search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advocates"

    • வக்கீல்கள் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
    • இ-பைலிங் நடைமுறைக்கு கால அவகாசம் வழங்கக்கோரி

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழுக்கூட்டம் அதன் தலைவர் மணிவண்ணன் தலைமையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் திரளான வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விபத்து இழப்பீடு கோரும் மனு மற்றும் இந்து திருமணம் தொடர்பான மனு உள்பட அனைத்து மனுக்களும் ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போதிய காலஅவகாசம் அளிக்காமலும், இந்த நடைமுறையில் உள்ள நிறை மற்றும் குறைகள் குறித்து வக்கீல்களிடம் கருத்து கேட்காமலும் நீதிமன்றத்தில் இதற்கான முழுமையாக அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காமலும், ஆன்லைன் மூலம் இ-பைலிங் முறையை அவசரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதால், வழக்கு நடத்துபவர்களும், வக்கீல்களும் கடுமையான பாதிக்கப்படுவார்கள். எனவே உரிய கால அவகாசம் வழங்கி இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், இதற்கான முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் வரை முன்பு இருந்த நடைமுறையையே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்தும் விலகி இருப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் முறையை திரும்ப பெற வேண்டும்.
    • விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டன.

    கும்பகோணம்:

    கோர்ட்டுகளில் இ-பை லிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் முறையை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்க ணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் செல்வம், மூத்த வக்கீல் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மூத்த வக்கீல்கள் சக்கரபாணி, வைத்திய நாதன், முன்னாள் சங்க தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் ரவிச்சந்தி ரன், பொருளாளர் ராஜசீனி வாசன், சசிகலா, பானுமதி, அனுராதா உள்பட ஏராள மான வக்கீல்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் நேற்று கோர்ட்டில் விசார ணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டன.

    • கார் மோதி வக்கீல் படுகாயம் அடைந்தார்
    • பெட்ரோல் இல்லாமல் நின்ற போது சம்பவம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கோடாலி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 56). இவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் அரியலூர் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணகெதி அருகே பெட்ரோல் இல்லாமல் நின்றது. அப்போது அந்த வழியாக தருமபுரி மாவட்டம் கத்திரிப்பெட்டி கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக சிங்காரவேலன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிங்காரவேலனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக சக்தி மீது உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    சேலம்:

    குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்து வதற்கான நடவடிக்கை களில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    உண்ணாவிரதம்

    அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். செய லாளர் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார். இதில் கூட்ட மைப்பின் துணைத் தலை வர்கள் மூர்த்தி, பொன்ர மணி, இமயவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம் மாவட்ட வழக்க றிஞர்கள் சங்க செயலாளர் முத்தமிழ் செல்வன் கூறுகை யில், குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கி றோம். மேலும் அந்த திருத்தத்தை கைவிடா விட்டால் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    • போட்டியில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர்.
    • சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம், கோப்பையை வென்றது.

    நெல்லை:

    மாநில அளவிலான வக்கீல்கள் இடையேயான கபடி போட்டி தூத்துக்குடி தருவைகுளம் மைதானத்தில் நடந்தது. இதில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த போட்டிகளில் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க அணி முதல் பரிசு ரூ.75 ஆயிரத்தையும், கோப்பையையும் தட்டிச்சென்றது. சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம் மற்றும் கோப்பையும், தூத்துக்குடி அணி 3-வது பரிசாக ரூ.45 ஆயிரமும் பெற்றன. விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் அமல் ராஜ், துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஷ் பிரபு, தூத்துக்குடி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நெல்லை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், மூத்த வக்கீல் பாலகணேசன், செந்தில்குமார், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் வக்கீல்கள் லட்சு மணன் ரமேஷ், மகேஷ், மகாராஜன், முத்துராஜ், கதிரவன், அனந்த கிருஷ்ணன், எட்வின் துரை ஆகியோர் பங்கேற்றனர்.

    • சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கடந்த 2 நாட்களாக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பர்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 3-வது நாளாகவும் பணிகளை புறக்கணித்து ஒருங்கிணைந்த கோர்ட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றி அமைத்து, மத்திய அரசு புதிதாக தோற்றுவித்த புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடியிலுள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாழப்பாடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரவியம், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சீனிவாசன் மற்றும் வக்கீல்கள், மத்திய அரசின் புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    • தஞ்சை கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.
    • சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று 2-வது நாளாக தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அந்த பேரணி ராமநாதன் ரவுண்டானா வழியாக சென்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு முடிவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இதை கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    • இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
    • மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பண்ருட்டி அனைத்து வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி வக்கீல்கள் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • ஆலங்குடி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    புதுக்கோட்டை

    ஆலங்குடியில் உள்ள வக்கீல்கள் மாவட்ட நீதிபதிகளை கண்டித்து ஆலங்குடி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆலங்குடி வக்கீல்கள் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, சார்பு நீதிபதி (கூடுதல்), மாவட்ட நீதிபதிகள், இவர்களுக்கு வருகின்ற குற்ற வழக்குகளுக்கு எதிரிகளிடம் இருந்து முன் தொகையாக குறிப்பிட்ட அளவு பணம் கட்ட வேண்டும் என உத்தரவு விடுகின்றனர். குற்றவாளிகளை பிணையில் விடும்போது அவர்கள் அந்தந்த பகுதிகளில் கையெழுத்து போடவிடாமல், மாவட்டம் விட்டு மாவட்டமும், தாலுகா விட்டு தாலுகாவும் மாற்றம் செய்யப்படுகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள நீதிபதி காலிபணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். புதுக்கோட்டை கூடுதல் மகிளா கோர்ட்டு புதுக்கோட்டை தாலுகா அதிகார எல்லை வரம்பிலிருந்து புதுக்கோட்டை மாவட்ட அதிகார எல்லைவரை நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் வக்கீல்களுக்கு உரிய மரியாதை அளிக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இன்றி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதால் ஆலங்குடி கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    • போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்து புறக்கணிப்பு.
    • 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவை யும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.

    • வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கையை நிறைவேற்ற கோரி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் இருப்பதால் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஒன்றை பெரம்பலூரில் அமைத்திட வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்கள் 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

    ×