search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drilling"

    தற்போது பெய்து வரும் பருவமழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார கிராமமான 'மோவூர் முட்டம். கால்நாட்டா ம்புலியூர் ,ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் பருவமழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வேளாண்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் உத்தரவின் பேரில் கீழணை உதவி செயற் பொறியாளர் ெகாளஞ்சிநாதன் முன்னிலையில் குமராட்சி உதவி பொறியாளர் அருளரசன் ஆகியோரின் நேரடி பார்வையில்இந்தப் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தற்பொழுது தூர்வாரப்பட்டு முடிவடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • வாணி ஊரணியை பொதுமக்கள் தூர்வாரினர்.
    • தூர்வாரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வையிட்டு பாராட்டினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த வாணி கிராமத்தில் மன்னர் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட குளம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாணி ஊரணி பெரிய பரப்பளவை கொண்டதால் அதனை தூர்வார அதிகளவில் நிதி செலவினம் ஆகும். இதனால் தூர்வாறும் பணி தாமதமானது.

    இதுகுறித்து தற்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் சக்கரக்கோட்டை ஊராட்சி மூலம் ரூ.2 லட்சம் நிதி வழங்க பரிந்துரைத்தார். அதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் செ.யாழினி புஷ்பவள்ளி நிதியை அனைத்து சமுதாய மக்களிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து வாணி கிராம ஜமாத்தார்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றி ணைந்து வாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் ரூ. 20 லட்சம் வரை திரட்டினர்.

    அதனை தொடர்ந்து ஊரணியை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பொதுமக்களின் சீரிய முயற்சியால் தூர்வா ரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வை யிட்டு பாராட்டினார்.அதனைத் தொடர்ந்து மழை வேண்டி அனைத்து சமுதாய மக்களால் பிரார்த் தனை செய்யப்பட்டது.

    • அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
    • லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட் பட்ட முதுநகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். 

    கலெக்டர் அருண்தம்பு ராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜய லட்சுமி செந்தில், பால சுந்தர், மாவட்ட பிரதிநிதி கள் துர்கா செந்தில், மஸ்கட் புகழேந்தி, பகுதி துணை செயலாளர்கள் வக்கீல் பாபு, லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலத்தில் பெய்யும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக தமிழக அரசின் நீர் வள ஆதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • தூர் வாரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உதவி செயற்பொறியாளரை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் மழை காலத்தில் பெய்யும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக தமிழக அரசின் நீர் வள ஆதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதையொட்டி, கண்ணூர்பட்டி கிராமத்தில், வள்ளி அணைக்கட்டு மேல்புறம், கீழ்புறம் மற்றும் வரட்டாறு அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 3.153 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கதிரநல்லூர் கிராமத்தில் வரட்டாறு அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.535 தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    பொடங்கம் கிராமத்தில் பொடங்கம் தடுப்பணை மேல்புறம் மற்றும் கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.835 கி.மீ தொலைவிற்கு தூர் வாரும் பணி நடக்கிறது. தாத்தாதிபுரம் கிராமத்தில் கட்டியண்ணன் கோயில் அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், 1.90 கி.மீ தொலைவிற்கு தூர் வாரும் பணி நடக்கிறது.

    கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 10.17 கி.மீ தொலைவிற்கு நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு செய்தார்.

    அப்போது, தூர் வாரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உதவி செயற்பொறியாளரை கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
    • உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    நீர்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட் கலெக்டர் .அருண் தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 -ம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், 100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை கிராமத்தில் மீதிக்குடி வாய்கால் 21.21 கி.மீ நிளத்திற்கு 20.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வரும் பணியினையும், வேளக்குடி கிராமத்தில் கவரப்பட்டு வாய்க்கால் 9 கி.மீ நீளத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும், காட்டுமன்னார்கோயில் கோப்பாடி கிராமத்தில் பழைய கொள்ளிடம் 3.20 கி.மீ நீளத்திற்கு ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், கீழவன்னியூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் 2.50 கி.மீ நீளத்திற்கு ரூ.25லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடி பணிகள் முன்னேற்றம் குறித்தும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின்) வாயிலாக சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பகுதியில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.435 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணி முடிவுற்று அணுகு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விளைநிலங்களில் அதிகபட்சமாக தேங்கும் மழை நீரை எளிதில் வெளியேற்றி விடலாம்.
    • கோடை காலத்திலேயே இந்த 2 வாய்க்கால்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கோரைபள்ளம் மற்றும் கீழேரி ஆகிய 2 வாய்க்கால்கள் அப்பகுதியில் முக்கிய பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகின்றது.

