search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுப்பணித்துறை"

    • செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று இரவும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 532 கனஅடியாக உயர்ந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் 22.19 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 3170 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதே போல் புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீரு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2788 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 281 கனஅடியாக உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 743 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 174 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1886 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 38 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 437 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 15 கனஅடி நீர் வருகிறது. 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
    • இந்நிலையில் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே தண்ணீர் ஆறு போல ஓடியது.

    கடலூர்:

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கடலூரின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குண்டு உப்பலவாடியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே தண்ணீர் ஆறு போல ஓடியது. இதனைக் கண்ட போக்குவரத்து போலீசார், இது தொடர்பாக பொதுப்பணித் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் இருந்து தண்ணீர் வருவதை உறுதி செய்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட வால்வை மூடி தண்ணீர் வருவதை நிறுத்தினர். இதனால் கடலூரில் ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
    • மழையால் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என இரு போக சாகுபடிகள் செய்யப் பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும் பாசன குளங்களை நம்பியும் விவ சாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 69 சதவீதம் பொய்த்து விட்ட காரணத்தி னால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் குறைவாக இருந்தது. பாசன குளங்களி லும் தண்ணீர் குறைவாகவே இருந்ததால் விவசாயிகள் கன்னி பூ சாகுபடி பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விவசா யத்திற்காக ஜூன் 1-ந் தேதி பேச்சிபாறை அணை திறக்கப்பட்டது.

    அணை திறக்கப்பட்ட பிறகும் கடைமடை பகுதி களுக்கு தண்ணீர் வழங்காத தால் விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சாகு படி பணி தொடங்கிய பிறகும் கடைமடை பகுதி களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. பாசன கால் வாய்கள் தூர் வாரப்படாத தால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடை மடை பகுதிகளுக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி னார்கள்.

    ஆனால் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கின் கார ணமாக சானல்கள் தூர் வாருவதில் தாமதம் ஏற்படு வதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தூர்வாரும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். சானல்கள் தாமதமாக தூர்வாரப்பட்ட தால் விவ சாயிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

    சாகுபடி பணிகள் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து மணவாள குறிச்சி உட்பட மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் கன்னி பூ சாகுபடி செய்யப்பட்ட ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஹெக்டேர் நெற்பயிர்கள் அறுவடை ஆகாத நிலையில் உள்ளது. தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    ஒரு சில இடங்களில் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து முளைத்தது விவ சா ணயிகளுக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. வழக்க மாக இந்த தருணத்தில் 2-ம் போக சாகுபடியான கும்ப பூ சாகுபடி செய்யப்படும். ஆனால் கன்னி பூ சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் அறுவடை நடைபெறாத நிலையில் கும்ப பூ சாகுபடி பல்வேறு இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சுசீந்திரம் தேரூர் பூதப் பாண்டி பகுதிகளில் கும்ப பூ நடவு பணி நடைபெற்று வருகிறது. கும்ப பூ சாகுபடி நேரத்திலாவது பொதுப் பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக இருந்து வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையின் காரண மாக பல்வேறு இடங்களில் பாசன குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஏற்பட்டது. அந்த உடைப்பு கள் சாக்கு மூட்டைகள் அடுக்கி தற்காலி கமாக அடைக்கப்பட்டது.

    ஆனால் இன்று வரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த சாக்கு களை அப்புறப்படுத்தி விட்டு நிரந்தரமாக குளங்க ளில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். சானல்களில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக நாகர்கோவி லில் உள்ள பொதுபணிதுறை அலுவலகத்திற்கு விவசாயி கள் பொதுப்ப ணித்துறை அதிகாரிகளை பார்க்க வந்தால் அவர்களை அலட்சி யப்ப டுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

    வேளாண் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றாததால் விவசா யம் பாதிக்கப்படு வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.எனவே இரண்டு துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து விவசாயிகள் நலன் கருதி அதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு

    இரணியல் :

    குளச்சல் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட குருந்தன்கோடு ஒன்றியத்தில் நெட்டாங்கோடு பஞ்சாயத்தில் கண்டன்விளை மல்லங்கோடு நெட்டாங்கோடு வழியாக பேயன்குழி சானல் கரையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அக்கிராமணம் குளத்தின் கரை மற்றும் கிணற்றின் பக்கவாட்டு சுவர் பல வருடங்களாக இடிந்து கிடக்கிறது. இந்த குடிநீர் கிணறு நீரை இப்பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் மொட்டவிளை, பேயன்குழி சுற்று வட்டார பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    பக்கச்சுவர்களை கட்டித்தர வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் குளத்தின் கரை மற்றும் கிணற்று பக்கச்சுவரை விரைந்து கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் அனுஷ்யா மதுக்குமார் கூறுகையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அக்கிராமணம் குளத்தின் கரை சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குளத்தின் கரை மற்றும் கிணற்றின் பக்கச்சுவரை விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது
    • குளத்தின் அடி மடையை உடைத்த மர்ம நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    கிள்ளியூர் :

    புதுக்கடை அருகே பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் மேலகுளம் என்ற காட்டத்திகுளம் உள்ளது. மிகப்பழமையான இந்த குளம் தற்போது சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது. கடுமையான கோடை காலங்களிலும் இயற்கையாக ஊற்று நீர் அதிகம் சுரப்பதால் இந்த குளத்தில் தண்ணீர் வற்றுவதில்லை.

