search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைமறியல்"

    • 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக குற்றச்சாட்டு
    • போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு

    சூலூர்

    சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பாக அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக தெரிகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

    இன்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பாப்பம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், குடி தண்ணீருக்காக நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். 40 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது.

    குடிதண்ணீருக்காக அதிக அளவில் பணத்தை செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து முறையான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

    இதனையடுத்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த போராட்டத்தால் 300க்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நின்றன.

    • மேல்மலையனூர் அருகே மழைநீர் கால்வாய் சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
    • அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தில் கீழண்டை தெரு உள்ளது. இப்பகுதியில் மழை பெய்தால் கால்வாய்மூலம் தண்ணீர் வெளியேறும்படி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு ஒரு பாலம் உயர்த்திக் கட்டியதாலும் சிலரது ஆக்கிரமிப்பாலும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது. அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேவனூர-கெங்கபுரம் சாலையில் இன்று காலை 10.15 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    மழைநீர் வீதியில் தேங்காதவாறு இருந்தது. தற்போது கீழண்டை தெரு ஆரம்பத்தில் ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கவில்லை இதனால் கடந்த சில நாட்களாக பெய்யும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது.மேலும் வீட்டின் உட்புறம் தண்ணீர் தேங்கியதால் இரவு முழுவதும் தூங்காமல் வீட்டில் தேங்கிய நீரை வெளியேற்றி வருகிறோம். மழைநீர் செல்லும் இடத்தில் சிலர் ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாய் அமைக்க முடியாத நிலை உள்ளது. இதை நாங்கள்அதிகாரிகளிடம் முறையிட்டும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

    ஊட்டி,

    குன்னூா் அருகே இந்திரா நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு போதிய கழிப்பறை வசதி கள் இல்லை. எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்திரா நகரில் நடைபாதை வசதி இல்லை. தடுப்புச் சுவா் கட்டப்படவில்லை. எனவே பொது மக்கள் ஆபத்தான நிலை யில் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குன்னூர் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி, குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில், காா்த்திக்,சிவா ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    இதனால் மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்கு வரத்த பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். எனவே இருத ரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்திருந்த வட்டாட்சியா் கனி சுந்தரம், நகராட்சி ஆணையா் ஏகராஜ் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினா். பின்னர் இந்திரா நகா் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை, 3 மாதங்களில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
    • கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குடிநீர் திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குளறுபடிகள் காரணமாக கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

    இதனால் ஆவேசம் அடையும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.அந்த வகையில் நேற்று ஆர். வேலூர் ஊராட்சியில் பூலாங்கிணறு குடிநீர் திட்டத்திற்கு வால்வு பொருத்துவதற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வால்வு பொருத்தக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சீரான முறையில் குடிநீர் வழங்குமாறும் தெரிவித்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை. பழைய பட்டியலில் உள்ள எண்ணிக்கைக்கு தகுந்தவாறு குடிநீர் வழங்குகிறார்கள்.அது மட்டுமின்றி குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள பழைய வால்வை அகற்றிவிட்டு அளவு சிறியதாக உள்ள வால்வை பொருத்துகிறார்கள்.

    இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன.

    இதில் 29-வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீ சபரி பாலாஜி நகர் பகுதியில் குடிநீர், சாக்கடை, தார் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக சரி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

    ஆனால் இதுவரை நகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இன்று காலை மேட்டுப்பாளையம்- குரும்பனூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், நகராட்சி பொறியாளர் சுகந்தி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாலை மறியலை கைவிட மறுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    காரமடை நகராட்சி 16-வது வார்டில் குளத்துப்பாளையம், முல்லை நகர் கொண்டசாமி நகர், பயணீர் காலணி ஆகிய பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், குப்பைகளை சேகரித்தல், குடிநீர் தொட்டியை சீரமைத்து புதுப்பித்தல், உப்பு தண்ணி குழாய்கள் புதுப்பித்தல், பொது சுகாதார வளாகத்தை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்ைகைகளை வலியுறுத்தி கேட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரமடை சிறுமுகை சாலையில் குளத்துப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பிரச்சினைகளுக்கு உட னடியாக தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காரமடை- சிறுமுகை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீரும் குறைவான அளவே வருவதால் 500-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து 3-வது மற்றும் 4-வது பைப் லைன் திட்டம் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வல்லநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த 1 மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் வல்லநாடு பஜார் பகுதியில் நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள், வாலிபர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ,சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோ உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் தொடர் மின்தடையை கண்டித்து இன்று காலை பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் வீரமரசன்பேட்டை துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள், வாலிபர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்தடையை கண்டித்தும், அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ,சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
    • இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    சுடுகாட்டு சாலையை உரியவர்களிடம் பேசி இடத்தை பெற்று அளந்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வலங்கைமானில் மண்டல வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் முதல் நிலைக் காவலர் கல்யாணசுந்தரம், ஆலங்குடி ரெவின்யு இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் நவீன், பாலசுப்ரமணியம் தாலுக்கா ஆபீஸ் அலுவலர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு ராஜா , ரங்கராஜன், மாவட்ட தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை.
    • பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பெள்ளேபாளையம் ஊராட்சி.

