search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் பத்திர விவரம்- இணையத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
    X

    தேர்தல் பத்திர விவரம்- இணையத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

    • 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு.
    • 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு.

    எஸ்.பி.ஐ வழங்கிய தேர்தல் பத்திரத் தரவுகள், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    337 பக்க ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கியுள்ளன.

    இதில், 22,030 தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×