search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
    X

    வாய்க்கால்கள் தூர்வாரும் பணியினை நகர்மன்ற தலைவர் முத்துதுரை ஆய்வு செய்தார்.

    வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

    • வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    • இந்த பணிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    காரைக்குடி

    தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் ஆலோசனையின் படி மழைக்காலம் வருவதை யொட்டி காரைக்குடியில் போர்க்கால அடிப்படையில் அனைத்து வாடுகளிலும் உள்ள மழை நீர் வடியும் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி ேஜ.சி.பி. மூலம் நடந்த வருகிறது.

    இந்த பணிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன்,துணைப் பொறியாளர் சீமா,சுகாதார ஆய்வாளர் சுந்தர், நகர்மன்ற உறுப்பினர்கள் சோனா.கண்ணன், ரத்தினம், மலர்விழி, துரைநாகராஜ், அன்னை மைக்கேல், லில்லி தெரசா, தனம் சிங்கமுத்து, திவ்யா, கார்த்தி, விஷ்ணு பெருமாள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×