search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dredging work"

    • பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
    • பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வேகவதி ஆறு தாமல் ஏரி அருகே உற்பத்தியாகிறது. பின்னர் காஞ்சிபுரம் நகரப்பகுதிக்குள் பாய்ந்து அதன்பிறகு திம்ம ராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் கலக்கிறது.

    இந்த ஆறு காஞ்சிபுரம் நகரபகுதிக்குள் பெருமளவில் ஓடுவதால் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

    வேகவதி ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதால் ஆண்டு தோறும் இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் நகரில் வேகவதி ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

    இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வேகவதி ஆற்று பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்வதற்கு வசதியாக மழைக் காலங்களில் தூர்வாரும் பணி தொடங்கும். இந்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதனால் காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கை தடுக்க தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    ஆனாலும் பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும். அதேபோல் இந்த ஆண்டும் அதிக மழை பெய்தால் பாலங்கள் உடைந்து விடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

    எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும்.
    • குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் அமைந்துள்ளது பள்ளபாளையம். இங்கு புதர்கள் மண்டி கிடந்த குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது 75 சதவீதம் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்னும் 25 சதவீத பணிகளை நிறைவு செய்தால், குளத்தில் அதிக அளவு நீரை தேக்க முடியும்.

    அத்திகடவு திட்டத்தால் இணைக்கப்பட்ட இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும். தொடர்ந்து பணிகள் நடந்து வருவதால் விரைவில் குளம் தூர்வாரும் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும்.
    • காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் மூலமாக கீழ் பவானி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இப்பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பாசன விவசாய பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாய்க்கால் சீரமைப்பு ஒப்பந்ததாரர்கள் எந்திரங்களை கொண்டு வாய்க்கால் கரையில் உள்ள மண்ணை அகற்றி உள்ளனர்.

    இதைப்பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். கீழ்பவானி வாய்க்கால் கரையை பலப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கருங்கரடுவில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்குள்ள வாய்க்காலுக்குள் இறங்கி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பெருந்துறை தாசில்தார் பூபதி, பெருந்துறை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உள்பட பல்வேறு அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் நல்ல நிலையில் இருந்த கால்வாயில் கரையை உடைத்த பகுதியை மீண்டும் அதை மண்ணை கொண்டு பலப்படுத்த வேண்டும் அமைக்க கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனினும் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த காத்திருப்பு போராட்டம் இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது.
    • நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. நொய்யல் ஆற்றுக்கு ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம், சபரி ஓடை, மந்திரி வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக நீர் வந்து சேர்கிறது. இதில் ஜம்மனை ஓடை மங்கலம் ரோட்டிலும், சபரி ஓடை காங்கயம் ரோட்டிலும், சங்கிலிப்பள்ளம் தாராபுரம் ரோடு மற்றும் காங்கயம் ரோட்டிலும் கடந்து சென்று நொய்யல் ஆற்றில் சேர்கிறது.

    தற்போது தென் மேற்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் இந்த ஓடைகள் வாயிலாக நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக தற்போது மண் மேடுகளும், முட்செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கும் ஓடைகளை தூர்வாரி நீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சங்கிலிப் பள்ளம் ஓடையில் நிரம்பியுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் எந்திர வாகனம் மூலம் தூர்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    • புதுவை தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் 2003-ல் திறக்கப்பட்டது.
    • 18 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு படகுகளை நிறுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் 2003-ல் திறக்கப்பட்டது. 18 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு படகுகளை நிறுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    2015 முதல் துறைமுகம் தூர்வாரப்படாததால் படகுகள் அடிக்கடி சேதமாகி வருகிறது. இதையடுத்து துறைமுகத்தில் படகுகள் கட்டும் இடத்தில் குவிந்துள்ள 35 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணலை ரூ.1.40 கோடியில் அகற்றி ஆழப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் அனிபால்கென்னடி, பாஸ்கர், மீனவ கிராம பஞ்சாயத்தார் உட்பட பலர் கலந்துகொண்டனர். படகுகள் கட்டும் இடத்தில் தற்போதுள்ள 2 மீட்டர் 4 மீட்டராக ஆழப்படுத்தப்பட உள்ளது. இதனால் விசைப்படகுகள் தரை தட்டாமல் எளிதாக கடலுக்குள் சென்றுவர வாய்ப்பு ஏற்படும். வரும் 15-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் துறைமுகம் தூர்வாரப்படுவது மீனவர்க ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கோரம்பள்ளம் குளத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தூர்வாரும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கொடி அசைத்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுநீர் வடகால் பாசன பகுதியில் அமைந்துள்ள முக்கிய குளமாக கோரம் பள்ளம் குளம் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள ஸ்ரீவை குண்டம் வடகால் கடைசி யில் இக்குளம் அமைந்து உள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1,300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் 1888-ம் வருடம் ஆங்கி லேயர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும்.

    இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்கும் வித மாகவும், உபரி நீரை வெளி யேற்றும் விதமாகவும் 24 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ஒன்றையும் அந்நேரத்தில் ஆங்கிலேயர்கள் கட்டியுள்ள னர்.

    பின்னர் காலப்போக்கில் மதகுகள் சேதமடைந்ததால், 1967-ல் இரண்டு மதகுகளை ஒன்றாக்கி 24 பெரிய மதகுகளாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு உள்ளது .

    கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை நம்பி கோரம் பள்ளம், பெரியநாயகிபுரம், அத்திமரப்பட்டி, முத்தையா புரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுப்பாடு முதலான கிராம பகுதிகளில் வேளாண் தொழில் நடை பெற்று வருகிறது. இப்பகுதி களில் பெரும்பாலும் நெல், வாழைப் பயிர்களே அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கோரம்பள்ளம் குளத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தூர் வாரும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கொடி அசைத்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

    பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் சாதனைகளை இன்று பேசுகின்ற நிலையில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான கோரம் பள்ளம் குளம் தூர்வாரப்படு வதற்கான பணிகள் ரூ.12 கோடியில் தொடங்கப்பட் டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 228 மில்லியன் லிட்டர் கன அளவு கொள்ள ளவு இருக்க கூடிய குளத்தில் 2600 ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெறுகிறது.

    பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பாக பணிகள் நிறை வேற்றப்படும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. வர்த்தக அணி துணை செயலாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி யூனியன் துணை சேர்மன் ஆஸ்கர், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன செயற் பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், பாஸ்டி னோவினோ, தூத்துக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்கொடி, முத்தையா புரம் முள்ளக்காடு அத்தி மரப்பட்டி விவசாய சங்க தலைவர் பூபதி செயலாளர் ரகுபதி என்ற சின்ன ராஜ், பொருளாளர் கந்தசாமி, கோரம்பள்ளம் விவசாய சங்க தலைவர் தனலட்சுமி சுந்தரபாண்டியன், விவசாய சங்க நிர்வாகிகள் ஜோதி மணி, அழகுராஜா, இளங்கோவன், தானியேல் மாநகராட்சி கவுன்சிலர் ராஜதுரை, முன்னாள் கவுன்சிலர் ஜெகன், கூட்டுடன்காடு ஊராட்சி ஹரி பாலகிருஷ்ணன், அத்திமரப்பட்டி வசந்தி, பால்பாண்டியன், பொன்ராஜ் மற்றும் நிர்வாகி கள், அதிகாரிகள், விவசாயி கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதுபோல் கொங்கு மண்டலமான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு குளங்களும் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றில் கடந்த சில நாட்களாகவே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருப்பூர் வளர்மதி பாலம் பகுதிகளில் நின்று வெள்ளத்தை பலரும் பார்த்து செல்கிறார்கள். கரைபுரண்டு வெள்ளம் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுபோல் நொய்யல் ஆற்றில் கடந்த சில மாதங்களாகவே தூர்வாரும் பணிகள் நடந்ததால், எந்த ஒரு பாதிப்பும் இன்றி வெள்ளநீர் மாநகர் பகுதிகளில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- நொய்யல் ஆறு கோவையில் இருந்து தொடங்கி திருப்பூர் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளநீர் செல்லும் வகையில் இன்னும் கவனம் செலுத்தி தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாருவதன் மூலம் கடைகோடி பகுதிகள் வரை முழுவதுமாக உள்ள விவசாயிகளுக்கு போதுமான நீர் கிடைக்கும். அந்த பகுதிகளில் உள்ள குளங்களும் நிரம்பும் என்றனர்.

