search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூர்வாரும் பணி"

    • மேட்டூரில் தண்ணீர் திறப்புக்கு முன்பாகவே தூர்வாரும் பணி அதிரடியாக திட்டமிட்டு 100 சதவீதம் கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூரில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லின் தண்ணீரை திறந்து விட்டார் .இதனைத்தொடர்ந்து அனைத்து டெல்டா மாவட்ட பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்க ப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வழி காணப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் டெல்டா பகுதிகளில் பாசனம் பெறும் காட்டுமன்னா ர்கோயில், பரங்கிப்பேட்டை, மேல் புவனகிரி, குமராட்சி, கீரப்பாளையம் ஆகிய வட்டாரங்களில் இத்தொகுப்பு திட்டம் ரூ. 8.41 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த ப்படுகிறது. முன்னதாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறுவைத் தொகுப்பு திட்டத்தை கடலூர் மாவட்ட விவசாயிகள் 15 பேருக்கு முதல் கட்டமாக வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    எம்.எல்.ஏ.க்க ள்வேல்முருகன்,சபா ராஜே ந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன் வரவேற்றார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், வேளாண்மை துறை அதிகாரிகள் ரவிச்சந்திரன் ,கென்னடி ஜெபக்குமார், ஜெயக்குமார் ,கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா,துணை மேயர் தாமரைச்செல்வன் ,கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வேளாண்மை த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது-

    மேட்டூர் அணை திட்டமிட்டு படி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்தில் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஏக்கருக்கு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்க ரூ. 75 .95 கோடி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. மேட்டூரில் தண்ணீர் திறப்புக்கு முன்பாகவே தூர்வாரும் பணி அதிரடியாக திட்டமிட்டு 100 சதவீதம் கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது தண்ணீர் தேவையில்லை. ஆனால் 2 மாதங்களுக்கு பின்பு தான் தண்ணீர் தேவை என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிகரித்து 5 லட்சம் ஏக்கர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் இருந்து பாசனத்திற்கு காவேரி தண்ணீர் பெறும் வேலையை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். அதே போன்று கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டிய உரிமை நமக்கு இருக்கிறது. பருவ நிலையில் தற்போதுகர்நாடகாவிலும் மழைப்பொழிவு தொடங்கியுள்ளது. எனவே விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். குருவை சாகுபடி நடவு பணி கிட்டத்தட்ட 3.5 லட்சம் ஏக்கருக்கு மேல் நடந்து கொண்டிருக்கிறது. நடவு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு எந்திர நடவிற்கு வேளாண் துறை சார்பில் உரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. எந்திரம் மூலம் நடவு செய்தால் விதையின் தேவை குறையும். மேலும் செலவும் குறைவு ஏற்படும். அ.தி.மு.க.கட்சி நடத்துவதற்காக எது வேண்டுமானாலும் சொல்லுவார்கள். கடந்த காலங்களில் எங்கு தூர்வாரும் பணி நடைபெற்றது. தண்ணீர் வரும்போது அவசர நிலையில் தூர்வாரினார்கள். ஆனால் தற்போது முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 99 சதவீதம் தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.

    மழையின் காரணமாக வரத்து குறைவால் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளது. டெல்லியிலும் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறி விலைகள் அதிகரித்து உள்ளது. இது சரி செய்யப்படும். சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக அனைத்து காலங்களிலும் காய்கறிகள் விளைவிக்க தொழி ல்நுட்பத்தின் வாயிலாகவும் பருவ நிலைக்கு ஏற்ற வகையிலும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளது குறித்து பல்கலைக்கழக ங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காய்கறிகளை யார் பதுக்கினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இவ்வாறுஅவர் கூறினார்.

    • கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும்.
    • காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் மூலமாக கீழ் பவானி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இப்பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பாசன விவசாய பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாய்க்கால் சீரமைப்பு ஒப்பந்ததாரர்கள் எந்திரங்களை கொண்டு வாய்க்கால் கரையில் உள்ள மண்ணை அகற்றி உள்ளனர்.

