search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் கேன்"

    • அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை, வியாசர்பாடி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகள் ரோகிணி (வயது25). மதுரவாயலில் உள்ள பிரபல எண்ணை நிறுவனத்தில் ஏரியா வனியோகஸ்தராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி அதனை ஒரு பையில் போட்டு மோட்டர் சைக்கிளின் முன்பகுதியில் தொங்க விட்டு இருந்தார். அதே பையில் தனது செல்போனையும் போட்டு இருந்தார். கோயம்பேடு காமராஜர் சாலை, லட்சுமி நகர் முதல் தெருவில் வந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்து பெட்ரோல் கேன் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று உடல் பருமனாக இருந்த ரோகிணியால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர் தீயில் சிக்கி உடல் கருகினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரோகினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல் கேனுடன் செல்போனை சேர்த்து வைத்திருந்தபோது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் கசிந்து இருந்த பெட்ரோலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனு கொடுக்க வருபவர்களை பலத்த சோதனைக்கு பிறகே மனு கொடுக்கும் மையத்திற்கு அனுப்புவார்கள்
    • மூதாட்டி வைத்திருந்த பையை வாங்கி பார்த்தபோது, அதில் பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்தது.

    நாகர்கோவில் :

    வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவல கங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று மாவட்டத்தின் பல்ேவறு பகுதி மக்களும் மனு கொடுப்பது வழக்கம்.

    மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வரும் சிலர், தீக்குளிப்பது உள்ளிட்ட விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், மனு கொடுக்க வருபவர்களை பலத்த சோதனைக்கு பிறகே மனு கொடுக்கும் மையத்திற்கு அனுப்புவார்கள்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள், மனு கொடுக்க வருபவர்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.

    இன்று (திங்கட்கிழமை) என்பதால் காலையிலேயே பலரும் மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு வந்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து அவர்கள் வந்திருந்தனர். அவர்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பலத்த சோதனை செய்தனர்.

    அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், கையில் பையுடன் வந்தார். அவரை போலீசார் வழக்கம் போல் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தபோது, அதில் பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து மூதாட்டியை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் ரோஸ்லி என்பதும், காரங்காடு அருகே உள்ள மேல ஆலங்கோடு பகுதியை சேர்ந்த சூசை மிக்கேல் மனைவி என்பதும் தெரியவந்தது. மகனுக்கு எழுதிக்கொடுத்த சொத்தை ரத்து செய்வது தொடர்பாக மனு கொடுக்க வந்ததாக அவர் கூறினார். இது தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×