    இதனால் கோடை காலங்களில் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த குளத்தில் குளிக்க வருவது வழக்கம். இந்த குளத்தை நம்பி தற்போது சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமாக வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போதும் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் குளத்தின் அடிமடை ஷட்டரை ஏதோ எந்திரத்தின் உதவியுடன் உடைத்து, தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இதனால் தண்ணீர் வேகத்தால் பல ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீராதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பட்டணம்கால் பிரிவு நீர்வளத்துறையின் இளநிலை பொறியாளர் (பொறுப்பு) பேபி உஷா தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குளத்தின் அடி மடையை உடைத்த மர்ம நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    • பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தக்கலை ஒன்றிய கவுன்சிலர் மனு
    • இன்னல்களை கொடுத்து வருகிற தென்னக ரெயில்வே துறையினர் மீது மாவட்ட கலெக்டருக்கு பல புகார்

    கன்னியாகுமரி : 

    தக்கலை ஊராட்சி ஒன்றி யம் ஆத்திவிளை ஊராட்சி பகுதியில் உள்ள தென்னக ரெயில்வே துறையினரின் இரணியல் ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடங்கி 18 மாதங்களாகியும் மிகவும் மந்த நிலையில் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் பெருமளவில் பொதுமக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக 18 மாதங்களாக திங்கள்நகர்-அழகிய மண்ட பம் சாலை போக்குவரத்து பாதிப்பு, இரணியல் கிளை கால்வாயில் பாலம் தாழ்வாக கட்டப்பட்டுள்ளதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடினால் உள்ள மக்களின் பாதிப்பு, ஆத்திவிளை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை திறக்காததால் பரம்பை பகுதியில் துண்டிக்கப்பட்ட பாலத்திற்கு மாற்று பாதை இன்றி மக்களின் பெருமள விலான பாதிப்பு, மண்டைக் காடு, தக்கலை, குமார கோவிலுக்கு இரணியல் கோணம் வழியாக சென்று வந்த அரசு பேருந்து வழித்தடத்தில் இரணியல் கோணம் பகுதியில் உள்ள சாலையை எந்த முன்னறிவிப்பும் இன்றி துண்டித்து தொடர்ந்து மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிற தென்னக ரெயில்வே துறையினர் மீது மாவட்ட கலெக்டருக்கு பல புகார் மனுக்கள் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்ப டவில்லை.

    அதனைத்தொடர்ந்து அதன் ஒரு பகுதியாக இரணியல் கிளை கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்திட வேண்டி நாகர்கோவில் பொதுப்பணி துறை அலு வலகத்தில் தக்கலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஹரிதாஸ், ஜேக்கப், பாச னத்துறை தலைவர் ஜேசுதாஸ் மற்றும் விவசாய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜான் சவுந்தர், துணை தலைவர் ஜேக்கப் அருள் பால் மற்றும் காங்கிரஸ் பிர முகர்கள், பொதுமக்கள் மனு அளித்தனர்.

    • பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது.
    • தென்காசி வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், செங்கோட்டை தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.ரஹீம் கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரில் உள்ள பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது. இங்கு உள்ள விருந்தினர் ஆய்வு மாளிகை கட்டிடம் மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பது எங்களது பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மேலும் ஆய்வு மாளிகை கட்டிடம் அமையும் பட்சத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே புதிய கட்டிடம் அமைவதற்கு தாங்கள் ஆவணம் செய்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பணித்துறை எடுத்து அணையை விரிவுபடுத்த வேண்டும்.
    • அணையின் கதவை திறந்தபின் அங்குள்ள சிலர் மூடி விடுகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் பயன்பெறும் வகையில் உள்ள இந்த நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வரும் கீரனூர் அணைக்கட்டு பகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கீரனூர் அணைக்கட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கு அணையின் மேற்கு பகுதியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அதை ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பணித்துறை எடுத்து அணையை விரிவு படுத்த வேண்டும். அணையின் கதவை திறந்தபின் அங்குள்ள சிலர் மூடி விடுகிறார்கள். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அணைக்கு தண்ணீர் வரும் கால்வாயில் இப்பொழுது படித்திருக்கும் மணல், கோரை செடிகளை அகற்ற வேண்டும் .பொது ப்பணி துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்து இந்த ஆண்டு நிதியில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும் அவர்கள் பழைய கோரிக்கையான சாத்தனூர் அணை கால்வாயை நந்தன் கால் வாயுடன் இணைக்க முயற்சி மேற் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர். இவைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி அளித்தார். தொடர்ந்து அவர் அணைக்கட்டு பகுதி மற்றும் கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில் உள்ள கோரை புற்களை அகற்றி சரி செய்ய அறிவுறுத்தினார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் ராஜாராமன் மற்றும் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தின் சுரேஷ், சேகர், வெற்றி தமிழ்ச்செல்வன், கன்னிகா ரமேஷ் உள்ளி ட்டோர்கலந்து கொண்டனர்.

    • அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது.
    • வாகனங்களை திருப்பிவிட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் முதல் அம்பகரத்தூர் வரை செல்லும் பிரதான சாலையின் குறுக்கே, பல்வேறு பெரிய பாலம் மற்றும் சிறிய பாலங்கள் உள்ளது. இத்தகைய பாலங்கள் வழியே கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தினசரி சென்று வருகின்றது. இவற்றில் பல சிறிய பாலங்கள் வலுவிழந்து காணப்படுவதால், சம்பந்த ப்பட்ட பாலங்களையும், பாலத்தை ஒட்டிய சாலைகளையும் சரி செய்யவேண்டும் என, பொதுமக்கள் கடந்த பல மாதமாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், மாவட்ட பொதுப்பணித்துறை இந்த புகார் குறித்து, கண்டும் கானாமல் இருந்துவந்தது. மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையை பாலஙக்ளை சரி செய்ய வலியுறுத்தவில்லை.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையில், அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது. இதன்காரணமாக, காரைக்கால் முதல் அம்பகரத்தூர், பேரளம், கும்பகோணம் வழியே போக்குவரத்து துண்டி க்கப்பட்டது. பொதுமக்கள் இறங்கி, வேறு வாகனங்களில் செல்லும் நிலை உருவானது. விபரம் அறிந்த காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று, இடிந்த பாலத்தை ஆய்வு செய்து மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். பாலம் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கால்வாயை கிராம மக்கள் தூர்வாரினர்.
    • குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    தென் மாவட்ட நதிகளில் கடலில் கலக்கும் நதிகளில் ஒன்றாக குண்டாறு திகழ்கிறது. திருமங்கலம், வடகரை, மைக்குடி, தூம்பக்குளம் வழியாக காரியாபட்டி, கமுதி வரை குண்டாறு சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. குண்டாறு செல்லும் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த கிராமங்களுக்கு செல்கிறது.

    குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டாறு தூர்வாரப்படாததால் முட்புதர்கள் செடி, கொடிகள் அடைத்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த பகுதி மக்கள் மழைக்காலத்திற்கு முன்பே குண்டாற்றை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வடகரை வழியாக மைக்குடி, தூம்பகுளம் சென்று அந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பும். தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் தூம்பக்குளம் கிராம மக்கள் திரண்டு தங்கள் பகுதி கண்மாய்க்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக குண்டாற்றை தூர் வாரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுப்பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் தூம்பக்குளம் கிராம மக்கள் கால்வாயை தூர்வாரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.

    இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை எட்டுகிறது
    • பெருஞ்சாணி அணை மேலும் 2 அடி உயர்ந்தது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த 5 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் தற்போது மழை சற்று குறைந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. கருங்கல், குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, பூதப்பாண்டி, சுருளோடு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை நீடித்து வரு கிறது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 5-வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளிலும் மலையோரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதையடுத்து அணை களின் நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரு அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.45 அடியாக உள்ளது. அணைக்கு 1783 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 256 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் இன்று மதியம் 42 அடியை எட்டு மென்று எதிர்பார்க்கப் படுகிறது.

    இதையடுத்து பொதுப்ப ணித்துறை அதிகாரி கள் அணையின் நீர்மட் டத்தை கண்காணித்து வரு கிறார்கள். அணை நீர்மட்டம் 42 அடியை எட்டியதும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுப்பதற்கும் ஏற்பாடு கள் செய்யப்பட்டு உள் ளது. ஏற்கனவே சிற்றாறு-1, சிற்றாறு-2 அணை களின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் 67.85 அடியாக உள்ளது. அணைக்கு 1869 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 35.52 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணை யின் நீர்மட்டம் இன்று காலை 12.10 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வருவ தால் சூறைக்காற்றும் வீசி வருகிறது. சூறை காற்றிற்கு மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளது. நாகர்கோவில் பாறையடி பகுதியில் பழமை வாய்ந்த ராட்சத மரம் முறிந்து விழும் நிலையில் இருந்தது.

    இதை தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்தி னார்கள். தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    தச்சமலை, தோட்டமலை, மோதிர மலை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளியாறு, குழித்துறையாறு, பரளி யாறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-11.4, பெருஞ்சாணி-3.2, சிற்றார்-1-6.2 சிற்றார்-2-2, பூதப்பாண்டி-5.2, கன்னிமார்-8.8, நாகர் கோவில்-2.4, சுருளோடு- 1.4, தக்கலை-3.4, குளச்சல்-8.6, இரணி யல்-6.2, பாலமோர்- 6.2, மாம்பழத்துறையாறு- 2.2, திற்பரப்பு-7.6, கோழிப்போர் விளை- 5.2, அடையாமடை-2.6, முள்ளங்கினாவிளை- 4.2, ஆணைக் கிடங்கு-3.4, முக்கடல்-3.2.

    ×