    இதைப்பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். கீழ்பவானி வாய்க்கால் கரையை பலப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கருங்கரடுவில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்குள்ள வாய்க்காலுக்குள் இறங்கி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பெருந்துறை தாசில்தார் பூபதி, பெருந்துறை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உள்பட பல்வேறு அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் நல்ல நிலையில் இருந்த கால்வாயில் கரையை உடைத்த பகுதியை மீண்டும் அதை மண்ணை கொண்டு பலப்படுத்த வேண்டும் அமைக்க கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனினும் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த காத்திருப்பு போராட்டம் இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சூலூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பலர் இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.
    • சென்னையைச் சேர்ந்த அபெக்ஸ் மருந்து நிறுவனம் பணிகளை மேற்கொண்டு உள்ளது.

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரும் பாதைகள் புதர் மண்டி கிடந்தது.

    இதனால் மழை காலங்களில் சூலூர் சிறிய மற்றும் பெரிய குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருந்தது.

    இதனையடுத்து சூலூர் பேரூராட்சி மூலம் பொதுப்பணித்துறையினருக்கு புதர் மண்டி கிடக்கும் நீர்வழிப் பாதையை சீர் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.பொதுப்பணித்துறை அனுமதி அளித்தவுடன் சூலூர் பேரூராட்சி நிர்வாகம் சூலூர் பேரூராட்சித் தலை வர் தேவி மன்னவன் தலைமையிலும் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியோர் இணைந்து திட்ட செயலாக்க பணிகளை மேற்கொண்டனர்.

    இப்பணிகளில் சூலூர் சிறிய குளத்தில் இருந்து செங்கத்துறை வரை செல்லும் நீர் வழி பாதை, ராவத்தூரில் இருந்து பெரிய குளம் வரை வரும் ராஜா வாய்க்கால் பாதை உள்ளிட்டவை சீர்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அபெக்ஸ் மருந்து நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது.

    இப்பணியில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் மற்றும் சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், கோவிந்தராஜன், பேரூராட்சி துணை தலைவர் சோலை கணேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாநிதி, விஜயகுமார், மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர் சுந்தரராஜன், உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது.
    • நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. நொய்யல் ஆற்றுக்கு ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம், சபரி ஓடை, மந்திரி வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக நீர் வந்து சேர்கிறது. இதில் ஜம்மனை ஓடை மங்கலம் ரோட்டிலும், சபரி ஓடை காங்கயம் ரோட்டிலும், சங்கிலிப்பள்ளம் தாராபுரம் ரோடு மற்றும் காங்கயம் ரோட்டிலும் கடந்து சென்று நொய்யல் ஆற்றில் சேர்கிறது.

    தற்போது தென் மேற்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் இந்த ஓடைகள் வாயிலாக நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக தற்போது மண் மேடுகளும், முட்செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கும் ஓடைகளை தூர்வாரி நீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சங்கிலிப் பள்ளம் ஓடையில் நிரம்பியுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் எந்திர வாகனம் மூலம் தூர்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    • காலத்தில் பெய்யும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக தமிழக அரசின் நீர் வள ஆதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • தூர் வாரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உதவி செயற்பொறியாளரை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் மழை காலத்தில் பெய்யும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக தமிழக அரசின் நீர் வள ஆதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதையொட்டி, கண்ணூர்பட்டி கிராமத்தில், வள்ளி அணைக்கட்டு மேல்புறம், கீழ்புறம் மற்றும் வரட்டாறு அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 3.153 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கதிரநல்லூர் கிராமத்தில் வரட்டாறு அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.535 தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    பொடங்கம் கிராமத்தில் பொடங்கம் தடுப்பணை மேல்புறம் மற்றும் கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.835 கி.மீ தொலைவிற்கு தூர் வாரும் பணி நடக்கிறது. தாத்தாதிபுரம் கிராமத்தில் கட்டியண்ணன் கோயில் அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், 1.90 கி.மீ தொலைவிற்கு தூர் வாரும் பணி நடக்கிறது.

    கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 10.17 கி.மீ தொலைவிற்கு நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு செய்தார்.

