search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலட்சியம்"

    • 4 மணியளவில் லேசான காற்று வீசியது.
    • அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடம் வாங்கி விற்பதை பத்திர பதிவு சம்பந்தமாகவும், கடன் பைசல், அடமானம் உள்ளிட்ட பத்திரப்பதிவு சம்பந்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் லேசான காற்று வீசியது. இதில் சார் பதிவாளர் அலுவலக பெயர் பலகை அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மீது விழுந்தது.

    இதில் அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும், மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உடைந்தது. காயமடைந்த செல்வராஜ், இது குறித்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் கூறினார். இதற்கு பணியில் இருந்த ஊழியர்கள். போலீஸ் நிலையம் சென்று புகார் அளியுங்கள், எங்களிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று அலட்சியமாக செல்வராஜி டம் பதில் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் செல்வராஜை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் செல்வராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் விசாரணை நடத்தி வருகின்றார். அரசு அலுவலகத்தின் பெயர் பலகையை முறையாக அமைக்காததால் கீழே விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன.
    • கழிவுகள் மீது தீ வைப்பதால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அடுத்து உள்ள பெத்த நாடார்பட்டி கிராமத்தில் இருந்து செல்லதாயார்புரம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரம் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மர்ம நபர்கள் டன் கணக்கில் கொட்டி சென்றுள்ளனர்.

    விவசாயிகளுக்கு தெரியாமல் இரவில் கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி கழிவுகள் மீது அவ்வப்போது தீ வைத்து எரித்து விடுகின்றனர்.

    இதனால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன. பொதுமக்களுக்கும் சுவாச கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பெத்தநாடார்பட்டி அருகே விவசாய நிலத்தின் அருகே டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுகளை உடனடியாக அகற்றவும், அதனை தமிழக பகுதியில் கொட்டி வரும் கனரக லாரி ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணிப்பெண் பாரதி, சாமர்த்தியமாக வேறு ஒரு பாரதி எனும் பெண்மணியின் விலாசத்தை சமர்ப்பித்துள்ளார்
    • பாரதி அம்மா நீதிமன்றம், காவல் நிலையம் மற்றும் வக்கீல் அலுவலகம் என் அலைக்கழிக்கப்பட்டார்

    கேரளாவில் 1998ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள், காவல்துறையினரின் மெத்தனத்தையும், அலட்சியத்தையும் பறைசாற்றும் விதமாக உள்ளது.

    கேரள மாநிலம் பாலக்காட்டில் கள்ளிக்காடு பகுதியில், ராஜகோபால் என்பவரின் வீட்டில் பாரதி எனும் பெண், பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.

    பணிப்பெண் பாரதி ஏதோ காரணத்திற்காக அவர் வேலை செய்த வீட்டில் சச்சரவில் ஈடுபட்டதாக பாலக்காடு தெற்கு பகுதி காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்தது.

    விசாரணைக்கு சென்ற காவல்துறையினரிடம் பணிப்பெண் பாரதி, சாமர்த்தியமாக அவர் பெயரையே கொண்ட வேறு ஒரு பெண்மணியின் வீட்டு விலாசத்தை தனது என பொய்யாக சமர்ப்பித்துள்ளார்.

    அவர் கொடுத்த தகவல்களை முறைப்படி சரி பார்க்காத காவல்துறை, பணிப்பெண் பாரதி கொடுத்த விலாசத்தில் உள்ள பாரதி அம்மா (80) எனும் வேறொரு பெண்மணியை கைது செய்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

    மேலும், தனது வீட்டில் வேலை செய்த பாரதி இவரல்ல என ராஜகோபால் தெரிவித்ததையும் காவல்துறை அலட்சியப்படுத்தி பாரதி அம்மா மீது வழக்கை பதிவு செய்துள்ளது.

    இதனால் இந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் 4 வருடங்களுக்கு முன்பு கைது நடவடிக்கைக்கு ஆளான 'பாரதி' நீதிமன்றம், காவல் நிலையம் மற்றும் வக்கீல் அலுவலகம் என் அலைக்கழிக்கப்பட்டார்.

