search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sushant Singh Rajput"

    • நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
    • இவரது வழக்கை பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பிரபல இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின.


    சுஷாந்த் சிங் ராஜ்புட் -ரியா சக்ரவர்த்தி

    இதையடுத்து மும்பை போலீசார் நடத்திவந்த இந்த விசாரணை மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன.

    சமீபத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.


    ரியா சக்ரவர்த்தி  பதிவு

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில், அவரது முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தி சமூக வலைதளத்தில் சுஷாந்த் சிங்குடன் இருக்கும் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து அவரை நினைவுக்கூர்ந்துள்ளார். ஒரு பாறையின் மேல் இவர்கள் இருவரும் இருக்கும் இந்த வீடியோவில் 'நீ இங்கு இருந்திருந்தால்' என்று பதிவிட்டுள்ளார்.

    சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    நெல்லை":

    டவுன் ரதவீதிகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    இதுதவிர மாநகர பகுதி முழுவதும் ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டு அதன்மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை வாசகங்கள் ஒலிக்கப்பட்டு கொண்டிருந்தன. மாநகரில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்கள் மூலமும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.

    வண்ணார்பேட்டை, சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு, சமாதானபுரம், ஐகிரவுண்டு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்தபடி ஓட்டிய இளைஞர்களை பிடித்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • பிரபல நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றன.

    பிரபல இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

    இதையடுத்து மும்பை போலீசார் நடத்திவந்த இந்த விசாரணை மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன.


    சுஷாந்த் சிங் ராஜ்புட்

    இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதுகுறித்து ரூப்குமார் கூறுகையில், "சுஷாந்த் சிங் மறைந்த அன்று எங்களது கூப்பர் மருத்துவமனைக்கு 5 சடலங்கள் வந்திருந்தன. அதில் ஒன்று விஐபி சடலம் என்றனர். நாங்கள் அங்கே போய் பார்த்தபோதுதான் அது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் என்பது தெரியவந்தது.


    சுஷாந்த் சிங் ராஜ்புட்

    அவரது உடலில் பல அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன, உடற்கூராய்வு செய்வதை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டும் எடுக்கச் சொன்னார்கள். அதனால் நாங்களும் அப்படியே செய்தோம்.

    சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சீனியர்களிடம் கூறினேன். ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் உடலை போலீசாரிடம் ஒப்படைத்தோம்" என அவர் கூறியுள்ளார்.

    • இந்திய திரையுலகின் முன்னணி பாலிவுட் நடிகராக விளங்கியவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
    • இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

    கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். இதை தொடர்ந்து பாலிவுட் சினிமா துறையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி போதைப்பொருள் தடுப்பு பிரிவி விசாரணையை தொடங்கி தற்போது வரை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை பல முக்கிய பிரபலங்கள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இன்றுமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாய் இருக்கிறது. இந்நிலையில், சுஷாந்த் சிங் புகைப்படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி-ஷர்ட்டை விற்பனை செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் "Depression is like drowning" (மன அழுத்தம் என்பது நீரில் மூழ்குவதைப் போன்றது) என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.



    சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி- ஷர்ட்

    இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது குறித்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

    அதுமட்டுமல்லாமல், பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் விற்பனை செய்யப்பட்ட டி-ஷர்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    • இந்திய திரையுலகின் முன்னணி பாலிவுட் நடிகராக விளங்கியவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
    • இவரின் தீவிர போதை பழக்கத்திற்கு உடந்தையாக இருந்ததாக ரியா சக்ரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவி குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். இதை தொடர்ந்து பாலிவுட் சினிமா துறையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி போதைப்பொருள் தடுப்பு பிரிவி விசாரணையை தொடங்கி தற்போது வரை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை பல முக்கிய பிரபலங்கள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


    நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் வழக்கில் 2020 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றார். ரியாவைத் தவிர, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி மற்றும் பலர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலோர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அறிக்கையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் உள்ளிட்ட குற்றவாளிகளிடமிருந்து பலமுறை கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.


    போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் குற்றம் சாட்டப்பட்ட 35 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் கூறபட்டு இருப்பதாவது:- குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த மார்ச் 2020 முதல் டிசம்பர் வரை ஒருவராகவோ அல்லது குழுக்களாகவோ இணைந்து பாலிவுட் மற்றும் உயர் சமூகத்தில் இருக்கும் நபர்களிடம் போதைப்பொருட்களை வாங்க, விற்க, விநியோகம் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்து உள்ளார்.


    மேலும் கஞ்சா, சரஸ், கோகோயின், சைக்கோட்ரோபிக் போன்ற போதை பொருட்களை உட்கொண்டார். குற்றம் சாட்டப்பட்ட சாமுவேல் மிராண்டா, ஷோயிக், திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து ரியா சக்ரோவர்த்தி பலமுறை கஞ்சா பெற்று, அதனை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் வழங்கியுள்ளார். இதன்மூலம், கடந்த மார்ச் 2020 முதல் ரியா சக்ரவர்த்தி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு வழங்கியது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரியாவின் சகோதரர் ஷோக் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். என அந்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    மகேந்திரசிங் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத், நிலவின் பின்புறத்தில் மாரே மஸ்கோவியென்ஸ் என்று அழைக்கப்படும் பகுதியில் இடம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பெயரும், புகழும் பெற்றார். தற்போது, வின்வெளி சம்பந்தப்பட்ட கதையில் தான் நடித்து வரும் ‘சந்தா மாமா தூர் கே’ என்ற படத்தை பிரபலப்படுத்துவதற்கா அல்லது தனது கனவை நிறைவேற்றுவதற்கா என தெரியவில்லை, நிலவில் அவர் இடம் வாங்கியுள்ளார்.

    பூமியில் இருந்து கண்ணுக்கு தெரியாத நிலவின் பின்பகுதி மாரே மஸ்கோவியென்ஸ் (Mare Muscoviense) என்று அழைக்கப்படும். இந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தான் வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மேடே 14 என்ற நவீன தொலைநோக்கியை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

    ‘பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கின்ற வெவ்வேறு வழிகளே கேள்விகளுக்கான பதில்கள் என்று நம்ப விரும்புகிறேன். எனவே நாம் விளக்கங்களை வரிசைப்படுத்துகின்ற விதத்தில் உள்ள மாறுபாடுகள், நுணுக்கம் ஆகியவை எதிர்காலத்தில் வேறுபட்ட பதிப்புகளை உருவாக்கும். நான் இப்போது ஒரு நுணுக்கத்தை நிறுத்துகிறேன் மற்றும் ஏற்கனவே, நான் நிலவையும் தாண்டிவிட்டேன்’ என அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

    சர்வதேச லூனார் நில பதிவகம் என்ற அமைப்பிடம் இருந்து அவர் நிலத்தை பதிவு செய்துள்ள முதல் பாலிவுட் நடிகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். எனினும், அவர் சட்டரீதியாக அந்த நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×