற நிறுவனத்திடம் இருந்து கிரெடிட் கார்டுகளை வாங்கியுள்ளது.

    கிரெடிட் கார்டுகளை வழங்கிய 'ஒன்கார்டு' நிறுவனம் இந்த மோசடியை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே அந்த கும்பல் சில கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.21.32 லட்சம் மதிப்பில் பொருட்களை வாங்கிவிட்டது.

    இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த நிறுவனம் உடனடியாக டெல்லி போலீசில் புகார் அளித்தது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். அதனை தொடர்ந்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மோசடி குறித்து போலீசார் கூறுகையில், "ஜி.எஸ்.டி அடையாள எண்களில் முதல் 2 இலக்கங்கள் மாநிலக் குறியீடு என்பதையும் அடுத்த 10 இலக்கங்கள் பான்கார்டு எண் என்பதையும் நன்கு அறிந்திருந்த அந்த கும்பல் இணையதளத்தில் இருந்து பிரபலங்களின் பான்கார்டு விவரங்களை பெற்றுள்ளனர்.

    அதே பாணியில் ஆதார்கார்டு விவரங்களையும் பெற்ற அந்த கும்பல் இரண்டையும் சேர்த்து பிரபலங்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றுடன் தங்கள் புகைப்படத்தை இணைத்து, கிரெடிட்கார்டுக்கு விண்ணபித்துள்ளனர். அதை நம்பி 'ஒன்கார்டு' நிறுவனமும் அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான கடன் வரம்பு கொண்ட கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என கூறினர்.

    • தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு.
    • இவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தான் விளையாடிய பேட்டை பரிசளித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை நாயகி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    யோகிபாபு

    யோகிபாபு


    இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) படத்தில் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.


    யோகிபாபு

    யோகிபாபு

    இந்நிலையில் தோனி பயிற்சியில் பயன்படுத்திய பேட்டை யோகிபாபுவுக்கு பரிசாக அளித்துள்ளதாகவும், இதற்காக நன்றி தெரிவித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு யோகிபாபு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 'தோனி என்டர்டெயின்மெண்ட்' சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமிழ் படத்தை தயாரிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

     

    லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married)

    லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married)

    தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை, மோஷன் போஸ்டர் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவானா - ஹரிஷ் கல்யாண்

    இவானா - ஹரிஷ் கல்யாண்

     

    மேலும் இப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழில் திரைப்படத் தயாரிப்பில் களம் இறங்கிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திரா சிங் தோனி.
    • தோனி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் உருவாகும் முதல் படத்தில் நடிக்கும் கதாநாயகன் குறித்த புதிய தகவல்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

     

    தோனி என்டர்டெயின்மெண்ட்

    தோனி என்டர்டெயின்மெண்ட்

    இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேசி வருவதாக தகவல் பரவியது. பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது. இந்நிலையில் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனிடம் பேசி வருவதாகவும் நாயகன், நாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

     

    ஹரிஷ் கல்யாண்

    ஹரிஷ் கல்யாண்

    சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், பியார் பிரேமா காதல், கசட தபற உள்ளிட்ட படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழில் திரைப்படத் தயாரிப்பில் களம் இறங்கிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திரா சிங் தோனி.
    • தோனி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் முதல் படத்தை தமிழில் தயாரிக்கின்றனர்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது.

    இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. 'வுமன்'ஸ் டே அவுட்' என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

    தோனி என்டர்டெயின்மெண்ட்

    தோனி என்டர்டெயின்மெண்ட்

     

    இவர்களின் முதல் திரைப்படத்தை 'அதர்வா- தி ஆர்ஜின்' எனும் கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ''சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது" என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார்.

    இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

    • சென்னை, சேலத்தில் கிரிக்கெட் அகாடமிகள் செயல்பட்டு வருகின்றன.
    • ஒசூர் அகாடமி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.

    ஓசூர்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம், சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட்டன. இளம் வீரர்கள் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது. 


    இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இங்குள்ள மைதானத்தில் மொத்தம் 8 ஆடுகளங்கள் உருவாக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த பயிற்சி முகாம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர உங்களின் சாதனை நம்பிக்கையை அளிக்கிறது.
    • சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு முக்கிய தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இணையற்ற சாதனை, எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் ஏராளமான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கை அளிக்கிறது.

    எங்கள் சொந்த சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் முன்னாள் கேப்டன் தோனி. #MSDhoni #RahulDravid
    துபாய் :

    14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.

    அடுத்து 238 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார்கள். இதனால் 63 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

    இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ராகுல் டிராவிட்டை (504 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி இந்தியாவிற்காக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று விதமான போட்டிகளையும் சேர்த்து அதிகளவிலான போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். 

