search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி"

    • சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ந்தேதி அதிகாலை.
    • திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. வைண்ட ஏகாதசி விழா பகல் பத்து, ராத்திரி பத்து என்று தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும். அப்போது திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாளாக திருநெடுந்தண்டகத்துடன் தொடங்கும். நான்முகனுக்கு உண்டான அகங்காரத்தை ஒடுக்க நினைத்த திருமால், தன் காதுகளில் இருந்து மது, கைடபர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் நான்முகனைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த திருமால், பிரம்மாவை காப்பாற்றி, அசுரர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகக் கூறினார்.

    அப்போது அந்த அசுரர்கள் திருமாலுக்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாக ஆணவத்துடன் கூறினர். திருமாலும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அவ்வாறே அசுரர்களை வதமும் செய்தார். அப்போது ``பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என்ற வரத்தை அசுரர்கள் கேட்டனர்.

    அதன்படி, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலாம் சொர்க்கவாசல் திறந்து, அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார் திருமால். அசுரர்கள் பெற்ற முக்தியை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ``பெருமாளே! தங்களது அர்ச்சாவதாரம் விளங்கும் சகல ஆலயங்களிலும் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும்.

    அப்போது அந்த வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் பரமபத மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர் அசுரர். தீனகருணாகரனான திருமாலும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுவே வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் ஐதீகத்தின் திருக்கதை.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாள்.
    • வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளல்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர, ரத்தின லட்சுமி பதக்கம், மகர கர்ண பத்ரம், புஜகீர்த்தி, ரங்கூன் அட்டிகை, சந்திர வில்லை, காசு மாலை, 2 வட முத்து மாலை, ஒட்டியாணம், அடுக்கு பதக்கங்கள்உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து, வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாள்.
    • திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், விமான பதக்கம், முத்துமாலை, பவள மாலை, காசு மாலை, ரத்தின அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாள் இன்று.
    • வெண்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று `கண்ணனெனும் கருந் தெய்வம்' பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து சாய் கிரீடம், ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், சந்திரகலா, பருத்திப்பூ பதக்கம், நகரி, ஆறு வட முத்துமாலை, காசு மாலை, அடுக்கு வைர மகர கண்டிகை பதக்கங்கள், வைர ரங்கூன் அட்டிகை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து பின் சேவையாக, புஜ கீர்த்தி, வெண்பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள்.
    • அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை நம்பெருமாள் முத்து கிரீடம், ரத்தின காதுகாப்பு, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பின்தொடர பக்தர்கள் புடைசூழ ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    • பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.
    • ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள்.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவ தும் பல்வேறு திரு விழாக்கள் வெகு விமரிசையாக நடை பெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வை குண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராபத்து,இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்ட கம் நிகழ்ச்சியுடன் நேற்று (12-ந்தேதி) தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று தொடங் கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

    இரவு 7.30 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

    இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (22-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    23-ந்தேதி ராப்பத்து உற்ச வத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத் தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

    29-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும். 30-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

    • ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்குகிறது.
    • திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஸ்ரீரங்கம்:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா ஜனவரி 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. 22-ந்தேதி மோகினி அலங்காரமும், 23-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. 29-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 30-ந்தேதி திருமங்கைமன்னன்வேடுபறி நிகழ்ச்சியும், ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறகாவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

    புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகுண்ட ஏகாதாசி திருவிழாவில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள். இந்த ஆண்டு சுமார் 2½ லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 2,500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். பகல்பத்து மற்றும் ராப்பத்தின் போது திருச்சி மாநகர போலீசார் 380 பேர் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

    இந்த வருடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை சித்திரைவீதி மற்றும் உத்திரவீதியில் நிறுத்த அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 120 கண்காணிப்பு கேமராக்கள்,

    கோவிலை சுற்றி வெளிப்புறத்தில் 102 கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 14 கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை 13-ந்தேதியிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
    • திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நம்பெருமாள் அன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார்.

    காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்ட பத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    பகல் பத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 22-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    23-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 29-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 30-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

    ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

    • குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.
    • இங்கு, கிருஷ்ண ஜெயந்தி மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாப்படுகிறது.

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பீமநகர்.

    இங்கே, ஹீபர் ரோட்டில் உள்ளது ஸ்ரீ வேணு கோபாலகிருஷ்ணன் கோவில்.

    குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.

    எனவே, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், வியாபாரம் சிறக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வோரும்

    பால் பாயசம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தால்,

    நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் ஸ்ரீகண்ணன் என போற்றுகின்றனர்.

