search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பத்திரம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • 15 பேர் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கின்றனர்.

    புதுடெல்லி:

    தேர்தல் பத்திர விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி வருகிற வியாழக்கிழமை மாலைக்குள், மறைக்ககூடிய அனைத்து தகவல்களையும் அதிலும் குறிப்பாக தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர் பெயர், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

    மேலும் இதனை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 2019-ம் ஆண்டு முதல் ஜனவரி 2024 வரையில் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 333 பேர் ரூ.358.91 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பத்திர தரவுகளில் கூறப்பட்டுள்ளது.


    இதில் 15 பேர் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கின்றனர். அவர்கள் மட்டும் ரூ.158.65 கோடிக்கு பத்திரங்களை வாங்கி உள்ளனர்.

    இதில் ஆர்செலர் நிறுவனத்தின் லெட்சுமி நிவாஸ் மெட்டல் ரூ.35 கோடிக்கும், ரிலைன்ஸ் லைப் சைன்சஸ் நிறுவனத்தின் லட்சுமி தாஸ் வல்லவதாஸ் ரூ.25 கோடி, ராகுல் பாட்டியா (இண்டிகோ) ரூ.20 கோடி, இந்தர் தாகுர் தாஸ் ஜெய்சிங்கனி (பாலிகேப் குழும நிறுவனங்கள்) ரூ.14 கோடி, ராஜேஷ் மன்னர்லால் அகர்வால் (அஜந்தா பார்மா லிமிடெட்) ரூ.13 கோடி என தரவுகள் காட்டுகின்றன. இவர்கள் உள்பட 15 கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் மட்டும் வாங்கிய பத்திரங்களின் மதிப்பு மொத்த மதிப்பில் 44.2 சதவீதம் என கூறப்படுகிறது.

    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிறுவனங்கள் கொடுத்த நன்கொடை, கட்சிகள் பெற்ற தொகை ஆகியவை வெளியிடப்பட்டது.
    • எந்த தகவலும் மறைத்து வைக்கப்படவில்லை என்ற உறுதி நாங்கள் அறிய விரும்புகிறோம்- கோர்ட்

    தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால் நன்கொடை கொடுக்கப்பட்ட நிறுவனங்கள், கட்சிகள் பெற்ற தொகை உள்ளிட்ட தகவல்களை மட்டும் முதலில் கொடுத்தது. நாங்கள் கொடுக்க சொன்னது அனைத்து தரவுகளையும் என உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. அப்போது பத்திரத்தின் சிறப்பு எண் (unique bond numbers), கொடுத்தவர் பெயர், அவர் எந்த கட்சிக்கு கொடுத்துள்ளார் என உள்ளிட்ட தகவல்களை கொடுக்கவும் வலியுறுத்தியது.

    இந்த நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரத்தின் சிறப்பு எண் உள்ளிட்ட எந்த தகவலும் மறைத்து வைக்கப்படவில்லை என்ற உறுதியை நாங்கள் பெற விரும்புகிறோம்.

    தனிப்பட்ட நன்கொடையாளர்கள், நிறுவனம் ஆகியவை மூலம் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும். இது தொடர்பாக வருகிற 21-ந்தேதிக்குள் (வியாழக்கிழமை) பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இன்றும் ஒரு உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் எஸ்பிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

    ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் ஒரு சிறப்பு வாய்ந்த எண் இருப்பதாகவும், இந்த எண் மூலமாக எந்த கட்சிக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம் எனவும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    தேர்தல் பத்திரத்தின் சிறப்பு நம்பரை வைத்து நன்கொடையாளர்கள் யாருக்கு பணம் வழங்கினார்கள் என்ற தகவலை முழுமையாக சேகரித்து அதை சரிபார்ப்பதற்காக எஸ்பிஐ ஜூன் மாதம் வரை அவகாசம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், அதிமுக தேர்தல் பத்திரம் மூல ரூ.6.05 கோடி நன்கொடை வாங்கியுள்ளது. அதில், 4 கோடி ரூபாயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.

    அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார். அதில், அதிமுக ஆட்சி நடைபெற்ற 2019- ம் ஆண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் நிதி அளித்தது தெரிய வந்துள்ளது.

    திமுக கட்சி தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தரப்பில் திமுகவுக்கு ரூ.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,334.35 கோடியும், சந்திரசேகர் ராவ்-ன் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ரூ.1,322 கோடியும் நிதி பெற்றுள்ளது

    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக ரூ.656 கோடியும், அதிமுக ரூ.6.05 கோடியும் நன்கொடை பெற்றுள்ளது

    • 2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது

    தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள் தனி தனியாக இருந்தது.

    இதனையடுத்து, உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.

    தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
    • தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.

    புதுடெல்லி:

    வங்கிகள் மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.

    அதில் 2019, ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15 வரை பல்வேறு கட்சிகளுக்கு 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டது என பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பணம் பெறுவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் புலனாய்வு பெண் பத்திரிகையாளர் பூனம் அகர்வால். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்த விவரங்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    புலனாய்வு செய்வதற்காக தேர்தல் பத்திரத்தை சொந்த செலவில் வாங்கி அதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினேன். தேர்தல் பத்திரம் மீதான எனது ஆர்வத்தால் தேர்தல் பத்திரத்தை தடயவியல் பரிசோதனை செய்ய ஆய்வுக்கு அனுப்பினேன். எனது முதல் 1,000 ரூபாய் தேர்தல் பத்திரத்தை ட்ரூத் லேப் தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்காக கொடுத்தபோது புற ஊதா கதிர்களின் கீழ் தனித்துவ அடையாள எண் மறைந்திருப்பது தெரியவந்தது

    இது ஒரு தனித்துவ அடையாள எண் என்பதை நிரூபிக்க மீண்டும் 1,000 ரூபாய் மதிப்புள்ள மேலும் ஒரு பத்திரத்தை வாங்கி

    தடயவியல் சோதனைக்கு அனுப்பினேன். அதிலும் தனித்துவ அடையாள எண் இருப்பதை உறுதி செய்தேன்

    இரு பத்திரங்களும் வெவ்வேறு எண்களை பத்திரங்களில் மறைத்து வைத்திருந்தன. எனவே பத்திரங்கள் மறைக்கப்பட்ட தனிப்பட்ட எண்களைக் கொண்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டது.

    எஸ்பிஐ மற்றும் ஆர்டிஐ பதிலில் இந்த தனிப்பட்ட எண்கள் பதிவு செய்யப்பட்டு, தணிக்கைப் பாதைக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. தனிப்பட்ட, மறைக்கப்பட்ட எண் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். எனவே இரண்டும் உண்மை. இது ஒரு பாதுகாப்பு அம்சம் மற்றும் தணிக்கை பாதைக்கும் பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

    • நாட்டை கொள்ளை அடித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
    • தற்போது தேர்தல் பத்திரம் தொடர்பான வெளிப்பாடுகள் பா.ஜதானவின் கொள்ளையை வெளிப்படுத்தியுள்ளது.

    எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜனதா அதிகபட்சமாக சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1,400 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜனதா அதிக நன்கொடை பெற்றுள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. மிரட்டி பணம் பெற்றதாக குற்றம் சாட்டுகின்றன.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் கொள்ளை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-

    தேர்தல் பத்திரம் தொடர்பான வெளிப்பாடுகள் காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளை அடித்துவிட்டது என்று தொடர்ச்சியாக கூறிவரும் பா.ஜதானவின் கொள்ளையை வெளிப்படுத்தியுள்ளது. கொள்ளையடித்த இவர்கள் கையில் நாட்டை கொடுக்கப் போகிறீர்களா?. நாட்டு மக்கள் விக்சித் பாரத் (வளர்ந்த நாடு) குறித்து கனவு கண்டு கொண்டிருக்கும்போது, பா.ஜனதா அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து நாட்டை கொள்ளை அடிக்க விரும்புகிறது.

