search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Security Facility"

    • போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கொள்முதல் மையத்தில் 400 மூடை நெல் மழையில் நனைந்து முளைத்து விட்டது.
    • சிங்கம்புணரி விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவு நீர்நிலைகள் இல்லாததால் விவசாயிகள் மழையை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள். வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை கையொடுத்ததன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு நடவு பணிகளை மேற்கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்தன. 10 ஆயிரம் ஏக்கருக்குமேல் இங்கு நெல் நடவு செய்யப்பட்டது. போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால் நெற்கதிர்கள் முளைத்து மகசூல் கிடைத்தது. தற்போது 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்து விட்டது.

    சிங்கம்புணரி பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் மையத்தை அமைத்துள்ளது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட நெல்களை மூடை மூடையாக விவசாயிகள் ஆர்வத்துடன் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் இதில் ஒரு சில அதிகாரிகள் விவசாயிகளின் நெல் மூடைகளை உடனடியாக கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மூடைக்கு ரூ.50 கமிஷன் கொடுத்தால் தான்நெல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்ப டுகிறது. இதில் பணம் கொடுத்த விவசாயிகள் நெல் மூடைகள் முன்னுரிமை அடிப்படையில் முதலில் கொள்முதல் செய்வதாகவும், பணம் கொடுக்காதவர்களை அலைக்கழிப்பதாகவும் அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது வரை எஸ்.எஸ்.கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்ட நெல்மூடைகள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மழையில் நனைந்து முளைத்து விட்டது. இதை பார்த்து விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த வருடம் பெய்த மழை கரணமாக நல்ல மகசூல் கிடைத்தது. விளைந்த நெல்களை அரசிடம் விற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் வந்தால், அதனை வாங்காமல் அதிகாரிகள் சாக்குப்போக்கு சொல்கிறார்கள். மேலும் கமிஷனும் கேட்கிறார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×