    இறுதியாக தற்போது 4 வருடங்கள் கடந்த நிலையில், 'தவறாக கைது செய்யப்பட்ட நபர்' என கூறி, நீதிமன்றம் பாரதியை விடுவித்துள்ளது.

    இத்தனை வருடங்களாக வழக்கை தொடர்ந்த ராஜகோபால், தன் புகாரை திரும்ப பெற்று கொள்வதாக நீதிமன்றத்தில் கூறினார்.

    இதனால் உண்மையான குற்றவாளி பாரதி மீது தற்போது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    • பொதுப்பணித்துறை அலட்சியத்தால் தடம் தெரியாமல் அழிக்கப்பட்ட திருவேடகம் பாசன கால்வாய் பரிதவிப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    • பணம் கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சோழவந்தான்

    நம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக விவசாய விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற விவசாய நிலங்களிலும் போதிய தண்ணீர் இல்லாதது, நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் முழுமையாக விவசாயம் நடைபெறுவதில்லை. விவசாயிகள் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகையாற்று நீரை நம்பி 700 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை உள்ளிட்டவை பயிரிட்டு விவசாயம் நடந்து வந்தது.

    கச்சிராயிருப்பு பிரிவு, வைகையாற்றில் இருந்து பிரிந்து செல்லும் பெரிய கால்வாய் மூலம் தச்சம்பத்து, வட்ட வாய்க்கால், அம்மச்சியார்கோவில் வாய்க்கால், மேட்டுமடை உள்ளிட்ட 9 பிரிவு வாய்க்கால்களில் நீர்வரத்து இருந்தது.

    இதன் காரணமாக திருவேடகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் சிறப்பாக நடந்து வந்தது. காலப்போக்கில் வைகையாற்றில் மணல் திருட்டு காரணமாக ஆறு பள்ளமானது. இதன் காரணமாக பெரிய கால்வாய்க்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டது. இதனால் திருவேடகம் கால்வாயின் கடைமடை பகுதியான காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

    வைகை நீர் முற்றிலும் தடைபட்டதால் விவசாயம் செய்யும் பரப்பும் குறைந்தது. கிணற்று நீர் பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர்களை நடவு செய்து வருகின்றனர். மேலும் பெரிய கால்வாய் பிரிவில் உள்ள மனக்காடு வாய்க்காலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

    இதன் காரணமாக தற்போது அந்த கால்வாயில் மணல்கள் கொட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த கால்வாய் புதர்களாக மண்டி தடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது.

    இந்த கால்வாயை நம்பி விவசாயம் செய்தவர்கள் கிணற்று நீர், பணம் கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி இல்லாததால் சீமை கருவேல முள் முளைத்து காடுபோல் காட்சியளிக்கிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மனக்காடு கால்வாய் மூலம் வைகையாற்று தண்ணீர் வரத்து இருந்ததால் திருவேடகம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முப்போகம் நடந்தது. ஆனால் தற்போது மணல் கொட்டப்பட்டு கால்வாய் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலர் வாய்க்காலில் பிளாட் அமைத்தும் உள்ளனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நீர்வள உதவி பொறியளார் சேகரன் கூறுகையில், வைகையாற்றில் இருந்து ஊற்று நீர் செல்லும் பெரியகால்வாயின் கடைமடை கிளை வாய்க்கால் குறித்து தற்போதைய ஆவண விபரங்களை தெரியபடுத்த வாடிப்பட்டி தாசில்தாருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.பதில் கிடைத்த பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.என தெரிவித்தார்.

    • போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கொள்முதல் மையத்தில் 400 மூடை நெல் மழையில் நனைந்து முளைத்து விட்டது.
    • சிங்கம்புணரி விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவு நீர்நிலைகள் இல்லாததால் விவசாயிகள் மழையை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள். வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை கையொடுத்ததன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு நடவு பணிகளை மேற்கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்தன. 10 ஆயிரம் ஏக்கருக்குமேல் இங்கு நெல் நடவு செய்யப்பட்டது. போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால் நெற்கதிர்கள் முளைத்து மகசூல் கிடைத்தது. தற்போது 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்து விட்டது.

