search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் கிளை கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்
    X

    இரணியல் கிளை கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்

    • பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தக்கலை ஒன்றிய கவுன்சிலர் மனு
    • இன்னல்களை கொடுத்து வருகிற தென்னக ரெயில்வே துறையினர் மீது மாவட்ட கலெக்டருக்கு பல புகார்

    கன்னியாகுமரி :

    தக்கலை ஊராட்சி ஒன்றி யம் ஆத்திவிளை ஊராட்சி பகுதியில் உள்ள தென்னக ரெயில்வே துறையினரின் இரணியல் ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடங்கி 18 மாதங்களாகியும் மிகவும் மந்த நிலையில் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் பெருமளவில் பொதுமக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக 18 மாதங்களாக திங்கள்நகர்-அழகிய மண்ட பம் சாலை போக்குவரத்து பாதிப்பு, இரணியல் கிளை கால்வாயில் பாலம் தாழ்வாக கட்டப்பட்டுள்ளதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடினால் உள்ள மக்களின் பாதிப்பு, ஆத்திவிளை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை திறக்காததால் பரம்பை பகுதியில் துண்டிக்கப்பட்ட பாலத்திற்கு மாற்று பாதை இன்றி மக்களின் பெருமள விலான பாதிப்பு, மண்டைக் காடு, தக்கலை, குமார கோவிலுக்கு இரணியல் கோணம் வழியாக சென்று வந்த அரசு பேருந்து வழித்தடத்தில் இரணியல் கோணம் பகுதியில் உள்ள சாலையை எந்த முன்னறிவிப்பும் இன்றி துண்டித்து தொடர்ந்து மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிற தென்னக ரெயில்வே துறையினர் மீது மாவட்ட கலெக்டருக்கு பல புகார் மனுக்கள் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்ப டவில்லை.

    அதனைத்தொடர்ந்து அதன் ஒரு பகுதியாக இரணியல் கிளை கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்திட வேண்டி நாகர்கோவில் பொதுப்பணி துறை அலு வலகத்தில் தக்கலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஹரிதாஸ், ஜேக்கப், பாச னத்துறை தலைவர் ஜேசுதாஸ் மற்றும் விவசாய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜான் சவுந்தர், துணை தலைவர் ஜேக்கப் அருள் பால் மற்றும் காங்கிரஸ் பிர முகர்கள், பொதுமக்கள் மனு அளித்தனர்.

    Next Story
    ×