search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்"

    • மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது.
    • இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.


    நாகர்கோவில் : குருந்தன்கோடு அருகே உள்ள செருப்பங்கோடு என்ற இடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க ஆட்சியரின் ஒப்புதல் பெற உள்ளதாக தனியார் நில உரிமையாளர் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செல்போன் டவர் அமைக்க வி.ஏ.ஓ., தாசில்தார், மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஒப்புதல் வழங்கக்கூடாது என கோரி அப்பகுதி மக்கள் முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளனர். செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கன்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கிறார்கள்.
    • ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே மணியன்குழி பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது. இவர் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அசின் (வயது 30).

    நேற்று மாலை குலசேகரம் சந்தைப் பகுதியில் இருந்து மணியன்குழிக்கு செல்வதற்கு 2 மகள்களுடன் பஸ்சுக்காக காத்து இருந்தார்.

    அப்போது மணியன் குழி செல்வதற்கு ஒரு வேன் வந்தது. அதில் ஏறும் போது மர்ம நபர் ஒருவர் அசின் கையில் இருந்த பர்சை அபேஸ் செய்து விட்டார். வேனில் இருந்து இறங்கிய அசின், பர்சை காணாது அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பர்சில் ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பகுதியில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட னர்.

    அந்த பகுதியில் கடையில் உள்ள கன்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    • கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் . இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கல்வராயன்மலை கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 20). இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இேதபோல் கருமந்துறை பகுதியை சேர்ந்த சடைச்சி (50) என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கி ருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போனையும் திருடி சென்றனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து தங்க நகை திருடும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சைபர்கிரைம் ேபாலீசார் உதவி நாடப்பட்டது.

    சடைச்சி என்பவரது வீட்டில் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த செல்போன் கல்வராயன் மலை கிணத்தூர் பகுதியை சேர்ந்த தனபால் (28) மற்றும் அவரது மனைவி சசிகலா(20) ஆகிய இருவரிடமும் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரை யும் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.

    இத்தம்பதி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீடு புகுந்து நகை திருடிய தம்பதியை அவர்கள் திருடிய செல்போனே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இவர் செல்போனில் அதிகமாக பேசிக் கொண்டு இருந்ததால் கணவர் தங்கவேல் கண்டித்துள்ளார்.
    • உறவினர்கள், ேதாழிகள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கடலூர்:

    கடலூர் பனங்காட்டு காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி ரஞ்சிதா (31). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். ரஞ்சிதா புதுவை மாநிலம் கன்னிய கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் செல்போனில் அதிகமாக பேசிக் கொண்டு இருந்ததால் கணவர் தங்கவேல் கண்டித்துள்ளார்.

    இதனால் ரஞ்சிதா கோபித்து கொண்டு வில்வநகர் பாப்பா தோட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரஞ்சிதா பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், ேதாழிகள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து ரஞ்சிதாவின் கணவர் தங்கவேலு புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ரஞ்சிதாவை தேடி வருகிறார்கள். 

    • சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் மாவட்ட சிறை உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்கு தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சிறை கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகளை கண்காணித்த போது கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட கோவை காமராஜபுரத்தை சேர்ந்த கவுதம் (29), போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதம் முன்பு சிறையில் அடைக்கப்பட்ட கணபதி சிங் (45) ஆகியோர் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது.

    இருவரிடம் இருந்த செல்போன்களை சிறைக் காவலர்கள் எடுக்க முயன்ற போது செல்போன் தர மறுத்து அவர்களிடம் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவுதமிடம் இருந்து ஒரு பட்டன் செல்போன், சிம் கார்டு, 2 பேட்டரிகள், இயர் போன் ஆகியவற்றையும், கணபதி சங்கிடமிருந்து ஒரு சிம் கார்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கண்காணிப்பாளர் சிவகுமார் அளித்த புகாரின் பெயரில் கோபி போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோபி சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இதில் சிறை காவலர்கள் யாரேனும் இவர்களுக்கு உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
    • தெற்கு கோபுர வாசலில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமி நாதசாமி கோவில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலு க்கு வரும் பக்தா்கள் கைப்பேசி, புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு செல்ல தடைவி தித்து உத்தர விட்டுள்ளது.

    இந்த உத்தரவு நாளை (திங்க ட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.எனவே, கோவிலுக்கு வரும் பக்தா்கள் கைப்பேசி கொண்டு வருவதை தவிா்க்க வேண்டும்.

