search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol cane"

    • அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை, வியாசர்பாடி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகள் ரோகிணி (வயது25). மதுரவாயலில் உள்ள பிரபல எண்ணை நிறுவனத்தில் ஏரியா வனியோகஸ்தராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி அதனை ஒரு பையில் போட்டு மோட்டர் சைக்கிளின் முன்பகுதியில் தொங்க விட்டு இருந்தார். அதே பையில் தனது செல்போனையும் போட்டு இருந்தார். கோயம்பேடு காமராஜர் சாலை, லட்சுமி நகர் முதல் தெருவில் வந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்து பெட்ரோல் கேன் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று உடல் பருமனாக இருந்த ரோகிணியால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர் தீயில் சிக்கி உடல் கருகினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரோகினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல் கேனுடன் செல்போனை சேர்த்து வைத்திருந்தபோது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் கசிந்து இருந்த பெட்ரோலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×