    கடந்த 2004-ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி இதுவரை 322 ஒரு நாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகள் என மொத்தம் 505 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 சதங்கள், 102 அரை சதங்கள் உள்பட 16 ஆயிரத்து 268 ரன்களை குவித்துள்ளார். 



    மேலும், 505 போட்டிகளில் 331 போட்டிகளுக்கு கேப்டனாக பதவியேற்று டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் மூன்று விதமான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் எனும் வரலாற்று சாதனையையும் அவர் தன் வசம் வைத்துள்ளார். 

    இந்த பட்டியலில் 664 போட்டிகளில் விளையாடி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   #MSDhoni #RahulDravid
    இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்?, சமீபத்திய டெஸ்ட் தோல்வி ஆகியவை குறித்து எம்.எஸ் தோனி பேசியுள்ளார். #MSDhoni #TeamIndia
    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டனாக தோனி இருந்த கால கட்டத்தில் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆகியவற்றை இந்திய அணி வென்றது. 2017-ம் ஆண்டு ஜனவரியில் திடீரென ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 

    மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு அணியின் முன்னேற்றத்துக்கு அவர் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.

    இந்நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் பேசிய போது இதைப் பற்றி கூறியுள்ளார். "எனக்கு அடுத்து வரும் கேப்டன் 2019 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய தேவையான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான் விலகினேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

    “புதிய கேப்டன் சரியான நேரத்தை வழங்காமல் ஒரு வலுவான அணியை தேர்வு செய்வது சாத்தியமில்லை. நான் சரியான நேரத்தில் கேப்டனியை விட்டுவிட்டேன் என்று நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் 4-1 தோல்வி குறித்து பேசிய அவர், “இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதை தவறவிட்டது. அதனால் தான் வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இந்தியா தற்போது தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது என்று நாம் மறந்துவிடக் கூடாது” என தோனி பேசினார். 
    இந்தியா - இங்கிலாந்து மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சிக்கப்பட்ட நிலையில், கேப்டன் கோலி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். #ENGvIND #MSDhoni #Kohli

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்தார். இதனால், 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. 

    கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் சொதப்ப,
    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சுரேஷ் ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினார். 

    பெரிதும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தோனி 59 பந்துகளுக்கு 37 ரன்னில் வெளியேற இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.
    அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12-வது வீரர் என்ற தனிப்பட்ட சாதனையை தோனி நேற்று பெற்றிருந்தாலும், அவரது நேற்றைய ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது. இதனால், சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.

    இதற்கிடையே, தோனி மீதான விமர்சனத்துக்கு கோலி பதிலடி கொடுத்துள்ளார். “தோனி மீதான விமர்சனம் அணியினரை பாதிக்கவில்லை. அவர் களத்தில் நினைப்பதை செய்து முடிப்பதில் தோல்வி அடைந்தால், மீண்டும் மீண்டும் அவர் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒரு போட்டியை வைத்து ஒருவரின் செயல்திறனை முடிவு செய்வது பலரது மோசமான செயலாக உள்ளது. அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என கோலி தெரிவித்துள்ளார். 
    மகேந்திரசிங் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத், நிலவின் பின்புறத்தில் மாரே மஸ்கோவியென்ஸ் என்று அழைக்கப்படும் பகுதியில் இடம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பெயரும், புகழும் பெற்றார். தற்போது, வின்வெளி சம்பந்தப்பட்ட கதையில் தான் நடித்து வரும் ‘சந்தா மாமா தூர் கே’ என்ற படத்தை பிரபலப்படுத்துவதற்கா அல்லது தனது கனவை நிறைவேற்றுவதற்கா என தெரியவில்லை, நிலவில் அவர் இடம் வாங்கியுள்ளார்.

    பூமியில் இருந்து கண்ணுக்கு தெரியாத நிலவின் பின்பகுதி மாரே மஸ்கோவியென்ஸ் (Mare Muscoviense) என்று அழைக்கப்படும். இந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தான் வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மேடே 14 என்ற நவீன தொலைநோக்கியை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

    ‘பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கின்ற வெவ்வேறு வழிகளே கேள்விகளுக்கான பதில்கள் என்று நம்ப விரும்புகிறேன். எனவே நாம் விளக்கங்களை வரிசைப்படுத்துகின்ற விதத்தில் உள்ள மாறுபாடுகள், நுணுக்கம் ஆகியவை எதிர்காலத்தில் வேறுபட்ட பதிப்புகளை உருவாக்கும். நான் இப்போது ஒரு நுணுக்கத்தை நிறுத்துகிறேன் மற்றும் ஏற்கனவே, நான் நிலவையும் தாண்டிவிட்டேன்’ என அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

