என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உத்திர அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- கோவில் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் ஒன்றாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று, சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.
மேலும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதன் இரு அரக்கர்களுக்கு மோட்சமளிக்க மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும்
அப்போது பெருமாளிடத்தல் அசுரர்கள் இந்நாளன்று இந்த வாசல் வழியே பெருமாள் வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தங்களுக்கு கிடைத்தது போலா மோட்சம் கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.
இப்பெரும் புராணம் வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு பெருவிழா இன்று பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் நடைபெற்றது. மேலும் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
பாலாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள இக் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்கள் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
பள்ளிகொண்டாவில் உள்ள உத்திர அரங்கநாதர் கோவிலில் ஒரு இரவு தங்கினாலே போதும் மோட்சம் கிடைக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளதாக ஆன்மிக பெரியவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கோவிலில் கருவறையில் அரங்கநாதர் ஆதிசேஷன் மீது சங்கு சக்கரதாரியாக பெரிய அழகு திருமேனியுடன் ஆகிருதியாக நிமிர்ந்து படுத்து தெற்கில் சிரசும் வடக்கே திருப்பாதங்களும் வைத்து யோக சயனமூர்த்தியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி உள்ளார்.
சொர்க்க வாசல் திறப்பு
இதனை முன்னிட்டு இன்று காலை 4 மணிக்கு மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு உற்சவர் புஷ்ப அலங்காரமும், ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷங்களுடன் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் சேவை நடைபெற்றது. இதனையடுத்து கருட வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
2 ஆண்டுகள் கழித்து எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பக்தர்களின் வசதிக்காக வேலூர், குடியாத்தம், ஆம்பூரில் இருந்து பள்ளிகொண்டாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் நித்தியா, ஆய்வாளர் சுரேஷ்குமார், கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் ஒடுகத்தூர் அருகே உள்ள குருவராஜா பாளையம் கிராமத்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான மலையப்பசுவாமி எனும் ஸ்ரீ தர்மகொண்ட ராஜா கோயிலிலும் சொர்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்த்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்