    மாதம் தோறும் ரோகிணி நட்சத்திர நாளில், ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இதில் கலந்து கொண்டு, வெண்ணை அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால்,

    மனவளர்ச்சி குன்றியவர்கள், விரைவில் நலம் பெறுவார்கள். பூரண குணம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    இங்கு, கிருஷ்ண ஜெயந்தி மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாப்படுகிறது.

    அன்றைய நாளில் சிறப்பு ஹோமங்கள், உறியடி உத்சவம், புஷ்பாஞ்சலி என அமர்க்களப்படும்.

    • ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் விசாரிக்கப்படும்.
    • நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தியை கிடைக்கும்.

    பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா பிறப்பதும் மறைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறப்பெடுத்த ஜீவன் மறைந்ததும் வைகுண்ட வாசலை நோக்கி செல்கிறது. அப்போது அங்கு அந்த ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் விசாரிக்கப்படும். அநேக புண்ணியங்களை செய்த ஆன்மா வைகுண்டத்தில் அனுமதிக்கப்பட்டு பரமபதத்தை அடையும். பாவம் செய்த ஆன்மாக்கள் நரகத்துக்கு அனுப்பப்படும் என்பது நம்பிக்கை.

    பாவங்கள் செய்த ஆன்மா என்றாலும், பரம்பொருளின் கருணையால், இறுதி வாய்ப்பாக இந்த கேள்வி கேட்கப்படும். 'பூலோக வைகுண்டமாம் திருவெள்ளறையின் திருக்கோபுரத்தை தொலைவிலாவது தரிசித்த புண்ணியம் உமக்குண்டா!' ஆம் என்று அந்த ஆன்மா கூறினால், அந்த ஆன்மா உடனே வைகுண்டத்தில் அனுமதிக்கப்படுமாம்.

    நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தியை அளிக்கும் திருவெள்ளறை கோயில் திருவரங்கத்துக்கு இணையான பெருமை கொண்டது என்பார்கள் பெரியோர்கள். சோழ நாட்டு திவ்ய தேசங்களில் இது நான்காவது திருத்தலம்.

    திருமகள் ஷேத்திரம், ஸ்வேதகிரி, நீலிகா வனம், வராகபுரி, உத்தம ஷேத்திரம், ஹித ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது திருவெள்ளறை. சிபி மன்னன் காலத்தில் திருமாலோடு 3700 வைஷ்ணவ பெரியோர்கள் வாழ்ந்த தலம் இது.

    மாலவனின் பக்தனான சிபி மன்னன் இங்கு வந்திருந்தபோது அவனுக்கு வராஹ மூர்த்தி அருட்காட்சி தந்து ஆட்கொண்டார். அப்போது மார்க்கண்டேய மகரிஷியின் ஆணைப்படி இங்கு திருமாலுக்கு பிரமாண்ட ஆலயம் எழுப்பி வழிபட்டான் சிபி. திருமகள் தவமிருந்து பெருமாளை அடைந்த தலமும் இது. இங்குள்ள பெருமாள் ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் எனப்படுகிறார். ஆம், அழகிய தாமரை கண்களைக் கொண்டவர் இவர்.

    கருவறையில் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு திருமுக மண்டலமாக காட்சி தருகிறார் ஶ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள். பெருமாளுக்கு அருகே சூரிய, சந்திரா் சாமரம் வீச, கருடனும் ஆதிசேஷனும் நின்ற திருக்கோலத்தில் பெருமாளை வணங்கிக் கொண்டிருக்கின்றனர். பெருமாளின் திருவடியில் மார்க்கண்டேயர் தவம் செய்யும் கோலத்தில் அமா்ந்துள்ளார்.

    திருவெள்ளறை தலத் தீர்த்தமான பூங்கிணற்றில் திருமகள் பங்கஜவல்லி (பங்கயச்செல்வி) தவமிருந்த வேளையில் திருமால் ஆலிலை துயின்ற ஆதிபிரான் கோலத்தில் காட்சி அளித்து திருமகளுக்கு அருள் செய்தார். எனவே ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கிருஷ்ணனின் அம்சமானவர் என்றும் கூறப்படுகிறது. பங்கயச் செல்வி, பரிமளதேவி, செண்பகவல்லி என்றெல்லாம் போற்றப்படும் தாயாருக்கே இங்கு எல்லா முதல் மரியாதையும் என்பது இங்கு விசேஷத் தகவல். பெருமாள் வழங்கிய வரத்தின்படி இன்றும் எல்லா உற்சவத்திலும் தாயாரே முன்னே செல்வார். திருமால் அவரைப் பின்தொடர்ந்து செல்வார்.