    சிங்கம்புணரி பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் மையத்தை அமைத்துள்ளது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட நெல்களை மூடை மூடையாக விவசாயிகள் ஆர்வத்துடன் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் இதில் ஒரு சில அதிகாரிகள் விவசாயிகளின் நெல் மூடைகளை உடனடியாக கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மூடைக்கு ரூ.50 கமிஷன் கொடுத்தால் தான்நெல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்ப டுகிறது. இதில் பணம் கொடுத்த விவசாயிகள் நெல் மூடைகள் முன்னுரிமை அடிப்படையில் முதலில் கொள்முதல் செய்வதாகவும், பணம் கொடுக்காதவர்களை அலைக்கழிப்பதாகவும் அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது வரை எஸ்.எஸ்.கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்ட நெல்மூடைகள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மழையில் நனைந்து முளைத்து விட்டது. இதை பார்த்து விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த வருடம் பெய்த மழை கரணமாக நல்ல மகசூல் கிடைத்தது. விளைந்த நெல்களை அரசிடம் விற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் வந்தால், அதனை வாங்காமல் அதிகாரிகள் சாக்குப்போக்கு சொல்கிறார்கள். மேலும் கமிஷனும் கேட்கிறார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • பெரியார் பஸ் நிலைய சிக்னலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    • போக்குவரத்து போலீசார் அலட்சியத்தால் இந்த விபரீதம் நடந்தது.

    மதுரை

    மதுரை அம்பலத்தாடியை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 45). சம்பவத்தன்று இரவு இவர் பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்தார். பெரியார் மேம்பால சிக்னலை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சுப்புராமன் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் முன்பு போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது வழக்கம்.

    அவர்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் (நேதாஜி ரோடு), கட்டபொம்மன் சிலை அருகில் பிரத்யேக பூத்துகள் அமைத்து தரப்பட்டது. ஆனால் போலீசார் 24 மணி நேரமும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டி ருக்கின்றனர்.

    பெரியார் மேம்பால சிக்ன லில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. பெரியார் மேம்பாலத்தில் சிக்னலின்றி வாகனங்கள் இடதுபுறம் செல்ல தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வாகனங்கள் அத்துமீறி செல்கின்றன.

    இதனை போக்குவரத்து போலீசார் கவனிப்ப தில்லை. அதேபோல் பெரி யார் மேம்பாலத்தில் போக்கு வரத்து சிக்னல்களை வாகன ஓட்டிகள் மதிப்பதும் இல்லை.

    இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து உயரதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி பெரி யார் மேம்பாலத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதி முறைகளை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோன்று காள வாசல் சிக்னலிலும் போலீசார் பெரும்பாலும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்துள்ளனர். தானி யங்கி சிக்னல் என்பதால் போலீசார் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முன்வருவதில்லை. தானியங்கி சிக்னல் காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து சென்று விடுவார்கள் என்ற அலட்சிய போக்கு போலீசாருக்கு உள்ளது.

    சாலை சந்திப்பில் நின்று போக்குவரத்தை போலீசார் ஒழுங்கு படுத்தினால்தான் வாகன ஓட்டிகளும் சீராக சென்று வருவார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். காளவாசல் சிக்னல் பகுதியிலும் போலீசார் சாலையில் நின்று போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கால்வாயை கிராம மக்கள் தூர்வாரினர்.
    • குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    தென் மாவட்ட நதிகளில் கடலில் கலக்கும் நதிகளில் ஒன்றாக குண்டாறு திகழ்கிறது. திருமங்கலம், வடகரை, மைக்குடி, தூம்பக்குளம் வழியாக காரியாபட்டி, கமுதி வரை குண்டாறு சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. குண்டாறு செல்லும் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த கிராமங்களுக்கு செல்கிறது.

    குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டாறு தூர்வாரப்படாததால் முட்புதர்கள் செடி, கொடிகள் அடைத்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த பகுதி மக்கள் மழைக்காலத்திற்கு முன்பே குண்டாற்றை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வடகரை வழியாக மைக்குடி, தூம்பகுளம் சென்று அந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பும். தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் தூம்பக்குளம் கிராம மக்கள் திரண்டு தங்கள் பகுதி கண்மாய்க்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக குண்டாற்றை தூர் வாரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுப்பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் தூம்பக்குளம் கிராம மக்கள் கால்வாயை தூர்வாரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×