search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூர்வாரும் பணி"

    • அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
    • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கான 5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின்போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன.

    அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக 2 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் ரூ.1 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது பெய்து வரும் பருவமழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார கிராமமான 'மோவூர் முட்டம். கால்நாட்டா ம்புலியூர் ,ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் பருவமழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வேளாண்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் உத்தரவின் பேரில் கீழணை உதவி செயற் பொறியாளர் ெகாளஞ்சிநாதன் முன்னிலையில் குமராட்சி உதவி பொறியாளர் அருளரசன் ஆகியோரின் நேரடி பார்வையில்இந்தப் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தற்பொழுது தூர்வாரப்பட்டு முடிவடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது.
    • மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

    மடத்துக்குளம்

    உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 63 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேரடியாக பலனளித்து வருகிறது. இதுதவிர நிலத்தடி நீராதாரத்தை உயர்த்துவதற்கு உதவுவதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு கைகொடுக்கிறது.

    இந்தநிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் பிரதான கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் கால்வாயின் கரையில் மட்டுமல்லாமல் கால்வாயின் உள்ளேயும் குப்பைகளை கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் கால்வாயில் தேங்கும் குப்பைகள் மற்றும் பாலிதீன் கழிவுகள் நீர் திறப்பின்போது மடைகளில் அடைப்பை ஏற்படுத்துவதால் பெருமளவு நீர் வீணாகிறது. அத்துடன் கழிவுகளால் விளைநிலங்களும் வீணாகும் நிலை உள்ளது.மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மண் குவியல் நிறைந்து பாசன நீர் செல்வதில் தடைகளை ஏற்படுத்துகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியில் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அமராவதி பிரதான கால்வாயை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைப்பயிர்களை காப்பாற்ற போராடும் நிலை உள்ளது.எனவே அமராவதி அணையிலிருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில் தற்போது 64.87 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவான இருப்பேயாகும்.

    பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகாமல் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கும் முழுமையாக போய் சேர வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு கால்வாய் தூர்வாரப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.ஆனால் கிருஷ்ணாபுரம் முதல் துங்காவி வரையிலான குறைந்த தூரத்துக்கு மட்டுமே தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. எனவே கால்வாயை முழுமையாக தூர்வாரவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமேசுவரத்தில் கோவில் குளம் தூர்வாரும் பணி நடந்தது.
    • இந்த குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முத்துராமலிங்கத்தேவர் நகர் பகுதியில் அங்காளபரமேஸ்வரி கோவில் குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிடும் முன்பு குளங்களை தூர் வரி தண்ணீர் சேமிக்கும் வகையில் குளம் தூர் வாரும் பணியை நகர்மன்ற தலைவர் நாசர்கான் தொடங்கி வைத்தார். இதில் ஆணையர் கண்ணன், துணைத்தலைவர் தட்சிணமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் அர்ச்சணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
    • பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வேகவதி ஆறு தாமல் ஏரி அருகே உற்பத்தியாகிறது. பின்னர் காஞ்சிபுரம் நகரப்பகுதிக்குள் பாய்ந்து அதன்பிறகு திம்ம ராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் கலக்கிறது.

    இந்த ஆறு காஞ்சிபுரம் நகரபகுதிக்குள் பெருமளவில் ஓடுவதால் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

    வேகவதி ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதால் ஆண்டு தோறும் இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் நகரில் வேகவதி ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

    இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வேகவதி ஆற்று பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்வதற்கு வசதியாக மழைக் காலங்களில் தூர்வாரும் பணி தொடங்கும். இந்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதனால் காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கை தடுக்க தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    ஆனாலும் பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும். அதேபோல் இந்த ஆண்டும் அதிக மழை பெய்தால் பாலங்கள் உடைந்து விடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

    எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
    • கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை யொட்டி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து ஜே.சி.பி வாகனங்கள் மூலம் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திட வேண்டும். மேலும் கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து அந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கடலூர் வண்டிப் பாளையம், முது நகர், பச்சையாங்குப்பம், நத்தவெளி சாலை, திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணியை மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
    • லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட் பட்ட முதுநகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். 

    கலெக்டர் அருண்தம்பு ராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜய லட்சுமி செந்தில், பால சுந்தர், மாவட்ட பிரதிநிதி கள் துர்கா செந்தில், மஸ்கட் புகழேந்தி, பகுதி துணை செயலாளர்கள் வக்கீல் பாபு, லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
    • 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை வழக்கமாக பெய்யும். இக்காலக் கட்டத்தில் தமிழகத்துக்கு தேவையான அளவு மழை பொழிவு இருக்கும்.

