search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீமன் ஓடை வாய்க்கால்"

    தஞ்சை அருகே நடைெபற்று வரும் தூர்வாரும் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி இந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளுக்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 683 பணிகள், 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வருகிறது. 

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,356 கிலோ மீட்டர் நீளத்துக்கு 170 பணிகள் நடைபெற்று வருகிறன. இந்த பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

    இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் தரமாக நடைபெறுகிறதா என்பதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆய்வு செய்தார். 

    அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை அருகே கொக்கேரியில் பீமன் ஓடை வாய்க்கால் தூர்வாரும் பணியை நேரில் பார்வையிட்டார். இந்த பீமன் ஓடை வாய்க்காலில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்தும் அவற்றின் தரம் குறித்தும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கேட்டறிந்தார் .

    தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் தொடர்பாக செய்தித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும், அதேபோல் வேளாண்துறை சார்பில் மற்றும் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி முன்னேற்றங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சியும் முதல்வர் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் நேரில் சென்று அவரிடம் கைகளை குலுக்கி நலம் விசாரித்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராமலிங்கம் எம்.பி, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ, மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம்,நீர்வள ஆதார துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் உடனிருந்தனர். 
    ×