search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருந்தன்கோடு ஒன்றியத்தில் குளத்தின் பக்கச்சுவரை விரைந்து கட்டித்தர வேண்டும்
    X

    குருந்தன்கோடு ஒன்றியத்தில் குளத்தின் பக்கச்சுவரை விரைந்து கட்டித்தர வேண்டும்

    • பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு

    இரணியல் :

    குளச்சல் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட குருந்தன்கோடு ஒன்றியத்தில் நெட்டாங்கோடு பஞ்சாயத்தில் கண்டன்விளை மல்லங்கோடு நெட்டாங்கோடு வழியாக பேயன்குழி சானல் கரையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அக்கிராமணம் குளத்தின் கரை மற்றும் கிணற்றின் பக்கவாட்டு சுவர் பல வருடங்களாக இடிந்து கிடக்கிறது. இந்த குடிநீர் கிணறு நீரை இப்பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் மொட்டவிளை, பேயன்குழி சுற்று வட்டார பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    பக்கச்சுவர்களை கட்டித்தர வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் குளத்தின் கரை மற்றும் கிணற்று பக்கச்சுவரை விரைந்து கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் அனுஷ்யா மதுக்குமார் கூறுகையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அக்கிராமணம் குளத்தின் கரை சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குளத்தின் கரை மற்றும் கிணற்றின் பக்கச்சுவரை விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×