search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனில் குறுஞ்செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள்
    X

    செல்போனில் குறுஞ்செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள்

    • குமரியில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
    • மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம்

    நாகர்கோவில் :

    கலைஞர் மகளிர் உரிமை த்தொகை திட்ட த்தின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்ட த்தை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 77 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களில் 4 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்ட த்திற்கு விண்ணப்பித்திரு ந்தனர்.

    இதில் 2 லட்சம் விண்ண ப்பங்களில் குறைபாடுகள் இருந்ததையடுத்து களப்பணியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொ ண்டனர். இதை த்தொட ர்ந்து தகுதியான பயனா ளிகள் பட்டியல் தேர்வு செய்யப்ப ட்டது.

    தகுதியான பயனாளிகள் குறித்த விபரங்கள் கடந்த 15-ந்தேதி முதல் செல்போ னில் குறுஞ்செ ய்தி மூல மாக அனுப்பப்பட்டு வருகி றது. ரூ.1000 உதவி தொகை க்கான குறுஞ்செய்திகள் நேற்றும் பலருக்கு வந்தது. இதை பார்த்து பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் சுமார் 70 சதவீதம் பேருக்கு உதவித்தொகை வந்திருப்ப தாக கூறப்படு கிறது.

    மீதமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. நிராகரிக்கப்பட்டதில் முக்கிய காரணம் அரசு அலுவலர்கள் மற்றும் பென்ஷன் திட்டத்தில் உதவி பெறுபவர்கள் விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. இருப்பினும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிரா கரிக்கப்பட்டவர்களு க்கான விண்ணப்பங்கள் எதற்கு நிராக ரிக்கப்பட்டது என்பது குறித்த விபரங்கள் செல்போனில் குறு ஞ்செய்தி மூலமாக இன்று முதல் அனுப்புவதற்கு ஏ ற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த குறைபாடுகளை கலைந்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை யடுத்து உதவித்தொகை கிடைக்காமல் இருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் குறுஞ்செய்தி எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறுஞ்செய்தி வந்தவுடன் அந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவல கத்திற்கு சென்று குறைபாடு களை சரி செய்து 30 நாட்களுக்குள் வழங்கினால் மீண்டும் கலைஞர் உரிமை த்தொகை திட்டத்தற்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, கிள்ளியூர், தோவாளை, கல்குளம், திருவட்டார் தாலுகா அலுவலகங்களிலும், நாகர்கோவில், தக்கலை ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களில் பொதுமக்கள் தங்களது குறைபாடுகளை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க லாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×