search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பபூ சாகுபடி தாமதத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலச்சியமே காரணம்
    X

    கும்பபூ சாகுபடி தாமதத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலச்சியமே காரணம்

    • விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
    • மழையால் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என இரு போக சாகுபடிகள் செய்யப் பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும் பாசன குளங்களை நம்பியும் விவ சாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 69 சதவீதம் பொய்த்து விட்ட காரணத்தி னால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் குறைவாக இருந்தது. பாசன குளங்களி லும் தண்ணீர் குறைவாகவே இருந்ததால் விவசாயிகள் கன்னி பூ சாகுபடி பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விவசா யத்திற்காக ஜூன் 1-ந் தேதி பேச்சிபாறை அணை திறக்கப்பட்டது.

    அணை திறக்கப்பட்ட பிறகும் கடைமடை பகுதி களுக்கு தண்ணீர் வழங்காத தால் விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சாகு படி பணி தொடங்கிய பிறகும் கடைமடை பகுதி களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. பாசன கால் வாய்கள் தூர் வாரப்படாத தால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடை மடை பகுதிகளுக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி னார்கள்.

    ஆனால் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கின் கார ணமாக சானல்கள் தூர் வாருவதில் தாமதம் ஏற்படு வதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தூர்வாரும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். சானல்கள் தாமதமாக தூர்வாரப்பட்ட தால் விவ சாயிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

    சாகுபடி பணிகள் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து மணவாள குறிச்சி உட்பட மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் கன்னி பூ சாகுபடி செய்யப்பட்ட ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஹெக்டேர் நெற்பயிர்கள் அறுவடை ஆகாத நிலையில் உள்ளது. தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    ஒரு சில இடங்களில் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து முளைத்தது விவ சா ணயிகளுக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. வழக்க மாக இந்த தருணத்தில் 2-ம் போக சாகுபடியான கும்ப பூ சாகுபடி செய்யப்படும். ஆனால் கன்னி பூ சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் அறுவடை நடைபெறாத நிலையில் கும்ப பூ சாகுபடி பல்வேறு இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சுசீந்திரம் தேரூர் பூதப் பாண்டி பகுதிகளில் கும்ப பூ நடவு பணி நடைபெற்று வருகிறது. கும்ப பூ சாகுபடி நேரத்திலாவது பொதுப் பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக இருந்து வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையின் காரண மாக பல்வேறு இடங்களில் பாசன குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஏற்பட்டது. அந்த உடைப்பு கள் சாக்கு மூட்டைகள் அடுக்கி தற்காலி கமாக அடைக்கப்பட்டது.

    ஆனால் இன்று வரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த சாக்கு களை அப்புறப்படுத்தி விட்டு நிரந்தரமாக குளங்க ளில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். சானல்களில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக நாகர்கோவி லில் உள்ள பொதுபணிதுறை அலுவலகத்திற்கு விவசாயி கள் பொதுப்ப ணித்துறை அதிகாரிகளை பார்க்க வந்தால் அவர்களை அலட்சி யப்ப டுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

    வேளாண் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றாததால் விவசா யம் பாதிக்கப்படு வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.எனவே இரண்டு துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து விவசாயிகள் நலன் கருதி அதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×