search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bramma"

    • பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.
    • வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    பிரம்மா, விஷ்ணு, விஷ்ணு அவதார மூர்த்திகள், தருமன், காமன், அகத்தியர், கண்ணுவர், கவுடன்னியர், இலக்குமி, விசாலன், பார்க்கவி, கலைமகள் என பலர் பூசித்து முக்தி பெற்ற திருத்தலம், மயிலாடுதுறை.

    திலீபன், யோக வித்தமன், சிசன்மன், சயதுங்கன், தீர்த்த கங்கை, நாதசன்மன், அனவித்தை, கங்கை முதலியோரும் யானை, குதிரைகள், கரம், கழுகு, பாம்பு, நரி, குரங்கு, பூனை, கிளி என இவ்வுயிர்கள் அனைத்தும் மாயூரநாதேஸ்சுரரை வணங்கி வழிபட்டு முக்தி நிலை பெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

    சைவப் பெருமக்களின் நாயகர்களாகிய திருஞான சம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசுப் பெருமானும் இத்தலத்திற்கு வந்து வாழ்த்தி வணங்கி பேறு பெற்றிருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.

    ஆயிரம் ஊரானாலும் மாயூரம் போலாகுமா? என்பார்கள். ஆக அந்த அளவிற்கு சிறப்பும் சீறும் பெற்ற திருத்தலம் மயிலாடுதுறை.

    பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.

    வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    நந்திதேவர் சாபம் விலகிய தலம். திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம். கங்கை மகள் முத்தியடைந்த திருத்தலம்.

    ஐப்பசித் திங்கள் முதல் நாள் துலாக்காவேரி நீராடுவது தலை சிறந்தது.

    குடகின் குளத்திலே பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக அகன்று ஏறத்தாழ 17.60 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதைத் திருப்பாராய்ந்துறை என்ற திருத்தலத்திலே பார்க்க முடியும்.

    இத்தலத்தில் ஒவ்வொர் ஆண்டு ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று திருக்கோவிலிருந்து பராய்ந்துறை நாதரே அகண்ட காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது இன்றைக்கும் வழக்காற்றில் உள்ளது.

    என்றாலும் குடகுநாட்டின் தலைக்காவிரியலே குளிப்பதை விட, அரங்கத்து அரவணையாக கோவிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே (திருப்பராய்ந்துறை) குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது சிறப்பு எனச் சொல்லுவார்கள் சிலர்.

    • பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து.
    • “நான்” எனும் அகங்காரம் பிரம்மனிடம் தென்பட்டது.

    திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

    பெரும் சிறப்புடைய சோழநாட்டின் ஒரு பகுதியாய் இருந்த பொன்னி நதியும், காவிரி நதியும் பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சுமார் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் சிறுகநூருக்கு மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது.

    இவ்வூரில் பழமையும் பெருமையும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் - ஈசன்

    கிழக்கு நோக்கிய சன்னிதி, சுயம்பு மூர்த்தி, அழகிய தோற்றம், மேலே தாராபாதிரம், நாகாபரனத்துடன் கூடிய சதுர ஆவுடை கூடிய திருமேனி, ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    ஸ்ரீ பிரம்மன் வரலாறு

    நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப்பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி.

    பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை.

    எல்லா சிவ ஆலயத்திலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

    ஆனால் திருபட்டூரில்மட்டுமே மிக பிரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார்.

    பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது , மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என "நான்" எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே, "பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்" என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார்.

    பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார். தன நிலையை உணர்ந்த பிரம்மன் திருபட்டூரில் துவாதச சிவலிங்கங்களை (பன்னிரண்டு) பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

    ஆக, பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும் திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார்.

    பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு,

    மீண்டும் ஒருமுறை அவர்களுடைய "தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக " என்று வரமளித்தார்.

    "விதி இருப்பின் விதி கூட்டி அருளுக " என்றும் வரம் வழங்கினார்.

    பரிகாரத்தலம்

    நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம் , செல்வ நலத்துடன் வாழ வேண்டும் என்பதே.

    அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவர்.

    ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்

    திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு.

    தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பரிகார முறை

    முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு தீபமிட்டு ஒன்பது முறை வளம் வந்து வேண்டுதல் வேண்டும்.

    ஒவ்வருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் செய்தால் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம்.

    இவ்வாறு வேண்டி பலன் பெற்றோர் பல பேர் உள்ளனர்.

    பொதுவான பரிகாரம்

    கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தை இன்மை, மன வியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசித்தாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி "திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது " என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

    ×