    அப்போது, தூர் வாரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உதவி செயற்பொறியாளரை கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
    • உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    நீர்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட் கலெக்டர் .அருண் தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 -ம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், 100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை கிராமத்தில் மீதிக்குடி வாய்கால் 21.21 கி.மீ நிளத்திற்கு 20.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வரும் பணியினையும், வேளக்குடி கிராமத்தில் கவரப்பட்டு வாய்க்கால் 9 கி.மீ நீளத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும், காட்டுமன்னார்கோயில் கோப்பாடி கிராமத்தில் பழைய கொள்ளிடம் 3.20 கி.மீ நீளத்திற்கு ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், கீழவன்னியூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் 2.50 கி.மீ நீளத்திற்கு ரூ.25லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடி பணிகள் முன்னேற்றம் குறித்தும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின்) வாயிலாக சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பகுதியில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.435 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணி முடிவுற்று அணுகு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • திருவெறும்பூர் தொகுதியில் நடப்பாண்டில் 94 கி.மீட்டர் நீளத்திற்கு நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
    • காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகள் 4 ஆயிரத்து 4 கிலோ மீட்டர் வரை மேற்கொள்வதற்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    தமிழக முதல்வர் உத்தரவின்படி 2023 மற்றும் 2024 -ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகள் 4 ஆயிரத்து 4 கிலோ மீட்டர் வரை மேற்கொள்வதற்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மண்டலத்தில் தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே சோழமாதேசி உய்யகொண்டான் உள்ள சோழமாதேவியில் உய்யகொண்டான் வாய்க்காலலில் 32.2 மைல் முதல் 36.4 மைல் வரை தூர்வாரும் பணியை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது.டெல்டா விவசாயிகளை பாதுகாக்குவதற்காக நீர்வளத் துறை சார்பில் உள்ள வாய்க்கால்களை தூர் வருவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் தேவை உணர்ந்து தமிழக அரசு செயல்படுகிறது. கடந்த ஆண்டு நீர்வளத் துறை சார்பில் தூர் வருவதற்கு ரூ.66 கோடி ஒதுக்கப்பட்டது. தற்பொழுது ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டு திருச்சி மட்டுமல்லாது டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிகள் நடைபெறுகிறது.

    திருவெறும்பூர் தொகுதியில் 26 இடங்களில் சுமார் 94.70 கி.மீட்டர் தொலைவிற்கு ரூ. 3.58 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகிறது. இந்த தூர் வாரும் பணியாக 6.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 24.8 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.ஜூன் 3-ந் தேதி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்பாகவே இந்த பணி நிறைவடையும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த விழாவில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் நீர்வளத்துறை ராமமூர்த்தி, செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர் தினேஷ் கண்ணன், உதவி பொறியாளர் சதீஷ், முன்னாள் எம்எல்ஏ சேகரன், திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ், சோழமாதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், திமுக நிர்வாகிகள் ஜெகதீசன், சண்முகம், ராஜா, கயல்விழி, முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.15 லட்சத்தில் சின்னாறு ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது
    • பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம் தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சின்னாறு ஏரி. இந்த ஏரிக்கு கோனேரி ஆற்றில் அமைந்துள்ள சின்னாறு அணைக்கட்டு மூலம் தண்ணீர் வருகிறது. இதன்மூலம் 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்த ஏரியின் வரத்து வாய்க்கால்கள் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், முட்புதர்கள் மற்றும் மண் மேடு ஏற்பட்டு தண்ணீர் வரத்து நின்றது. இதனால் பாசன வசதி பெற்ற நிலங்களை கொண்ட விவசாயிகள் அவதிப்பட்டனர்.

    சின்னாறு அணைக்கட்டு முதல் சின்னாறு ஏறி வரை உள்ள சுமார் 4 கி.மீ தொலைவிற்கு வரத்து வாய்க்கால் முழுவதையும் தூர்வார மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு, ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியை இன்று கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ. பிரபாரகன் முன்னிலையில் தொடங்கிவைத்தார். இந்த பணி வரும் ஜூன் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படடுகிறது. இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், மருதையாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிசந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கோடை நெல் சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளோம்.

    எனவே விதை, உரம் ஆகியவற்றை அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்க வேண்டும்.