    இத்தலத்து பெருமாளை பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் 24 பாசுரங்களில் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள். கூட நிகமாந்த மகாதேசிகரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த தலமும் கூட இது. ஸ்ரீராமானுஜரின் சீடரான எங்களாழ்வார் பிறந்த தலமும் திருவெள்ளறையே. ராமானுஜர் இங்கு வந்தபோது தாயாருக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை ராமானுஜருக்கு அளித்து பசி போக்கினாராம். அதனால் இன்றும் தாயாருக்கு அமுது செய்யப்பட்ட பிரசாதமே ராமானுஜருக்கு படைக்கப்படுகிறது.

    இங்குள்ள சுவஸ்திக் வடிவ திருக்குளமும் உத்தராயன - தட்சிணாயன வாசல்களும் சிறப்பானவை. பெருமாள் சந்நிதிக்கு இரு வாசல்கள் படியேறிச் செல்லும் வகையில் உள்ளன. ஆன்மாக்கள் உய்வு பெற, தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் சென்று வழிபடும் முறை இன்றும் உள்ளது.

    இங்குள்ள புகழ்பெற்ற 'ஸ்வஸ்திக் குளம்' என்ற சக்கரக்குளத்தின் சிறப்பு, ஒரு துறையில் குளிப்பவா்களை எதிர் துறையில் குளிப்பவா்கள் பார்க்க முடியாது என்பதே. ஸ்வஸ்திக் வடிவ நான்கு புறத்திலும் 52 படிகள் உள்ளன. இக்குளத்தினை `நாலு மூலைக்கேணி, மாற்பிடுகு பெருங்கிணறு' என்றும் அழைப்பர்.

    ஶ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், ஆதிசேஷன், குபேரன் ஆகியோர் இன்றும் அன்றாடம் இங்குள்ள சுவாமியை வழிபடுவதாக ஐதீகம். திருமகள் தங்கி இருந்த பூங்கிணறு, திவ்ய தீா்த்தம், வராஹ தீா்த்தம், குசஹஸ்தி தீா்த்தம், சந்திர புஷ்கரணி தீா்த்தம், பத்ம தீா்த்தம், புஷ்கல தீா்த்தம், மணிகா்ணிகா என 8 தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

    ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த ஆலயத்தில் பல்லவமன்னன் தந்திவா்மன் காலத்து (805-ம் ஆண்டு) கல்வெட்டு தொடங்கி விஜயநகர அரசர்கள் காலத்து கல்வெட்டுகள் வரை இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கூறுகின்றன. வரலாற்று பெருமைகளும் புராண மகிமைகளை கொண்ட இந்த திருவெள்ளரைத் திருத்தலம் திருமகளின் பரிபூரண கடாட்சத்தைக் கொண்டுள்ளது.

    அதேபோல் கருணைக் கடலான செந்தாமரைக் கண்ணனாம் புண்டரீகாட்சப் பெருமானின் அருளையும் கொண்டுள்ளது. வாய்ப்பு கிடைப்பவர்கள் திருவெள்ளரைத் திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். செய்த வினைகள் யாவும் அழிந்து எளிதில் பெருமானின் கருணைக்கு ஆளாகலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

    அமைவிடம்:

    திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் பாதையில் 20 கி.மீ தொலைவில் மண்ணச்சநல்லூர்க்கு அருகில் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.

    • மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இங்கு வந்தனர்.
    • இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.

    மனைவியை விரட்டினால் தண்டனை தரும் லால்குடி சப்தரிஷிஸ்வரர்

    திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பாதையில் 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது லால்குடி.

    இங்கு பழம்பெரும் சிறப்புமிக்க ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

    மனைவி மீது கோபப்பட்டு, மாமனார் வீட்டுக்கு விரட்டி விட்ட ஆண்களுக்கு தண்டனை தரும் கோவில் இது என்கிறார்கள்.

    மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்த ஊர்பக்கம் வந்தார்கள்.

    அப்போது திருவத்துறை ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகு படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

    அதனைக் கவனித்த மகாலிக்காபூர் அருகில் இருந்த தளபதியிடம் உருது மொழியில்," அது என்ன லால் (சிகப்பு) குடி (கோபுரம்)?.." என்றான். அச்சொற்றொடரே லால்குடி என்று மாறி விட்டது.

    இந்த கோவிலில் மிகப்பழமையான கோவில். மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி.

    சப்தரிஷிகளான அத்தரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால், இறைவனுக்கு ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் எனப் பெயர் ஏற்பட்டது.

    இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.