    இந்த 2 வாய்க்கால்கள் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வடிகால் வசதியையும் பெறுகின்றன

    இந்த இரு வாய்க்கால்களும் அப்பகுதியில் உள்ள பிரதான கெண்டைமடை வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களாக பிரிந்து மாதிரவேளூருக்கு அருகில் கடந்த 1904-ம் ஆண்டு தெற்கு ராஜன் வாய்க்காலுக்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.

    இந்த வாய்க்கால்களை தூர்வாருவதன் மூலம் மழைக்காலத்தில் அப்பகுதியில் உள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் அதிகபட்சமாக தேங்கும் மழை நீரை எளிதில் வெளியேற்றி விடலாம்.

    மேலும் அப்பகுதியில் நிலங்களுக்கு சீரான பாசன வசதியும் கிடைக்கும் எனவே கோடை காலத்திலேயே இந்த 2 வாய்க்கால்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    கோரிக்கையின் பேரில் மயிலாடுதுறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம் உத்தரவின் பேரிலும், சீர்காழி உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரிலும் நேற்று கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன், பாசன ஆய்வாளர்கள் சீனிவாசன், முருகேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லின் எந்திரம் மூலம் கீழேரி மற்றும் கோரைபள்ளம் ஆகிய இரு பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை தொடங்கினர்.

    மேலும் இரண்டு தினங்களில் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள 2 வாய்க்கால்களும் முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது கோடைகாலத்திலேயே விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று வாய்க்கால்களை தூர்வாரும் பணி தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ரூ.15 லட்சத்தில் சின்னாறு ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது
    • பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம் தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சின்னாறு ஏரி. இந்த ஏரிக்கு கோனேரி ஆற்றில் அமைந்துள்ள சின்னாறு அணைக்கட்டு மூலம் தண்ணீர் வருகிறது. இதன்மூலம் 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்த ஏரியின் வரத்து வாய்க்கால்கள் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், முட்புதர்கள் மற்றும் மண் மேடு ஏற்பட்டு தண்ணீர் வரத்து நின்றது. இதனால் பாசன வசதி பெற்ற நிலங்களை கொண்ட விவசாயிகள் அவதிப்பட்டனர்.

    சின்னாறு அணைக்கட்டு முதல் சின்னாறு ஏறி வரை உள்ள சுமார் 4 கி.மீ தொலைவிற்கு வரத்து வாய்க்கால் முழுவதையும் தூர்வார மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு, ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியை இன்று கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ. பிரபாரகன் முன்னிலையில் தொடங்கிவைத்தார். இந்த பணி வரும் ஜூன் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படடுகிறது. இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், மருதையாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிசந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கோடை நெல் சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளோம்.

    எனவே விதை, உரம் ஆகியவற்றை அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்க வேண்டும்.

    மாவட்டத்தில் விவசாயி களிடம் கருத்துக்களை கேட்ட பிறகு தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    வெண்ணாறு கோட்டம் பிள்ளை வாய்க்காலில் இருந்து பிரியும் கழுமங்கலம் வாய்க்கால் தலைப்பில் இருந்து இறுதி வரை வெட்டி தூர்வார வேண்டும்.

    விவசாயிகளுக்கு களைக்கொல்லி மருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.

    சத்துணவு திட்டத்தில் மதிய உணவில் வாரம் இரண்டு வாழைப்பழம் வழங்கினால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.

    இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    • இந்த பணிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    காரைக்குடி

    தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் ஆலோசனையின் படி மழைக்காலம் வருவதை யொட்டி காரைக்குடியில் போர்க்கால அடிப்படையில் அனைத்து வாடுகளிலும் உள்ள மழை நீர் வடியும் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி ேஜ.சி.பி. மூலம் நடந்த வருகிறது.

