search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The opening of the gates of heaven"

    • வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
    • திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நம்பெருமாள் அன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார்.

    காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்ட பத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    பகல் பத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 22-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    23-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 29-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 30-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

    ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
    • கோவில் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் ஒன்றாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று, சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.

    மேலும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதன் இரு அரக்கர்களுக்கு மோட்சமளிக்க மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும்

    அப்போது பெருமாளிடத்தல் அசுரர்கள் இந்நாளன்று இந்த வாசல் வழியே பெருமாள் வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தங்களுக்கு கிடைத்தது போலா மோட்சம் கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

    இப்பெரும் புராணம் வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு பெருவிழா இன்று பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் நடைபெற்றது. மேலும் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    பாலாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள இக் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்கள் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

    பள்ளிகொண்டாவில் உள்ள உத்திர அரங்கநாதர் கோவிலில் ஒரு இரவு தங்கினாலே போதும் மோட்சம் கிடைக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளதாக ஆன்மிக பெரியவர்கள் கூறுகின்றனர்.

    இந்தக் கோவிலில் கருவறையில் அரங்கநாதர் ஆதிசேஷன் மீது சங்கு சக்கரதாரியாக பெரிய அழகு திருமேனியுடன் ஆகிருதியாக நிமிர்ந்து படுத்து தெற்கில் சிரசும் வடக்கே திருப்பாதங்களும் வைத்து யோக சயனமூர்த்தியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி உள்ளார்.

    சொர்க்க வாசல் திறப்பு

    இதனை முன்னிட்டு இன்று காலை 4 மணிக்கு மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு உற்சவர் புஷ்ப அலங்காரமும், ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷங்களுடன் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் சேவை நடைபெற்றது. இதனையடுத்து கருட வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.

    2 ஆண்டுகள் கழித்து எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பக்தர்களின் வசதிக்காக வேலூர், குடியாத்தம், ஆம்பூரில் இருந்து பள்ளிகொண்டாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    விழா ஏற்பாடுகளை வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் நித்தியா, ஆய்வாளர் சுரேஷ்குமார், கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் ஒடுகத்தூர் அருகே உள்ள குருவராஜா பாளையம் கிராமத்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான மலையப்பசுவாமி எனும் ஸ்ரீ தர்மகொண்ட ராஜா கோயிலிலும் சொர்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்த்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆம்பூர்

    ஆம்பூர் துத்திப்பட்டு பிந்து மாதவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    வைகுந்த வாசல் வழியாக பிந்து மாதவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா!! என கரகோஷம் எழுப்பினர். அதைதொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்தது
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

    திருப்பாற்கடல்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சோளிங்கர்:

    108 திவ்யதேசங்களில் ஒன்றான சோளிங்கர் பகுதி அமைந்துள்ள யோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    பக்த்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வெளிவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் அனைவரும் சுவாமி சொர்க்கவாசல் வழியாக வெளியே வரும் போது கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.

    இதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தோசித்த பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாட்டை திருக்கோயில் இந்து அறநிலைத்துறை உதவி ஆணையாளர் ஜெயா செய்திருந்தார்.

    • சிறப்பு பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில இன்று காலை 5.30 மணிக்கு மங்கல வாத்தியத்துடன் கோ பூஜை உள்பட மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். பின்னர் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்கி தன்வந்திரி பீட வளாகத்திற்குள் உற்சவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது
    • சிறப்பு அபிஷேகம் நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் சன்னதி பின்புறம் உள்ள வேணுகோபால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டன. பின்பு சாமிக்கு வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வைகுந்த வாயில் வழியாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மகா தீபார தனை செய்யப்பட்டது.

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் ஆண்டு தோறும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார்களால் அதிகாலை முதல் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பரமபதவாசல் வழியாக ஸ்ரீ பாண்டுரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதையடுத்து ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பாற்கடல் சயன திருக்கோலம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ பாண்டு ரங்கனுக்கு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணிஅளவில் சொர்க்க வாசல் வழியாக ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது.

    இதைமுன்னிட்டு கோயில் வளாகத்தில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்ப ட்டிருந்தது.ஒண்ணுபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.

    போளூர் பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் போளூர் அருகே குன்னத்தூரில் பெருமாள் கோவிலில் அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

    செங்கம்

    செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் சொர்க்கவாசல் நடை திறக்கும்ம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.

    இந்த வருடமும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் நடை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேணு கோபால பார்த்தசாரதி திருக்கோவில் பிரகாரத்தில் சொர்க்கவாசல் நடை திறந்து ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி உற்சவர் சுவாமி சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடும் குளிரிலும் பெருமாள் கோவில் வளாகத்தில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இஞ்சிமேடு

    திருவண்ணாமலை, மாவட்டம் இஞ்சிமேடு, கிராமத்தில் உள்ள வரதராஜ, பெருமாள் கோவிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதேசி விழா நடந்தது. காலையில் வரதராஜ, பெருமாள் பெருந்தேவி, தாயார் சக்கரத்தாழ்வார், சீதாதேவி, லட்சுமி நரசிம்மர், ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு திருமஞ்சனம் செய்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    கோவில் மண்டபத்தில் பல்வேறு வண்ண மலர்களால் சொர்க்கவாசல் போல் அலங்காரம் செய்து வைத்து. பெருந்தேவி, தாயார் சமேத வரதராஜ, பெருமாளுக்கு பல்வேறு பண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து. பாலாஜி, பட்டர் தலைமையில் 11 பட்டர்கள் லட்சதீப ஆராதனை செய்து வைத்து. பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள், காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சொர்க்கவாசல், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரதராஜ, பெருமாள் பெருந்தேவி, தாயாரை சாமி தரிசனம் செய்தனர்.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சடகோப கைங்கரிய சபா நிர்வாகிகள் பாலாஜி, வேங்கடநாதன், பட்டர்கள் செய்திருந்தனர்.

    ×