    மாரிசி மகரிஷியின் பேரன் தான் சூரியன் அத்திரியின் மகன் தான் சந்திரன், சந்திரனின் மகன் புதன், அங்கீசரின் மகன் குரு, வசிட்டரின் வழி வந்தவர்தான் செவ்வாய்.

    எனவே நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள் சப்தரிஷிஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும் என்று சொல்லப்படுகிறது.

    இங்குள்ள லிங்கத்தின் மேல் வரி வரியாய் பள்ளங்கள் காணப்படுகின்றன.

    தாரகா சூரனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள்.

    சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார்.

    அதன் பொருட்டுத்தான் சூரனை அழிக்க முருகன் பிறந்தார்.

    அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர்.

    அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம் பாலகனாக உள்ள முருகனை கொண்டு வந்து அந்த 7 குடில் பகுதியில் போட்டார்.

    ரிஷி பத்தினிகள் அதிசயமாய் அந்தக் குழந்தையைப் பார்த்தனர்.

    பால குமாரன் லேசாய் அழத் துவங்கினான். 7 பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர்.

    குழந்தைக்கு பசி ஏற்பட அழுகை அதிகரித்தது.

    ரிஷிபத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள் தூக்கிப் பரிவோடு தாலாட்டிப் பாலூட்டினார்கள்.

    வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர்.

    சிவனின் வாரிசுக்குப் பால் கொடுத்ததால் எவ்வளவு பெரும் பாக்கியம், காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே.

    அந்த நல்ல வாய்ப்பைப் கெடுத்து, அந்தப் புகழைக் கார்த்திகைப் பெண்களுக்குக் கொடுத்து விட்டீர்களே என்று மனைவியரை அடித்து விரட்டினர்.

    முருகப் பெருமான் தனது அவதார காரணத்தை உணர்ந்தார்.

    தாராகா சூரனைக் கொன்று போட்டு, வெற்றி வீரராய்த் திரும்பிக் கொண்டிருந்தபோது, சப்தரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார்.

    அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார்.

    நேராக திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர்., பலன் கிடைக்கவில்லை.

    பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்துக் கடும் தவும் புரிந்தனர்.

    கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்குப் பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு கடும் தவம் இருந்தனர்.

    இதையடுத்து சிவன் ஆண்களுக்கு சாப விமோசனம் தரும் தலமாக இது கருதப்படுகிறது.

    • பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து.
    • “நான்” எனும் அகங்காரம் பிரம்மனிடம் தென்பட்டது.

    திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

    பெரும் சிறப்புடைய சோழநாட்டின் ஒரு பகுதியாய் இருந்த பொன்னி நதியும், காவிரி நதியும் பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சுமார் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் சிறுகநூருக்கு மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது.

    இவ்வூரில் பழமையும் பெருமையும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் - ஈசன்

    கிழக்கு நோக்கிய சன்னிதி, சுயம்பு மூர்த்தி, அழகிய தோற்றம், மேலே தாராபாதிரம், நாகாபரனத்துடன் கூடிய சதுர ஆவுடை கூடிய திருமேனி, ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    ஸ்ரீ பிரம்மன் வரலாறு

    நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப்பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி.

    பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை.

    எல்லா சிவ ஆலயத்திலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

    ஆனால் திருபட்டூரில்மட்டுமே மிக பிரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார்.

    பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது , மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என "நான்" எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே, "பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்" என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார்.

    பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார். தன நிலையை உணர்ந்த பிரம்மன் திருபட்டூரில் துவாதச சிவலிங்கங்களை (பன்னிரண்டு) பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

    ஆக, பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும் திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார்.

    பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு,

    மீண்டும் ஒருமுறை அவர்களுடைய "தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக " என்று வரமளித்தார்.

    "விதி இருப்பின் விதி கூட்டி அருளுக " என்றும் வரம் வழங்கினார்.

    பரிகாரத்தலம்

    நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம் , செல்வ நலத்துடன் வாழ வேண்டும் என்பதே.

    அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவர்.

    ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்

    திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு.

    தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பரிகார முறை

    முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு தீபமிட்டு ஒன்பது முறை வளம் வந்து வேண்டுதல் வேண்டும்.

    ஒவ்வருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் செய்தால் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம்.

    இவ்வாறு வேண்டி பலன் பெற்றோர் பல பேர் உள்ளனர்.

    பொதுவான பரிகாரம்

    கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தை இன்மை, மன வியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசித்தாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி "திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது " என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

    ×