    இதில் மொத்தம் 13 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து இரும்பறை ஊராட்சியில் உள்ள சிட்டேபாளையம் நீரேற்று கிணற்றில் தண்ணீர் நிரப்பி அங்கு 3 அடுக்கு முறையில் தண்ணீரை சுத்திகரித்து அதன் பின் ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை என்றும், அருகே உள்ள குட்டை நீர் சிட்டேபாளையம் நீரேற்று நிலையத்தில் கலந்து பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து இன்று காலை பெள்ளேபாளையம் ஊராட்சியை சேர்ந்த வெள்ளிகுப்பம்பாளையம், எஸ்.ஆர்.எஸ்.நகர் தென்பொன்முடி, எலகம்பாளைய,ம் வடபகத்தூர், எஸ்.எஸ்.நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள சிறுமுகை-அன்னூர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் சிவக்குமார், அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்ஸ்பெக்டர் நித்யா திடீரென மறியலில் ஈடுபட்டிருந்த ஒருவரை பிடித்து இழுக்க முயற்சித்தார். இதனைப் பார்த்த சக பொதுமக்கள், இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் மறியல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் தொடர்ந்தது.

    • மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் மற்றும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி உலகுடையாம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை, காவல் உதவி ஆய்வாளர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம்-ராவுத்தநல்லூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஜோதி பணிபுரிந்தார்.
    • போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஜோதி. இவர் நேற்று முன்தினம் ஒரு வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இந்நிலையில் செஞ்சி டி.எஸ்.பி.அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இந்நிலையில் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டி. ஐ ஜி. பகலவன் உத்தரவின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    • திட்டக்குடி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    • புதிய குழாய், பழைய குழாய் இரண்டிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் கடந்த ஒரு வார காலமாக வழங்கப்படாமல் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் தற்போது மத்திய அரசின் புதிய ஜல் ஜீவன் இயக்கம் வாயிலாக 9 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தற்போது அனைத்து கிராமங்களிலும் புதிய குழாய் பதிப்பு நடைபெற்று வருகிறது. கீழ்ச்செருவாய் ஊராட்சியில் ஏற்கனவே ஊராட்சிமன்ற நீர்நிலை தேக்கதொட்டியிலிருந்து வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது புதிய குழாயில் இணைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் புதிய குழாய், பழைய குழாய் இரண்டிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் கடந்த ஒரு வார காலமாக வழங்கப்படாமல் உள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக குடிநீருக்கு சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் எங்களுக்கு தண்ணீர் வரவில்லை என ஊராட்சி மன்ற தலைவரிடம் கடந்த ஒரு வாரமாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் தொடர்ந்து திட்டக்குடி - ராமநத்தம் மாநில சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ண கொடி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களுக்கு விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் மத்திய அரசின் புதிய ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பழுப்பு பதித்து குடிநீர் வழங்குப்படும் என தெரிவித்திருந்தனர்.

    தண்ணீர் வராததால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அவர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக பேசிக்கொண்டு 10-க்கும் மேற்பட்ட ஆண்களை வைத்து மிரட்டுவதாகவும் நாங்கள் பெண்கள் என்பதால் எங்கள் தரப்பு ஆண்களுக்கும் அவர்களுக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிகாரிகள் தலையிட்டு சுமுகத் தீர்வு கண்டு தொடர்ந்து குடிநீர் முறையாக வழங்க கோரிக்கை விடுத்தனர்.

    ×