    இந்த பணிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன்,துணைப் பொறியாளர் சீமா,சுகாதார ஆய்வாளர் சுந்தர், நகர்மன்ற உறுப்பினர்கள் சோனா.கண்ணன், ரத்தினம், மலர்விழி, துரைநாகராஜ், அன்னை மைக்கேல், லில்லி தெரசா, தனம் சிங்கமுத்து, திவ்யா, கார்த்தி, விஷ்ணு பெருமாள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • விரைவில் குந்தா அணை முழுமையாக தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டி 

    நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின் உற்பத்திக்குபின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.

    பின்னர், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 ெமகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கெத்தை மின்நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களின் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணையை தூர் வாராததால் அணையில் பெருமளவு சேறு, சகதிகள் தேங்கியுள்ளன. 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளன. குறைந்தபட்ச மழை பெய்தாலே அணை நிரம்பி விடும். மேலும் சேறு, சகதிகளால் அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.

    இந்த அடைப்பால் கெத்தை மின்நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுக்கு முன் உலக வங்கி நிதியுதவியின் மூலம் குந்தா அணையை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் சேறு, சகதி மற்றும் கழிவுகளை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொட்டுவதற்கு உரிய இடம் தேர்வாகாததாலும், காலதாமதம் ஏற்பட்டதால் குந்தா அணை தூர்வாரும் நடவடிக்கையிலும் தடங்கல் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, தற்போது மின்வாரியம் தரப்பில் குந்தா அணை தூர் வார மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அணைகள் மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூ.40 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்ட மதிப்பீடானது ஒன்றிய நீர்வளத்துறை மற்றும் உலக வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட் டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விரைவில் குந்தா அணை முழுமையாக தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டை கடந்து விட்டன.
    • மின்சாரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயன்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரியில், குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், 13 அணைகள் உள்ளன. பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டை கடந்து விட்டன.

    நீலகிரி அணைகளில் இருந்து, 833.65 மெகாவாட் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

    குந்தா, கெத்தை, பில்லூர் அவலாஞ்சி அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்து, ராட்சத குழாய்களில் கொண்டு சென்று மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த மின்சாரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயன்படுகிறது. சகதி நிறைந்த அணைகள் துார்வாரப் பட்டு, பல ஆண்டுகள் ஆனதால், தண்ணீர் தேக்கி வைப் பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.

    இதனால், பருவ மழையின் போது, ஏராளமான நீர் வீணாக வெளி யேறுகிறது. சேறும், சகதியுமான அணைகளை உடனடியாக துார்வார வேண்டி இருப்பதால், மின்வாரிய தலைமை அலுவலகம் இதற்கான அறிக்கையை கேட்டுள்ளது. இதுகுறித்து குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில் ராஜன் கூறுகையில், குந்தா, பைக்காரா நீர் மின்திட்டத்தின் கீழ், அதிகளவில் சகதி நிரம்பிய அணைகளை துார்வார மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வாரியத்துக்கு விரைவில் அனுப்பப்படும்,'' என்றார்.

    • குமாரபாளையம் நகரா ட்சியில் 10 ஆண்டுகளாக கோம்பு பள்ளம் எனும் சாக்கடை பள்ளம் தூர் வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
    • இந்த தூர் வாரும் பணி கம்பன் நகர் முதல் இடைப்பாடி சாலை பஸ் ஸ்டாண்ட் பகுதி வரை நடைபெறவுள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகரா ட்சியில் 10 ஆண்டுகளாக கோம்பு பள்ளம் எனும் சாக்கடை பள்ளம் தூர் வாரப்படாமல் இருந்தது.நகராட்சி சேர்மன் உத்தரவின் பேரில் இந்த பள்ளம் தூர் வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் சேர்மன் விஜய்கண்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த தூர் வாரும் பணி கம்பன் நகர் முதல் இடைப்பாடி சாலை பஸ் ஸ்டாண்ட் பகுதி வரை நடைபெறவுள்ளது. இதே போல் பாலக்கரை மற்றும் கம்பன் நகர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொதுக்கழிப்பிடம் கட்டுமான பணியை சேர்மன் பார்வையிட்டார்.

    இவர்களுடன் பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கண்ணன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ராஜ், தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  

    ×