சோளிங்கர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
Published on

சோளிங்கர்:

108 திவ்யதேசங்களில் ஒன்றான சோளிங்கர் பகுதி அமைந்துள்ள யோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பக்த்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வெளிவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவரும் சுவாமி சொர்க்கவாசல் வழியாக வெளியே வரும் போது கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தோசித்த பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாட்டை திருக்கோயில் இந்து அறநிலைத்துறை உதவி ஆணையாளர் ஜெயா செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com