search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீமநகர்"

    • குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.
    • இங்கு, கிருஷ்ண ஜெயந்தி மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாப்படுகிறது.

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பீமநகர்.

    இங்கே, ஹீபர் ரோட்டில் உள்ளது ஸ்ரீ வேணு கோபாலகிருஷ்ணன் கோவில்.

    குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.

    எனவே, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், வியாபாரம் சிறக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வோரும்

    பால் பாயசம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தால்,

    நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் ஸ்ரீகண்ணன் என போற்றுகின்றனர்.

    மாதம் தோறும் ரோகிணி நட்சத்திர நாளில், ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இதில் கலந்து கொண்டு, வெண்ணை அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால்,

    மனவளர்ச்சி குன்றியவர்கள், விரைவில் நலம் பெறுவார்கள். பூரண குணம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    இங்கு, கிருஷ்ண ஜெயந்தி மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாப்படுகிறது.

    அன்றைய நாளில் சிறப்பு ஹோமங்கள், உறியடி உத்சவம், புஷ்பாஞ்சலி என அமர்க்களப்படும்.

    ×