search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electoral bond"

    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    • வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
    • தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.

    புதுடெல்லி:

    வங்கிகள் மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.

    அதில் 2019, ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15 வரை பல்வேறு கட்சிகளுக்கு 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டது என பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பணம் பெறுவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் புலனாய்வு பெண் பத்திரிகையாளர் பூனம் அகர்வால். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்த விவரங்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    புலனாய்வு செய்வதற்காக தேர்தல் பத்திரத்தை சொந்த செலவில் வாங்கி அதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினேன். தேர்தல் பத்திரம் மீதான எனது ஆர்வத்தால் தேர்தல் பத்திரத்தை தடயவியல் பரிசோதனை செய்ய ஆய்வுக்கு அனுப்பினேன். எனது முதல் 1,000 ரூபாய் தேர்தல் பத்திரத்தை ட்ரூத் லேப் தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்காக கொடுத்தபோது புற ஊதா கதிர்களின் கீழ் தனித்துவ அடையாள எண் மறைந்திருப்பது தெரியவந்தது

    இது ஒரு தனித்துவ அடையாள எண் என்பதை நிரூபிக்க மீண்டும் 1,000 ரூபாய் மதிப்புள்ள மேலும் ஒரு பத்திரத்தை வாங்கி

    தடயவியல் சோதனைக்கு அனுப்பினேன். அதிலும் தனித்துவ அடையாள எண் இருப்பதை உறுதி செய்தேன்

    இரு பத்திரங்களும் வெவ்வேறு எண்களை பத்திரங்களில் மறைத்து வைத்திருந்தன. எனவே பத்திரங்கள் மறைக்கப்பட்ட தனிப்பட்ட எண்களைக் கொண்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டது.

    எஸ்பிஐ மற்றும் ஆர்டிஐ பதிலில் இந்த தனிப்பட்ட எண்கள் பதிவு செய்யப்பட்டு, தணிக்கைப் பாதைக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. தனிப்பட்ட, மறைக்கப்பட்ட எண் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். எனவே இரண்டும் உண்மை. இது ஒரு பாதுகாப்பு அம்சம் மற்றும் தணிக்கை பாதைக்கும் பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

    • தேர்தல் பத்திரம் செல்லாது, வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
    • நன்கொடையாளர்களின் விவரங்களை கொடுக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

    அதோடு தேர்தல் பத்திரம் வினியோகத்தை எஸ்பிஐ வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும். நன்கொடை அளித்தவர்கள் விவரம், ஒவ்வொரு கட்சிகளுக்கும் யார் யார் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளனர் என்பது தொடர்பான முழு விவரங்களையும் எஸ்பிஐ வங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் அதனுடைய அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    ஆனால் எஸ்பிஐ வங்கி, உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த காலத்திற்குள் அளிக்க முடியவில்லை. ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. யாரை காப்பாற்றுவதற்கு காலஅவகாசம் கேட்கிறது என கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் எஸ்பிஐ வங்கிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிக்கு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எஸ்பிஐ வேண்டுமென்றே அவமதிப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த மனுவை பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க ரூ.5,029 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்கு முன்பு பணமாக வழங்கப்பட்டது. இதில் கருப்பு பணம் புழங்குவதாக புகார் எழுந்ததால் இதனை தடுக்க தேர்தல் பத்திரங்களாக வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. பதிவு பெற்ற அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சிகளும் இந்த தேர்தல் பத்திரங்களை பெறமுடியும்.

    இந்தியாவை சேர்ந்த தனிநபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தேர்தல் பத்திரத்தை வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுக்கலாம். அவர்கள் வங்கி கணக்கு மூலம் அந்த பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே வழங்கும். இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவர், இதுவரை எத்தனை தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது, அதன் மதிப்பு எவ்வளவு? வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பெயர் என்ன? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார்.

    இதற்கு பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் நரேஷ்குமார் ரஹேஜா பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மே 4-ந் தேதி வரை மொத்தம் ரூ.5,029 கோடி மதிப்புள்ள 10,494 தேர்தல் பத்திரங்கள் 9 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தனிநபர் அல்லது நிறுவனங்கள் பெயரை வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதனை தெரிவிக்க முடியாது. வெளியிட்ட 10,494 தேர்தல் பத்திரங்களில் 10,388 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுவிட்டது. அதன் மதிப்பு மட்டும் ரூ.5,011 கோடி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தகவல் பற்றி கருத்து தெரிவித்த மனுதாரர் மனோரஞ்சன் ராய் கூறியதாவது:-

    தேர்தல் பத்திரங்கள் அதிகரித்திருப்பது அரசியல் கட்சிகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தூய்மையற்ற தொடர்பை சட்டபூர்வமாக்கியது தானே தவிர வேறு ஒன்றுமில்லை. இது நாட்டில் பெரிய அளவிலான ஊழலுக்கு தான் வழிவகுக்கும். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டு இருந்தால் இந்த அழிவு சற்று குறையும்.

    பெரு நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகையை சமுதாய பொறுப்புள்ள திட்டங்களுக்கோ, ஏழைகள் மற்றும் தேவையுள்ள பயனாளிகளுக்கோ செலவழித்து இருக்கலாம். மற்றபடி இந்த நன்கொடை அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு தான் பயன்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×