search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாயை தூர்வாரிய கிராம மக்கள்
    X

    கால்வாயை தூர்வாரிய கிராம மக்கள்

    • பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கால்வாயை கிராம மக்கள் தூர்வாரினர்.
    • குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    தென் மாவட்ட நதிகளில் கடலில் கலக்கும் நதிகளில் ஒன்றாக குண்டாறு திகழ்கிறது. திருமங்கலம், வடகரை, மைக்குடி, தூம்பக்குளம் வழியாக காரியாபட்டி, கமுதி வரை குண்டாறு சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. குண்டாறு செல்லும் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த கிராமங்களுக்கு செல்கிறது.

    குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டாறு தூர்வாரப்படாததால் முட்புதர்கள் செடி, கொடிகள் அடைத்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த பகுதி மக்கள் மழைக்காலத்திற்கு முன்பே குண்டாற்றை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வடகரை வழியாக மைக்குடி, தூம்பகுளம் சென்று அந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பும். தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் தூம்பக்குளம் கிராம மக்கள் திரண்டு தங்கள் பகுதி கண்மாய்க்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக குண்டாற்றை தூர் வாரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுப்பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் தூம்பக்குளம் கிராம மக்கள் கால்வாயை தூர்வாரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×