    மாவட்டத்தில் விவசாயி களிடம் கருத்துக்களை கேட்ட பிறகு தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    வெண்ணாறு கோட்டம் பிள்ளை வாய்க்காலில் இருந்து பிரியும் கழுமங்கலம் வாய்க்கால் தலைப்பில் இருந்து இறுதி வரை வெட்டி தூர்வார வேண்டும்.

    விவசாயிகளுக்கு களைக்கொல்லி மருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.

    சத்துணவு திட்டத்தில் மதிய உணவில் வாரம் இரண்டு வாழைப்பழம் வழங்கினால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.

    இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கால்வாயை கிராம மக்கள் தூர்வாரினர்.
    • குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    தென் மாவட்ட நதிகளில் கடலில் கலக்கும் நதிகளில் ஒன்றாக குண்டாறு திகழ்கிறது. திருமங்கலம், வடகரை, மைக்குடி, தூம்பக்குளம் வழியாக காரியாபட்டி, கமுதி வரை குண்டாறு சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. குண்டாறு செல்லும் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த கிராமங்களுக்கு செல்கிறது.

    குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டாறு தூர்வாரப்படாததால் முட்புதர்கள் செடி, கொடிகள் அடைத்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த பகுதி மக்கள் மழைக்காலத்திற்கு முன்பே குண்டாற்றை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வடகரை வழியாக மைக்குடி, தூம்பகுளம் சென்று அந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பும். தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் தூம்பக்குளம் கிராம மக்கள் திரண்டு தங்கள் பகுதி கண்மாய்க்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக குண்டாற்றை தூர் வாரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுப்பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் தூம்பக்குளம் கிராம மக்கள் கால்வாயை தூர்வாரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஓடையின் மீது பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

    நாகர்கோவில்:

    பொய்கை அணையில் இருந்து வருகின்ற ஓடை யானது வடக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வந்து தாணு மாலையன்புதூர் மற்றும் நாகர்கோவில்- திருநெல்வேலி நெடுஞ்சா லையினை கடந்து வடக்கு பெருமாள்புரம், ஆலடிநகர் வழியாக ராமர்குளத்தை வந்து அடைகிறது.

    இந்த ஓடையானது பல ஆண்டுகளாக தூர் வாரப்ப டாமல் செடி, கொடிகள் படர்ந்து சகதிகளாக காணப்பட்டதால் சுகாதார கேடு ஏற்படுகின்ற நிலை ஏற்பட்டதுடன் மழை காலங்களில் வெள்ளங்கள் சரியாக செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது. இத னால் அப்பகுதி பொது மக்கள் இந்த பொய்கை ஓடையினை தூர் வார வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனால் நேற்று பொக் லைன் இயந்திரம் மூலம் ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கியது. ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் முன்னிலையில் கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

    மேலும் அப்பகுதி பொதுமக்கள் இந்த ஓடை யினை சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி யதற்கு நன்றி தெரிவித்த வுடன் இந்த ஓடையின் கரை ஓரமாக பொதுமக்கள் செல்லும் வசதியாக சாலை அமைத்து தர வேண்டும் எனவும், மேலும் சுகாதார கேடு ஏற்படாதவாறு இந்த ஓடையின் மீது பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பால கிருஷ்ணன், சுந்தரம் பிள்ளை, சுயம்புலிங்கம் சிவசங்கரன், வீரபாகு மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    • இந்த பணிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    காரைக்குடி

    தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் ஆலோசனையின் படி மழைக்காலம் வருவதை யொட்டி காரைக்குடியில் போர்க்கால அடிப்படையில் அனைத்து வாடுகளிலும் உள்ள மழை நீர் வடியும் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி ேஜ.சி.பி. மூலம் நடந்த வருகிறது.

    இந்த பணிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன்,துணைப் பொறியாளர் சீமா,சுகாதார ஆய்வாளர் சுந்தர், நகர்மன்ற உறுப்பினர்கள் சோனா.கண்ணன், ரத்தினம், மலர்விழி, துரைநாகராஜ், அன்னை மைக்கேல், லில்லி தெரசா, தனம் சிங்கமுத்து, திவ்யா, கார்த்தி, விஷ்ணு பெருமாள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×