    பருவ மழை காலம் நெருங்கி வருவதால் கால்வாய்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நீர் வழிகளில் தடையின்றி வெள்ள நீரை கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக நீர் வளத்துறை கிட்டத்தட்ட 30 சதவீத பணிகளை முடித்து உள்ளது. 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போரூர், செங்குன்றம், சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணி தொடங்கி நீர்வாழ்களை களை அழிக்கும் பணி நடந்து வருகிறது. 184.45 கி.மீ. தொலைவுக்கு செல்லும் கால்வாய்களில் 77 பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அடையாறு ஆற்று முகத் துவாரம் மற்றும் முட்டுக் காடு, புதுப்பட்டினம் கடல் முகத்துவாரங்களில் குவிந்துள்ள மணல் அகற்றப்படுகிறது. கண்டலேறு-பூண்டி வாய்க்கால் முற்றத்தின் அரிக்கப்பட்ட கரைகளை மூடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த் தேக்கத்திற்கு செல்கிறது.

    பருவமழையை கருத்தில் கொண்டு நீர் வழிகளில் உள்ள செடிகள், கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை 137 எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயில் உள்ள குப்பைகளை 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அதிகாரிகள் அகற்ற வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூவம் பகுதிகளிலும், குறுகிய பகுதிகளிலும் துப்புரவு பணியை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

    விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நுல்லா பகுதியில் சென்னை மாநகராட்சி உதவியுடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 72 லாரிகளில் காய்கறி கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த பணியை கண்காணிக்க என்ஜினியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட செடிகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.

    அகற்றப்பட்ட செடிகள், மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும் அதேவேளையில் அழிக்கப்பட்ட தாவரங்களை உரமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    • ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.
    • கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகள் மூலம் பூர்த்தி செய்யப் படுகிறது.

    சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையை சமாளிக்கும் வகையில் நீர்நிலை தேக்கத்தை அதிகப்படுத்த நீர்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

    ரெட்டேரியில் தூர்வாரி வண்டல் மண்ணை அகற்றி நீர்தேக்க அளவை 32 மில்லியன் கன அடியில் இருந்து 45.13 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோர முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.43.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரெட்டேரியில் இருந்து சுமார் 7 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட உள்ளது. ஏரிக்கரையில் உள்ள வண்டல் மண்ணை அகற்றிய பிறகு அங்கு பறவைகள் வந்து செல்ல 3 தீவுகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.

    சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர்தேக்கங்களை அதிகரிக்க சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதன்படி ரெட்டேரி, பெரும்பாக்கம், முடிச்சூர், செம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், போரூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 ஏரிகளை ரூ.100 கோடி புணரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இன்னும் சில நாட்களில் டெண்டர் பணிகள் முடி வடைந்து இந்த மாத இறு திக்குள் பணிகள் தொடங் கப்பட உள்ளது. 18 மாதங்க ளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். ஏரிக்கரை பகுதி யில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.

    இப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பூண்டி, புழல் செம்பரம் பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை ஏரிகளில் மொத்தம் 13.213 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். சென்னை யின் குடிநீர் மற்றும் தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 22 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் இது அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் 32 டி.எம்.சி. ஆக அதிகரிக்கும் என்று அரசு கணித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

    • பணிகள் முடிந்தாலும் அடுத்த சில மாதங்கள் வரை மட்டுமே குடிநீர் வழங்க முடியும்.
    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்த ப்பட்டு வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு கரட்டுப்பட்டி மூலவைகை ஆற்றில் 4 இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மழை இல்லாத காரணத்தால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் வெயில் அதிகரித்து காணப்படுவதால் உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.

    தற்போது உறை கிணறு களில் மிக குறைந்த அளவி லான நீர் மட்டுமே உள்ளது. இதனால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இதை யடுத்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று முதல் உறை கிணறுகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னசாமி ஆகியோர் பார்வையி ட்டனர்.

    பணிகள் முடிந்தாலும் அடுத்த சில மாதங்கள் வரை மட்டுமே குடிநீர் வழங்க முடியும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்த ப்பட்டு வருவதாகவும், குடிநீர் வீணாகுவதை சேதமடைந்த குழாய்கள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஊராட்சி நிர்வா கத்தினர் தெரிவித்தனர்.

    • திருவாரூர் நகராட்சியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும்.
    • வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருவமழை தொடங்க இருப்பதால், அனைத்து வார்டுகளிலும் பாரபட்சம் இன்றி மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மேலும் நகராட்சி முழுவதும் உள்ள வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து தர வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. நகர்மன்ற உறுப்பினர் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கிறது.

    உடன் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைவரின் புகைப்படங்களும் சேகரித்து ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், சங்கர், செந்தில், ரஜினி சின்னா, அசோகன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும்.
    • குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் அமைந்துள்ளது பள்ளபாளையம். இங்கு புதர்கள் மண்டி கிடந்த குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது 75 சதவீதம் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்னும் 25 சதவீத பணிகளை நிறைவு செய்தால், குளத்தில் அதிக அளவு நீரை தேக்க முடியும்.

    அத்திகடவு திட்டத்தால் இணைக்கப்பட்ட இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும். தொடர்ந்து பணிகள் நடந்து வருவதால் விரைவில் குளம் தூர்வாரும் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×