    எங்களது கட்சி தலைவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. கார்பரேட் நிறுவனங்கள் பா.ஜனதாவுக்கு அதிக நன்கொடைகள் வழங்க மிரட்டப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை பெற்றுள்ளன. அதற்குப் பதிலாக பா.ஜனதாவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் வழங்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

    பா.ஜனதாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை கொள்ளை அடிக்க முடியாத காரணத்தில், தன்னுடைய தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • மொத்த பத்திரங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
    • பா.ஜனதா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. மீதமுள்ள 14 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே?

    தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்.

    தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்திருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன்.

    தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ஆதாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால், பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. ராகுல் காந்தி இது ஒரு மிகப்பெரிய மிரட்டி பணம் பறித்தல் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு இவ்வாறு யார் எழுதி கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

    பா.ஜனதா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. மொத்த பத்திரங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மீதமுள்ள 14 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை எங்கே போனது.

    திரிணாமுல் காங்கிரஸ் 1600 கோடி ரூபாய், காங்கிரஸ் 1400 கோடி ரூபாய், பாரத் ராஷ்டிரிய சமிதி 1200 கோடி ரூபாய், பிஜேடி 775 கோடி ரூபாய், திமுக 649 கோடி ரூபாய் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரம் இல்லாமல் பணம் மூலம் நேரடியாக நன்கொடையாக வழங்கும்போது.

    காங்கிரஸ் கட்சியில் 100 ரூபாய் டெபாசிஸ்ட் செய்து, ஆயிரம் ரூபாயை அவர்களுடைய வீட்டில் வைத்திருந்திருந்தனர். இது நீண்ட காலமாக நீடித்தது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நன்கொடையாளர்கள் அளித்த தொகை எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற தொகை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள்தான் இருந்தது.

    தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.

    தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், திங்கிட்கிழமை இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தரவுகளை சீலிட்ட கவரில் வழங்கிய தேர்தல் ஆணையம், இணைய தளத்தில் பதிவேற்ற நகல் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    • 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு.
    • 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு.

    எஸ்.பி.ஐ வழங்கிய தேர்தல் பத்திரத் தரவுகள், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    337 பக்க ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கியுள்ளன.

    இதில், 22,030 தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    • மொத்தம் 22,217 பத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 22,030 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு பரிமாற்றம்.
    • பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கும் பணம் வந்துள்ளது. அது வரவு வைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும், தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கவும் உத்தரவிட்டது.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் எஸ்பிஐ காலஅவகாசம் கேட்டது. உச்சநீதிமன்றம் எஸ்பிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், உடனடியாக (மார்ச் 12-ந்தேதி) வழங்க வேண்டும் என நேற்று முன்தினம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    அதன்படி நேற்று தேர்தல் ஆணையத்திடம் தகவல்களை எஸ்பிஐ வங்கி கொடுத்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது என்னென்ன? என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    அதில் "2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3,346 தேர்தல் பத்திரங்கள் கொள்முதல் செய்தோம். அதில் 1,609 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்பட்டது (பரிமாற்றம்).

    2019 ஏப்ரல் 12-ந்தேதி முதல் 2024 பிப்ரவரி 15-ந்தேதி வரை மொத்தமாக 18871 தேர்தல் பத்திரங்கள் கொள்முதல் செய்தோம். 20421 தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்க வழங்கப்பட்டது.

    மொத்தம் 22,217 பத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 22,030 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது (பணத்திற்குப் பதிலாக பரிமாற்றம்).

    தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பிடிஎஃப் (PDF Files) பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டும் வழங்கப்பட்டுள்ளது.

    187 பத்திரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்பட்ட பணம் சட்ட விதிமுறைப்படி பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×