    மேலும், கொண்டு வருபவா்கள் தங்களது கைப்பேசி மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவிலின் தெற்கு கோபுர வாசலில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு தரிசனம் முடிந்து செல்லும் போது பெற்றுக்கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் இறங்கிய உறவி னர்கள் சேஷாத்திரிக்கு போன் செய்தனர்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சேஷாத்திரி (வயது 30). முடி வெட்டும் தொழிலாளி. இவர் புதுவை யில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது தாத்தா கடந்த மாதம் இறந்துவிட்டார். அவருக்கு 30-ம் நாள் வழிபாடு நேற்று நடைபெற்றது. இதற்காக இவரது உறவி னர்கள் டி.குமாரமங்க லத்திற்கு வந்திருந்தனர். வழி பாடு முடிந்து சென்னையை சேர்ந்த உறவினர்கள் நேற்று நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர். அவர்கள் சேஷாத்திரி வீட்டிலேயே செல்போனை வைத்து விட்டு சென்றனர். இதனால் விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் இறங்கிய உறவி னர்கள் சேஷாத்திரிக்கு போன் செய்தனர். செல்போ னை கொண்டு வந்து தரு மாறு கோரினர். 

    இதையடுத்து இன்று அதிகாலை 4.30 செல்போனை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கி ளில் சேஷாத்திரி சென்றார். அப்போது திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பேங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான தகவலின் பேரில் திரு வெண்ணைநல்லூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேஷாத்திரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இத்தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சேஷாத்திரியின் உறவி னர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • குமரியில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
    • மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம்

    நாகர்கோவில் :

    கலைஞர் மகளிர் உரிமை த்தொகை திட்ட த்தின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்ட த்தை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 77 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களில் 4 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்ட த்திற்கு விண்ணப்பித்திரு ந்தனர்.

    இதில் 2 லட்சம் விண்ண ப்பங்களில் குறைபாடுகள் இருந்ததையடுத்து களப்பணியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொ ண்டனர். இதை த்தொட ர்ந்து தகுதியான பயனா ளிகள் பட்டியல் தேர்வு செய்யப்ப ட்டது.

    தகுதியான பயனாளிகள் குறித்த விபரங்கள் கடந்த 15-ந்தேதி முதல் செல்போ னில் குறுஞ்செ ய்தி மூல மாக அனுப்பப்பட்டு வருகி றது. ரூ.1000 உதவி தொகை க்கான குறுஞ்செய்திகள் நேற்றும் பலருக்கு வந்தது. இதை பார்த்து பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் சுமார் 70 சதவீதம் பேருக்கு உதவித்தொகை வந்திருப்ப தாக கூறப்படு கிறது.

    மீதமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. நிராகரிக்கப்பட்டதில் முக்கிய காரணம் அரசு அலுவலர்கள் மற்றும் பென்ஷன் திட்டத்தில் உதவி பெறுபவர்கள் விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. இருப்பினும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிரா கரிக்கப்பட்டவர்களு க்கான விண்ணப்பங்கள் எதற்கு நிராக ரிக்கப்பட்டது என்பது குறித்த விபரங்கள் செல்போனில் குறு ஞ்செய்தி மூலமாக இன்று முதல் அனுப்புவதற்கு ஏ ற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த குறைபாடுகளை கலைந்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை யடுத்து உதவித்தொகை கிடைக்காமல் இருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் குறுஞ்செய்தி எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறுஞ்செய்தி வந்தவுடன் அந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவல கத்திற்கு சென்று குறைபாடு களை சரி செய்து 30 நாட்களுக்குள் வழங்கினால் மீண்டும் கலைஞர் உரிமை த்தொகை திட்டத்தற்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, கிள்ளியூர், தோவாளை, கல்குளம், திருவட்டார் தாலுகா அலுவலகங்களிலும், நாகர்கோவில், தக்கலை ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களில் பொதுமக்கள் தங்களது குறைபாடுகளை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க லாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் இறங்க முன் வரவில்லை.
    • பிரத்யேக மலையேறும் கருவியை பயன்படுத்தி 60 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியுள்ள பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்தார். அப்போது அங்குள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தனது நண்பர்களுடன் செல்போனில் செல்பி எடுத்தார்.

    அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு குரங்கு, ஜாசிமின் விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் உதவியை நாடினார். ஆனால் அந்த பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் இறங்க முன் வரவில்லை.

    இதையடுத்து அவர் தீயணைப்பு துறையினரின் உதவியை நாடினார். ஆனால் அவர்களோ, மனித உயிர்களை காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபடு வோம் என்று கூறி வர மறுத்தனர்.