    • கீழ்பவானி வாய்க்காலில் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • வாய்க்காலில் தூர் வாரும் பணிக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    காங்கயம் :

    நீர்வள துறையில், கோவை மண்டலத்தில் கீழ்பவானி வடிநிலை கோட்டத்தில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் அமைந்துள்ளது. இதில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

    இந்த வாய்க்காலில் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதில் 1.03 லட்சம் ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த வாய்க்காலில் தூர் வாரும் பணிக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மறவபாளையம் முதல் மங்கலப்பட்டி கிராமம் வரை உள்ள வாய்க்கால் 39 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை கலெக்டர் வினீத் நேரில் சென்று பார்வையிட்டார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி பொறியாளர்கள் சபரிநாதன், குமரேசன் மற்றும் பாசன உதவியாளர்கள் ஆய்வின் போதுஉடன் இருந்தனர்.

    • வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார்.
    • வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உர மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

    அதன் பின்னர் அண்ணாதுரை கூறுகையில், தற்போது450 சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.இதன் மூலம் முன்பை விட வாய்க்கால்கள் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் மதியரசன், கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்த், உர கட்டுப்பாட்டு அலுவலர் வருகுனபாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள், ஊழியர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வேளாண் இயக்குனர் அண்ணாதுரை கொள்ளிடம் அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திப்பயிர், நெற்பயிற் உள்ளிட்ட பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
    • மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவின் முக்கிய வடிகால்களில் ஒன்றாக சுள்ளான் ஆறு விளங்கி வருகிறது. மேலும், சுள்ளான் ஆறு மூலம் அகரமாங்குடி, சித்தர்காடு உள்பட பல கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுள்ளான் ஆற்றில் பாலூர், சந்திராபாடி, புரசக்குடி, வேம்பகுடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், கருப்பூர், சோலைபூஞ்சேரி, மேலசெம்மங்குடி, மட்டையாண்திடல், கோவிலாம்பூண்டி உள்பட பல கிராமங்கள் வடிகால் வசதி பெறுகின்றன.

    பாலூரில் இருந்து ஆவூர் வரையில் சுள்ளான் ஆறு முழுவதையும் ஆகாயதாமரைச்செடிகள் மற்றும் வெங்காய செடிகள் பெருமளவில் மண்டியநிலையில் காணப்படுவதால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.

    அதனால் விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். பொதுப்பணிதுறையினர் அவ்வப்போது சுள்ளான் ஆற்றில் வேம்பகுடி, அகரமாங்குடி பகுதியில் மண்டியுள்ள ஆகாயதாமரைச் செடிகளை மட்டும் சுத்தம் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். அடுத்த வருடமும் அதே பகுதியில் ஆகாயதாமரை செடிகள் மண்டி விடும்.

    இந்தாண்டு கடந்த மாதம் சுள்ளான் ஆற்றில் வேம்பகுடியில் இருந்து தூர்வாரும் பணி தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் சுள்ளான் ஆறு தூர்வாரும் பணி முடிவடையாமல் மட்டையாண்திடல் வரையில் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளதால் பாசனத்திற்கு திறந்து விடுவது தாமதம் ஆகி வருகிறது.