    சர்வதேச லூனார் நில பதிவகம் என்ற அமைப்பிடம் இருந்து அவர் நிலத்தை பதிவு செய்துள்ள முதல் பாலிவுட் நடிகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். எனினும், அவர் சட்டரீதியாக அந்த நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐபிஎல் 2018 சீசனில் ஒவ்வொரு வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை வைத்து மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. #IPL2018

    நடந்து முடிந்த ஐபிஎல் 2018 சீசனில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வீரர்களின் ஏலத்தின் போது வயது அதிகமான வீரர்களை சென்னை எடுக்கும் போது சென்னை சீனியர் கிங்ஸ் என பலரும் கிண்டல் செய்ய, விமர்சனங்களை உடைத்து தோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    குவாலிபயர், பைனல், 2 லீக் போட்டிகள் என 4 போட்டிகளிலும் ஐதராபாத் அணி சென்னையிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிசொதப்பியது, ஆரம்பத்தில் தொடர்ந்து தோற்று பின்னர் அனைவரும் வியக்கும் வண்ணம் சில வெற்றிகளை பெற்று மீண்டும் முக்கியமான போட்டிகளில் தோல்வி என ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி ரசிகர்களை ஏமாற்றியது என பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த சீசனில் நடந்தது.

    இளம் வீரர்களின் செயல்பாடும் இந்த சீசனில் சிறப்பாகவே இருந்தது. இந்நிலையில், வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை கொண்டு மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை ஹன்சா ரிசர்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.



    குறைந்தது 1 போட்டியில் விளையாடிய வீரர்கள் இந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு வீரர் அடித்த ரன், அரைச்சதம், சதம், விக்கெட், பிடித்த கேட்ச் ஆகியவற்றை கொண்டு அந்த வீரருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கணக்கின் படி நட்சத்திர வீரர்கள் அதிக புள்ளிகளை பெற்றிருந்தாலும், அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகை அதிமாக இருப்பதால் அவர்கள் பட்டியலில் பின் தங்குகின்றனர்.

    ஒரு வீரர் பெறும் ஒரு புள்ளிக்கு அணி எவ்வளவு செலவு செய்கிறது என்பதே இந்த கணக்கீடு. அதன்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக விராட் கோலியை எடுத்துக்கொண்டால் இந்த சீசனில் அவர் நான்கு அரைச்சதங்களுடன் 530 ரன்களை அடித்தார். அவர் பிடித்த கேட்ச் ஆகியவற்றை சேர்த்ததன் மூலம் 2225 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர், நேரடியாக ஏலம் எடுக்கப்படவில்லை என்றாலும் இந்த சீசனில் அவர் ரூ.17 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு 76,404 ரூபாயை அணி செலவளித்துள்ளது.

    இதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பெற்ற புள்ளிகள் 2450. அவர் இந்த சீசனில் சம்பளமாக பெற்ற தொகை ரூ.15 கோடி. எனவே, அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.61,224 ஆயிரம் ரூபாயை அணி அவருக்காக செலவளித்துள்ளது.

    சென்னை அணியின் மற்றொரு வீரர் அம்பாதி ராயுடு 2734 புள்ளிகள் எடுத்துள்ளார். ஆனால், அவர் பெற்ற சம்பளம் ரூ.2.2 கோடி மட்டுமே. இதன் மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு அணி செலவளித்த தொகை வெறும் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதன் காரணமாக தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரராக அறியப்படுகிறார்.



    இறுதிப்போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய அணி வீரர் வாட்சன் 3330 புள்ளிகளை பெற்றுள்ளார். அவர் பெற்ற ஊதியம் 4 கோடி என்பதால், அவரது ஒரு புள்ளிக்கு அணி செலவளித்துள்ள தொகை ரூ.12 ஆயிரம். பஞ்சாப் அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 1706 புள்ளிகளை பெற்றுள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.

    15 கோடி ஊதியம் பெற்ற ரோகித் சர்மா எடுத்துள்ள புள்ளி 1252, அவரின் ஒரு புள்ளிக்கு செலவளிக்கப்பட்ட தொகை 1,19,808 ரூபாய். இதேபோல, பந்துவீச்சாளர்களில் டெல்லி அணியில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஹர்சால் படேல் 2 கோடிக்கு எடுக்கப்பட்டு 830 புள்ளிகள் எடுத்துள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 860 ரூபாயை அணி செலவளித்துள்ளது. 

    இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய எல்லா வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
    ×