என் மலர்
நீங்கள் தேடியது "சொர்க்கவாசல் திறப்பு"
- இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
- ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படுகின்றன. அதன் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நடைமுறையைப்போல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசலை திறந்து வைக்க, கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசு முடிவு செய்தது. அப்போது பல பீடாதிபதிகள், மடாதிபதிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து கடிதங்களை அளித்தனர். அதன்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறையை தொடர்ந்தனர்.
ஆனால், இது ஆகம சாஸ்திரபடி விரோதமானது என்றும், 10 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம் நடப்பதால், டோக்கன்களுக்காக பக்தர்கள் ஒரே நேரத்தில் திரளுவதால் தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்படுவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் தரிசனத்தை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம நிபுணர்கள் ஆகியோருடன் இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் சொர்க்கவாசல் தரிசனம் குறித்த இறுதி முடிவு வெளியாகும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில இன்று காலை 5.30 மணிக்கு மங்கல வாத்தியத்துடன் கோ பூஜை உள்பட மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். பின்னர் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்கி தன்வந்திரி பீட வளாகத்திற்குள் உற்சவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- எந்தெந்த கோவில்களில் எல்லாம் பரமபத வாசல் உள்ளதோ அங்கு எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமின்றி, பெரும்பாலான பெருமாள் கோவில்களிலும், எந்தெந்த கோவில்களில் எல்லாம் பரமபத வாசல் உள்ளதோ அங்கு எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
இன்று 10-1-2025 அதிகாலையில் திருச்சி ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் ஆனது திறக்கப்பட்டது.
பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
- ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
- பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமின்றி, பெரும்பாலான பெருமாள் கோவில்கள் மற்றும் பரமபத வாசல் உள்ள கோவில்களில் எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில், இன்று (ஜனவரி 10) அதிகாலையில் திருச்சி ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் இருபிரிவினருக்கும் திவ்ய பிரபந்தம் பாடுவதற்கு தலா பத்து நிமிடங்கள் ஒதுக்கீடு செய்தனர்.






