search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் ரூ.50 லட்சத்தில் தடுப்பணைகள் தூர்வாரும் பணி
    X

    வரட்டாறு அணைப்பகுதியில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    நாமக்கல் மாவட்டத்தில் ரூ.50 லட்சத்தில் தடுப்பணைகள் தூர்வாரும் பணி

    • காலத்தில் பெய்யும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக தமிழக அரசின் நீர் வள ஆதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • தூர் வாரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உதவி செயற்பொறியாளரை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் மழை காலத்தில் பெய்யும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக தமிழக அரசின் நீர் வள ஆதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதையொட்டி, கண்ணூர்பட்டி கிராமத்தில், வள்ளி அணைக்கட்டு மேல்புறம், கீழ்புறம் மற்றும் வரட்டாறு அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 3.153 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கதிரநல்லூர் கிராமத்தில் வரட்டாறு அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.535 தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    பொடங்கம் கிராமத்தில் பொடங்கம் தடுப்பணை மேல்புறம் மற்றும் கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.835 கி.மீ தொலைவிற்கு தூர் வாரும் பணி நடக்கிறது. தாத்தாதிபுரம் கிராமத்தில் கட்டியண்ணன் கோயில் அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், 1.90 கி.மீ தொலைவிற்கு தூர் வாரும் பணி நடக்கிறது.

    கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 10.17 கி.மீ தொலைவிற்கு நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு செய்தார்.

    அப்போது, தூர் வாரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உதவி செயற்பொறியாளரை கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×