    ஆனால் தனது செல்போனின் விலை ரூ.65 ஆயிரம் எனவும், அதில் பல ஆவணங்கள் இருப்பதாகவும், ஆகவே தனது செல்போனை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து தீயணைப்பு அதிகாரி ஜித்தன் குமார் நேரடியாக களத்தில் இறங்கினார்.

    அவர் பிரத்யேக மலையேறும் கருவியை பயன்படுத்தி 60 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். மிகவும் அபாயகரமான அந்த பள்ளத்தாக்கில் தீயணைப்பு அதிகாரியே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை மாநகர பகுதிகளில் மீட்கப்பட்ட 253 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மாயமான 253 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    மதுரை

    மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 253 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதைய டுத்து மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசாரின் அதி ரடி நடவடிக்கை மூலம் மாயமான 253 செல்போன் களும் மீட்கப்பட்டன.

    இதில் கோவில் சரகத்தில் 12, தெற்கு வாசல் சரகத்தில் 13, திடீர் நகர் சரகத்தில் 73, திலகர் திடல் சரகத்தில் 5, அவனியாபுரம் சரகத்தில் 87, செல்லூர் சரகத்தில் 17, அண்ணாநகர் சரகத்தில் 31 செல்போன்களும் அடங்கும். மீட்கப்பட்ட செல்போன் களை அதன் உரிமையாளர்க ளிடம் இன்று காலை ஒப்ப டைக்கப்பட்டது.

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் லோகநாதன், துணை கமிஷனர்கள் பிரதீப் (தெற்கு), சினேகபிரியா (வடக்கு), மங்களேஸ்வரன் (தலைமையிடம்) மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் செல்போன்கள் ஒப்படைக் கப்பட்டன.

    மேலும், ரூ.1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மதிப் புள்ள சுமார் 279 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான 4 இருசக்கர வாகனங்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 லேப்டாப்புகள் ஆகியவையும் மீட்கப்பட்டு கோர்ட்டு மூலம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

    மேற்கண்ட அதிரடி நட வடிக்கைகளை திறம்பட செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் லோகநாதன் பாராட்டினார்.

    • அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை, வியாசர்பாடி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகள் ரோகிணி (வயது25). மதுரவாயலில் உள்ள பிரபல எண்ணை நிறுவனத்தில் ஏரியா வனியோகஸ்தராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி அதனை ஒரு பையில் போட்டு மோட்டர் சைக்கிளின் முன்பகுதியில் தொங்க விட்டு இருந்தார். அதே பையில் தனது செல்போனையும் போட்டு இருந்தார். கோயம்பேடு காமராஜர் சாலை, லட்சுமி நகர் முதல் தெருவில் வந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்து பெட்ரோல் கேன் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று உடல் பருமனாக இருந்த ரோகிணியால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர் தீயில் சிக்கி உடல் கருகினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரோகினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல் கேனுடன் செல்போனை சேர்த்து வைத்திருந்தபோது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் கசிந்து இருந்த பெட்ரோலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவ,மாணவிகள் செல்போனை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 54 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

    தொடர்ந்து அமைச்சர் கூறும் ேபாது,

    படித்து கற்றுத்தேர்ந்த மாணவர்கள் நடிகர், நடிகைகள், ஜாதி, மதம் பின்பு செல்வதை தவிர்க்க வேண்டும். படிக்கும் போது பகுத்தறிவோடு படிக்க வேண்டும்.

    பெற்றோர்கள் உழைத்துக்கொ ண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களின் கனவை நினைவாக்குவதற்கு நாம் படித்து முன்னேற வேண்டும்.

    விழுப்புரத்திலிருந்து அரசுப்பள்ளியில் படித்த வீரமுத்துவேல், விஞ்ஞானியாகி சந்திராயன் 3 என்ற செயற்கைகோளினுடைய திட்ட இயக்குனராக பணியாற்றியவர்.

    விஞ்ஞானத்திலும் மற்ற தொழில்நுட்பத்திலும் வல்லரசு நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் நாம் உயர்ந்திருக்கிறோம் என்பதை ஒரு தமிழர் மீட்டுத்தந்திருக்கிறார்

    அதேபோல, ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் காத்துக்கிடக்கிறது.மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது உடல் நலத்திற்கு தீங்கானது.

    எங்கிருந்தாலும் நல்லவர்கள் வாழ்வார்கள் வாழ்ந்து பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். துன்பப்பட்டு தடைகளை தாண்டி முன்னேறி செல்லும் போது அந்த முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது உறுதியுடன் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சிகளில், டிஆர்ஓ செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, ஆர்டிஓ முருகேசன், அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர்

    ராஜேஸ்வரி, ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், பிடிஓக்கள்

    ஆயிஷாராணி, கோகுலகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×