search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளப்பாளையம் குளம் தூர்வாரும் பணிகள் தீவிரம்
    X

    தூர்வாரும் பணி நடைபெறுகின்றக் காட்சி.

    பள்ளப்பாளையம் குளம் தூர்வாரும் பணிகள் தீவிரம்

    • இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும்.
    • குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் அமைந்துள்ளது பள்ளபாளையம். இங்கு புதர்கள் மண்டி கிடந்த குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது 75 சதவீதம் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்னும் 25 சதவீத பணிகளை நிறைவு செய்தால், குளத்தில் அதிக அளவு நீரை தேக்க முடியும்.

    அத்திகடவு திட்டத்தால் இணைக்கப்பட்ட இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும். தொடர்ந்து பணிகள் நடந்து வருவதால் விரைவில் குளம் தூர்வாரும் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×