    மேலும் மேட்டூர் அணையும் திறக்கப்பட்டு பருவமழையும் தொடங்க உள்ளதால் சுள்ளான் ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இயல்பாக 3.230லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
    • நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும்

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பி ல்மகேஷ்பொய்யாமொழி, சக்கரபாணி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் இயல்பாக 3.230லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே 24-ந் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.2 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே தொடங்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் காக்கப்படும். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயர்வதால் மாற்று பயிர் வகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

    வேளாண் பெருமக்களின் நலன் கருதி இந்த ஆண்டும் ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3 லட்சம் உழவர்கள் பயன்பெறுவர். வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.47 கோடி ஒதுக்கீடு மானிய விலையில் வழங்கப்படும்.

    வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 2400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ.4 கோடியே 20 லட்சம் வழங்கப்படும். வேளாண் பொறியியல் துறை மூலம் உள்ளிட்ட 237 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ. 6 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இதன் மூலமாக கடந்த ஆண்டு சாதனை அளவை விட இந்த ஆண்டும் அதிக பரப்பளவில் சாதனை எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு குறுவைப் பருவத்தில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல் இரக விதைகள், இரசாயன உரங்கள் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்து நெல் நடவு எந்திரங்களை கொண்டு விரைவாக நடவு பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்கு 7060 மெட்ரிக் டன் நெல் விதைகள் தேவைப்படுகிறது. இதுவரை 3547 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது. பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில் கடைமடை பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

    விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யாமல் அரசு டெப்போக்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடுதுறை 37, ஏஎஸ்டி 16 ஆகிய நெல் ரகங்கள் அதிக மகசூலை தரக்கூடியது இந்த ரக விதைகள் அதிகளவில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர் கடன் வழங்கி சாகுபடி பணியை தொடங்க கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கடன் பெற ஏதுவாக வருவாய் துறையினரால் வழங்கப்படும் அடங்கல் சான்றிதழ்களை உரிய காலத்தில் வழங்கி விவசாயிகளுக்கு வருவாய் துறையினர் உதவி புரிந்திட வேண்டும். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேங்காயை மூலப் பொருளாகக் கொண்டு பட்டுக்கோட்டை பகுதியில் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தில் மாநில அரசு தனது பங்களிப்பை அதிகம் செலுத்துகிறது. எனது பிற மாநிலங்களைப் போல் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். 35 சதவீதம் இடுபொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்றவகையில் உற்பத்திப் பொருளுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இனி வரும் காலங்களில் தூர்வாரும் பணியை மார்ச் மாதங்களிலேயே தொடங்கிட வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் எஸ். எஸ். பழனிமாணிக்கம், ராமலிங்கம், எஸ். கல்யாணசுந்தரம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, அசோக்குமார்,பூண்டி கலைவாணன், பன்னீர்செ ல்வம், அண்ணாதுரை, மேயர்கள் சண்.ராமநாதன், சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

    தஞ்சை அருகே நடைெபற்று வரும் தூர்வாரும் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி இந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளுக்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 683 பணிகள், 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வருகிறது. 

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,356 கிலோ மீட்டர் நீளத்துக்கு 170 பணிகள் நடைபெற்று வருகிறன. இந்த பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

    இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் தரமாக நடைபெறுகிறதா என்பதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆய்வு செய்தார். 

    அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை அருகே கொக்கேரியில் பீமன் ஓடை வாய்க்கால் தூர்வாரும் பணியை நேரில் பார்வையிட்டார். இந்த பீமன் ஓடை வாய்க்காலில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்தும் அவற்றின் தரம் குறித்தும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கேட்டறிந்தார் .

    தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் தொடர்பாக செய்தித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும், அதேபோல் வேளாண்துறை சார்பில் மற்றும் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி முன்னேற்றங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சியும் முதல்வர் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் நேரில் சென்று அவரிடம் கைகளை குலுக்கி நலம் விசாரித்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராமலிங்கம் எம்.பி, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ, மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம்,நீர்வள ஆதார துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் உடனிருந்தனர். 
    ×